மேலும் அறிய

Madras HC on TN Gov: மாற்றுத்திறனாளிகளுக்கு பஸ்சில் ஏன் வசதியில்லை?- அரசுக்கு ஐகோர்ட் கேள்வி!

2016ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், அனைத்து அரசுப் பேருந்துகளிலும் மாற்றுத் திறனாளிகள் ஏறி, இறங்க வசதியாக சாய்தள படி வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.

பேருந்துகளில் ஏன் மாற்றுத் திறனாளிகளுகாக சாய்தள வசதி ஏற்படுத்தப்படவில்லை என அரசுக்கு ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.அரசுப் பேருந்துகளில் ஏன் மாற்றுத் திறனாளிகளுக்காக சாய்தள வசதி ஏற்படுத்தப்படவில்லை என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், அனைத்து அரசுப் பேருந்துகளிலும் மாற்றுத் திறனாளிகள் ஏறி, இறங்க வசதியாக சாய்தள படி வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. 


இந்நிலையில், அரசுப் பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதி ஏற்படுத்தித் தரக் கோரி வைஷ்ணவி ஜெயகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி அடங்கிய முதன்மை அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனு தாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.யோகேஸ்வரன், "2016 ஆம் ஆண்டே உயர் நீதிமன்றம் அரசுப் பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு வசதியாக சாய்தளம் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அனைத்துத் தடங்களில் செல்லும் பேருந்துகளிலும் இந்த வசதி செய்து கொடுக்கப்பட வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அரசு மிகக் குறைந்த அளவிலேயே மாற்றுத் திறனாளிகளுக்கான அத்தகைய சாய்தள படி வசதி கொண்ட பேருந்துகளை வாங்கியுள்ளது" என்றார்.
இந்த வழக்கில், சமரச முயற்சிக்காக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் மோகன் கூறுகையில், "அரசு புதிதாக கொள்முதல் செய்யும் எந்தப் பேருந்திலும் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதி இல்லை. 2016 ஆம் ஆண்டு தொடங்கி இதுவரை தமிழக அரசு 4000 பேருந்துகள் வாங்கியுள்ளது. ஆனால் எந்த ஒரு பேருந்திலும் சென்னை உயர் நீதிமன்றம் வழிகாட்டுதல் பின்பற்றப்படவில்லை" என்று கூறினார்.
மாநகரப் பேருந்து போக்குவரத்துக் கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அத்தைகை பேருந்துகள் மிகவும் விலை உயர்ந்ததாக உள்ளன. நாம் ஏழை நாட்டில் வசிக்கிறோம். பெருந்தொற்று நம்மை இன்னும் ஏழையாக்கி உள்ளது என்று கூறினார். அதற்கு தலைமை நீதிபதி நம் ஊரில் எத்தனை சட்டமன்ற உறுப்பினர்கள் ஏழையாக இருக்கின்றனர் எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும் தலைமை நீதிபதி கூறுகையில், "மாநில அரசு உயர் நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளது தெளிவாகத் தெரிகிறது. மாநில அரசு வாங்கும் அனைத்துப் பேருந்துகளுமே மாற்றுத் திறனாளிகளுக்கும் உகந்ததாக இருக்க வேண்டும் என்பதை அரசுக்கு இந்த நீதிமன்றம் நினைவு படுத்துகிறது. ஏதோ ஒன்றிரண்டு தடங்களில் மட்டும் குறைந்த சதவீதத்தில் அத்தகைய பேருந்துகளை இயக்கினால் அது போதுமானதாக இருக்காது" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget