MNM Website Hacked: மக்கள் நீதி மய்யத்தின் அதிகாரபூர்வ இணையதளம் முடக்கம்; ஹேக்கர்களுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என ட்வீட்..!
MNM Website Hacked: மக்கள் நீதி மய்யத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கம் முடக்கப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MNM Website Hacked: மக்கள் நீதி மய்யத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கம் முடக்கப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வ வலைதளம் விஷமிகளால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. ஜனநாயக சக்திகளை ஒடுக்கியே பழக்கப்பட்ட ஈனர்களின் இழிசெயல்களுக்கு அஞ்சாமல் தக்க பதிலடி கொடுப்போம்.
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) January 27, 2023
அந்த டிவிட்டர் பதிவில், ”மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வ வலைதளம் விஷமிகளால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. ஜனநாயக சக்திகளை ஒடுக்கியே பழக்கப்பட்ட ஈனர்களின் இழிசெயல்களுக்கு அஞ்சாமல் தக்க பதிலடி கொடுப்போம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கும் என கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கப்படும் என கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெற்றிக்கு மக்கள் நீதி மய்யம் பாடுபடும் என தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக கமல் ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் “நடைபெற இருக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக ஆ. அருணாச்சலம் MA.,BL., அவர்களை நியமித்துள்ளேன்.
அவருக்கு கட்சியின் அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களும் சிறப்பான ஒத்துழைப்பை நல்கி, மக்கள் நீதி மய்யத்தின் ஆதரவைப் பெற்ற மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக இளங்கோவன் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, முக்கிய அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து இளங்கோவன் ஆதரவு கேட்டு வந்தார். அந்த வகையில், மக்கள் நீதி மய்யத்தின் ஆதரவை கோரி கமலை இளங்கோவன் 23ஆம் தேதி சந்தித்தார். சந்திப்பு நடைபெற்று இரண்டு நாட்களுக்கு பின் மக்கள் நீதி மய்யம் சார்பாக ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.
காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்ற திருமகன் ஈவேரா, மாரடைப்பு காரணமாக காலமானதால், அந்தத்தொகுதிக்கு தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் 31-ம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது. பிப்ரவரி 27-ம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Before You Go
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
ட்ரெண்டிங் செய்திகள்





















