மேலும் அறிய

Lok Sabha Election 2024: மக்களவைத் தேர்தல்! பாதுகாப்பு பணிக்காக தமிழ்நாட்டிற்கு வந்த துணை ராணுவம்!

Lok Sabha Election 2024: மக்களவைத் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவத்தைச் சேர்ந்த தமிழ்நாட்டின் கோவை, சென்னைக்கு வந்துள்ளனர்.

நாடு முழுவதும் ஓரிரு மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும், அதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

மக்களவைத் தேர்தல் பாதுகாப்பு:

இந்திய தேர்தல் ஆணையமும் தேர்தல் அதிகாரிகள், வாக்கு இயந்திரங்கள் உள்ளிட்ட பணிகளில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. மக்களவைத் தேர்தல் பாதுகாப்பு பணிகளில் துணை ராணுவ படையினர் ஈடுபடுவது வழக்கம். ஒவ்வொரு மாநிலத்திற்கும் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணிக்காக சென்று கொண்டிருக்கின்றனர்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் பணிக்காக 25 கம்பெனியைச் சேர்ந்த துணை ராணுவ பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்று ஏற்கனவே தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாப் சாஹூ தெரிவித்து இருந்தார்.

தமிழகம் வந்த துணை ராணுவம்:

இதையடுத்து, தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் துணை ராணுவ படையினர் வந்து கொண்டிருக்கின்றனர். முதற்கட்டமாக நேற்று 15 கம்பெனியைச் சேர்ந்த துணை ராணுவ படையினர் வந்தனர். சென்னைக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக மங்களூரில் இருந்து ரயில் மூலமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தனர். சென்னை வந்த துணை ராணுவத்தினர் புதுப்பேட்டையில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்றைய நிலவரப்படி, சென்னைக்கு 2 கம்பெனி துணை ராணுவ படையினரும், ஆவடி மற்றும் தாம்பரத்திற்கு 1 கம்பெனி துணை ராணுவத்தினரும், கோவைக்கு 3 கம்பெனி துணை ராணுவத்தினரும் என நேற்று வரை 7 கம்பெனியினரும் வந்துள்ளனர். இன்று 8 கம்பெனி துணை ராணுவத்தினரும் பங்கேற்றுள்ளனர்.

10 கம்பெனிகள்:

தமிழ்நாட்டிற்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள மீதமுள்ள 10 கம்பெனி துணை ராணுவத்தினரும் வரும் 7-ம் தேதி ( வியாழக்கிழமை) தமிழ்நாடு வர இருக்கின்றனர். பாதுகாப்பு பணிக்காக தமிழ்நாட்டிற்கு வந்துள்ள பாதுகாப்பு படையினர், வாக்குப்பதிவு முடிந்த பிறகே மீண்டும் அவர்களது பட்டாலியனுக்கு திரும்புவார்கள். ஒவ்வொரு கம்பெனியிலும் 90 வீரர்கள் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த துணை ராணுவ பாதுகாப்பு படையினர் பதற்றம் நிறைந்த பகுதி உள்பட மக்களவைத் தேர்தலில் மிக முக்கியமான இடங்களில் பாதுகாப்பு பணியில் ஆயுதம் ஏந்தி ஈடுபடுவார்கள். தமிழ்நாட்டில் பதற்றம் நிறைந்த பகுதிகள் பட்டியலை இதுவரை தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை. அந்த பட்டியல் வெளியான பிறகு அந்த பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். அதுபோன்ற பகுதிகளில் துணை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். இவர்களுடன் பாதுகாப்பு பணியில் தமிழ்நாடு போலீசாரும் ஈடுபடுவார்கள். வட இந்தியாவில் பல மாநிலங்களில் உள்ள பகுதிகள் பதற்றம் நிறைந்த பகுதிகள் என்பதால் அங்கு கூடுதலாக துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 

மேலும் படிக்க: PM Modi: ”I.N.D.I.A. கூட்டணி தலைவர்கள் 3 குரங்குகளை போன்றுதான்..” : பிரதமர் மோடி கடும் விமர்சனம்

மேலும் படிக்க: Chennai Metro Rail: அதிக பயணிகளை ஈர்க்கும் சென்னை மெட்ரோ! குவியும் பயணிகள், நீளும் சேவைகள் - பிப்ரவரியில் எவ்வளவு பேர்?

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
ABP Premium

வீடியோ

Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Ramadoss Vs Anbumani: “நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
“நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
விஜய்க்காக ஒட்டுமொத்தமாக களத்தில் இறங்கிய காங்கிரஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
விஜய்க்காக ஒட்டுமொத்தமாக களத்தில் இறங்கிய காங்கிரஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
Embed widget