மேலும் அறிய

Lok Sabha Election 2024: மக்களவைத் தேர்தல்! பாதுகாப்பு பணிக்காக தமிழ்நாட்டிற்கு வந்த துணை ராணுவம்!

Lok Sabha Election 2024: மக்களவைத் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவத்தைச் சேர்ந்த தமிழ்நாட்டின் கோவை, சென்னைக்கு வந்துள்ளனர்.

நாடு முழுவதும் ஓரிரு மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும், அதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

மக்களவைத் தேர்தல் பாதுகாப்பு:

இந்திய தேர்தல் ஆணையமும் தேர்தல் அதிகாரிகள், வாக்கு இயந்திரங்கள் உள்ளிட்ட பணிகளில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. மக்களவைத் தேர்தல் பாதுகாப்பு பணிகளில் துணை ராணுவ படையினர் ஈடுபடுவது வழக்கம். ஒவ்வொரு மாநிலத்திற்கும் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணிக்காக சென்று கொண்டிருக்கின்றனர்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் பணிக்காக 25 கம்பெனியைச் சேர்ந்த துணை ராணுவ பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்று ஏற்கனவே தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாப் சாஹூ தெரிவித்து இருந்தார்.

தமிழகம் வந்த துணை ராணுவம்:

இதையடுத்து, தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் துணை ராணுவ படையினர் வந்து கொண்டிருக்கின்றனர். முதற்கட்டமாக நேற்று 15 கம்பெனியைச் சேர்ந்த துணை ராணுவ படையினர் வந்தனர். சென்னைக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக மங்களூரில் இருந்து ரயில் மூலமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தனர். சென்னை வந்த துணை ராணுவத்தினர் புதுப்பேட்டையில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்றைய நிலவரப்படி, சென்னைக்கு 2 கம்பெனி துணை ராணுவ படையினரும், ஆவடி மற்றும் தாம்பரத்திற்கு 1 கம்பெனி துணை ராணுவத்தினரும், கோவைக்கு 3 கம்பெனி துணை ராணுவத்தினரும் என நேற்று வரை 7 கம்பெனியினரும் வந்துள்ளனர். இன்று 8 கம்பெனி துணை ராணுவத்தினரும் பங்கேற்றுள்ளனர்.

10 கம்பெனிகள்:

தமிழ்நாட்டிற்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள மீதமுள்ள 10 கம்பெனி துணை ராணுவத்தினரும் வரும் 7-ம் தேதி ( வியாழக்கிழமை) தமிழ்நாடு வர இருக்கின்றனர். பாதுகாப்பு பணிக்காக தமிழ்நாட்டிற்கு வந்துள்ள பாதுகாப்பு படையினர், வாக்குப்பதிவு முடிந்த பிறகே மீண்டும் அவர்களது பட்டாலியனுக்கு திரும்புவார்கள். ஒவ்வொரு கம்பெனியிலும் 90 வீரர்கள் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த துணை ராணுவ பாதுகாப்பு படையினர் பதற்றம் நிறைந்த பகுதி உள்பட மக்களவைத் தேர்தலில் மிக முக்கியமான இடங்களில் பாதுகாப்பு பணியில் ஆயுதம் ஏந்தி ஈடுபடுவார்கள். தமிழ்நாட்டில் பதற்றம் நிறைந்த பகுதிகள் பட்டியலை இதுவரை தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை. அந்த பட்டியல் வெளியான பிறகு அந்த பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். அதுபோன்ற பகுதிகளில் துணை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். இவர்களுடன் பாதுகாப்பு பணியில் தமிழ்நாடு போலீசாரும் ஈடுபடுவார்கள். வட இந்தியாவில் பல மாநிலங்களில் உள்ள பகுதிகள் பதற்றம் நிறைந்த பகுதிகள் என்பதால் அங்கு கூடுதலாக துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 

மேலும் படிக்க: PM Modi: ”I.N.D.I.A. கூட்டணி தலைவர்கள் 3 குரங்குகளை போன்றுதான்..” : பிரதமர் மோடி கடும் விமர்சனம்

மேலும் படிக்க: Chennai Metro Rail: அதிக பயணிகளை ஈர்க்கும் சென்னை மெட்ரோ! குவியும் பயணிகள், நீளும் சேவைகள் - பிப்ரவரியில் எவ்வளவு பேர்?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget