மேலும் அறிய

கடவுள்தான் விஐபி; கோயில்களில் எதற்கு சிறப்பு தரிசனம் ? - நீதிபதி வேதனை

விஐபிக்கள் எனும் பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்களை கடவுள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். 

திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திருசுந்தரராக பணியாற்றும் சீதாராமன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை  பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பாக இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது, கோவிலின் கூட்டத்தை முறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், 60 காவலர்கள் இருந்த இடத்தில் தற்போது 30 காவலர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் தரப்பில், "30 ஆயுதப்படை காவல்துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர் திருவிழா காலங்களில் கூடுதலாக காவல்துறையினர் நியமிக்கப்படுவார்கள். கோயில் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து நீதிபதி அதிரடி கேள்விகளை எழுப்பினர். அதில், "தற்போது செய்துள்ள ஏற்பாடுகள் கோயில் நடைமுறைகளை அமைதியான முறையில் கொண்டுசெல்ல போதுமானதாக உள்ளதா? என்றும், விஐபி தரிசனம் மூலம் தேவை இல்லாத பல பிரச்சினைகள் எழுகின்றன. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். 

 விஐபிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள், அவர்களது பொறுப்புகானதே தவிர, தனிநபருக்கானது அல்ல. பொறுப்புக்கான மரியாதை வழங்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. விஐபி-களின் குடும்பத்தினர் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். அவர்களது உறவினர்களை அனுமதிக்கக் கூடாது.

மத நம்பிக்கை உள்ளவர்களே கோவிலுக்கு வருகின்றனர். கோவிலை பொறுத்தவரை கடவுள் மட்டுமே விஐபி. விஐபிக்கள் எனும் பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்களை கடவுள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார். கோவிலின் கட்டளைதாரர்கள் 10 நிமிடம் மட்டுமே சிறப்பு தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும்.

திருச்சுந்தரர்கள் பக்தர்களை தகாத வார்த்தையில் பேசுவதாக தொடர்ந்து புகார் வருகிறது. இது போன்ற சூழலில் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவிலில் வேலை செய்யும் காவல் துறையினர், பணியாளர்கள், பூசாரிகள், திருச்சுந்தரர்கள் பக்தர்களை உரிய மரியாதையுடன் நடத்த வேண்டும்.

காவல்துறையினர், வருவாய்த்துறையினர், இந்து அறநிலையத் துறையினர் சிறப்பு தரிசனம் பெற அனுமதிக்க கூடாது. அவர்களும் பக்தர்களைப் போன்றே நடத்தப்பட வேண்டும். கோவிலின் உள்ளேயும், வெளியேயும் போதுமான அளவு குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும்.

திருச்செந்தூர் கோவில் கடற்கரை முறையாக, தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும். திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு ஏதுவாக வழி பலகைகள் வைக்கப்பட வேண்டும். திருச்செந்தூர் கோவிலின் நாழிக்கிணறு பகுதி முறையாக பராமரிக்கப்பட வேண்டும். அங்கு உரிய உடைமாற்றும் அறை வசதி போதுமான அளவில் செய்து தரப்பட வேண்டும்.

திருச்செந்தூர் கோவிலின் வெளியே உள்ள தெருக்கள் அனைத்தையும் சுத்தமாக பராமரிக்க திருச்செந்தூர் நகராட்சி ஆணையர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குப்பைகள் தினந்தோறும் அகற்றப்படவேண்டும்.  கோவிலின் உள்ளேயும், வெளியேயும் உள்ள பகுதிகள் சுத்தமாக இருப்பதை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் திருச்செந்தூர் நகராட்சி ஆணையர் உறுதிப்படுத்த வேண்டும் என்றார். 

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், குடிநீர் வசதி செய்து தரப்பட வேண்டும், அன்னதான கூடம் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். திருச்செந்தூர் கோவிலில் சிறப்பு அனுமதி சீட்டினை முறைகேடாக பயன்படுத்தும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் திருச்செந்தூர் கோவிலில் 40 ஆயுதப்படை காவல்துறையினரை நியமிக்க வேண்டும். அவ்வபோது சூழ்நிலைகளைப் பொறுத்து காவல்துறையினரை அதிகப்படுத்திக் கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அனைத்து உத்தரவுகளையும் 3 வாரத்தில் நடைமுறைப்படுத்த பட வேண்டும். உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கினை ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Chennai Indigo Flight Issue: என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Hero Splendor+ vs Hero HF Deluxe: தினசரி பயன்பாட்டிற்கு எந்த பைக் சிறந்தது.? வாங்குறதுக்கு முன்னாடி விவரங்கள தெரிஞ்சுக்கோங்க
தினசரி பயன்பாட்டிற்கு எந்த பைக் சிறந்தது.? வாங்குறதுக்கு முன்னாடி விவரங்கள தெரிஞ்சுக்கோங்க
Kohli Rohit: அடுத்த கோலி, ரோகித் தரிசனம் எப்போது? விஜய் ஹசாரே திருவிழா? உள்ளூரிலா? வெளியூரிலா?
Kohli Rohit: அடுத்த கோலி, ரோகித் தரிசனம் எப்போது? விஜய் ஹசாரே திருவிழா? உள்ளூரிலா? வெளியூரிலா?
ABP Premium

வீடியோ

Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Indigo Flight Issue: என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Hero Splendor+ vs Hero HF Deluxe: தினசரி பயன்பாட்டிற்கு எந்த பைக் சிறந்தது.? வாங்குறதுக்கு முன்னாடி விவரங்கள தெரிஞ்சுக்கோங்க
தினசரி பயன்பாட்டிற்கு எந்த பைக் சிறந்தது.? வாங்குறதுக்கு முன்னாடி விவரங்கள தெரிஞ்சுக்கோங்க
Kohli Rohit: அடுத்த கோலி, ரோகித் தரிசனம் எப்போது? விஜய் ஹசாரே திருவிழா? உள்ளூரிலா? வெளியூரிலா?
Kohli Rohit: அடுத்த கோலி, ரோகித் தரிசனம் எப்போது? விஜய் ஹசாரே திருவிழா? உள்ளூரிலா? வெளியூரிலா?
Justin Trudeau Katy Perry: உறவை உலகுக்கு அறிவித்த பிரபல ஜோடி; வலைதள பதிவின் மூலம் வைரலான ஜஸ்டின் ட்ரூடோ-கேட்டி பெர்ரி
உறவை உலகுக்கு அறிவித்த பிரபல ஜோடி; வலைதள பதிவின் மூலம் வைரலான ஜஸ்டின் ட்ரூடோ-கேட்டி பெர்ரி
எச் ராஜாவையெல்லாம் கண்டுக்கவே கூடாது... தமிழக அரசியலில் அவர் ஒரு சாபக்கேடு- விளாசிய சேகர்பாபு
எச் ராஜாவையெல்லாம் கண்டுக்கவே கூடாது... தமிழக அரசியலில் அவர் ஒரு சாபக்கேடு- விளாசிய சேகர்பாபு
Ola S1 Pro: சிங்கிள் சார்ஜில் 320 கிலோமீட்டர் மைலேஜ்.. Ola S1 Pro விலை, தரமும் எப்படி?
Ola S1 Pro: சிங்கிள் சார்ஜில் 320 கிலோமீட்டர் மைலேஜ்.. Ola S1 Pro விலை, தரமும் எப்படி?
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
Embed widget