மேலும் அறிய

குடியரசு தின விழாவில் மது விற்பனை அமோகம் - கரூரில் 1006 மதுபாட்டில் பறிமுதல்

காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரன்பேரில் கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற கள்ள சந்தை மது சோதனையில் 1006 மதுபாட்டில் பறிமுதல் செய்யப்பட்ட நிகழ்வு பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் 1006 மதுபான பாட்டில்கள் பறிமுதல் 83 பேர் கைது.

கரூர் மாவட்டம் முழுவதும் குடியரசு தினத்தை முன்னிட்டு அரசு மதுபான கடைகளில் விற்பனைக்கு அரசு தடை விதித்திருந்தது. இதன்படி கரூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனையை கட்டுப்படுத்த வேண்டி மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

 


குடியரசு தின விழாவில் மது விற்பனை அமோகம் - கரூரில் 1006 மதுபாட்டில் பறிமுதல்

சோதனையில் 83 வழக்குகள் பதியப்பட்டு 83 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 1006 மதுபான பாட்டில்களும் ஒரு பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், சட்டவிரோதமாக தென்னை மரத்திலிருந்து 20 லிட்டர் கள்ளு விற்றதாக இரண்டு நபர்களையும் போலீசார் கைது செய்தனர் அரசு உத்தரவை மீறி மது விற்பனை செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுவதோடு சட்ட விரோதமாக மது விற்பனை குறித்து பொதுமக்கள் மாவட்ட எஸ்பி அலுவலக எண்ணில் (04324 - 296299) தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

 


குடியரசு தின விழாவில் மது விற்பனை அமோகம் - கரூரில் 1006 மதுபாட்டில் பறிமுதல்

கரூர் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா தலைமையிலான போலீசார் கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தும்பிவாடி பகுதியைச் சேர்ந்த அரங்கநாதன் வயது 61, பள்ளப்பாளையத்தை சேர்ந்த வெள்ளைய தேவன் வயது 62, திருவாடுதுறையைச் சேர்ந்த பிரேம்குமார் வயது 26, பால்ராஜபுரத்தைச் சேர்ந்த சண்முகவேல் வயது 51, உடையாபட்டியை சேர்ந்த தங்கதுரை வயது 49 ஆகிய 5 பேரும் பல்வேறு இடங்களில் மது விற்று கொண்டிருந்தனர். இதை அடுத்து ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 37 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

 


குடியரசு தின விழாவில் மது விற்பனை அமோகம் - கரூரில் 1006 மதுபாட்டில் பறிமுதல்

இதே போல் குளித்தலை அருகே உள்ள ஈச்சம்பட்டி, வாலாந்தூர் கருங்கல்பள்ளி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக குளித்தலை போலீசருக்கு தகவல் வந்தது. அதன் பெயரில் அங்கு சென்ற போலீசார் ஈச்சம்பட்டி பகுதியில் இனாம் கரூர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் வயது 42, வாலாந்தூர் பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ் வயது 55, கருங்கல்பள்ளியை சேர்ந்த ஆகாஷ் வயது 21 ஆகிய மூன்று பேரும் மது விற்று கொண்டிருந்தனர். இதை அடுத்து மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து தளம் ஐந்து மதுபாட்டில்கள் வீதம் மொத்தம் 15 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதே போல் நொய்யல் அருகே மரவாபாளையம் பஸ் நிறுத்தம் அருகே குளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் வயது 44 என்பவர் மது விற்று கொண்டிருந்தார். அவரை வேலாயுதம்பாளையம் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த ஐந்து மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

 


குடியரசு தின விழாவில் மது விற்பனை அமோகம் - கரூரில் 1006 மதுபாட்டில் பறிமுதல்

 

கரூர் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா தலைமையிலான போலீசார் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர் அப்போது கரூர் நல்லரான் பட்டியைச் சேர்ந்த தங்கதுரை வயது 45 ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த செந்தில்குமார் வயது 40 மங்களத்தை சேர்ந்த கருப்புசாமி வயது 31 மன்மங்கலத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி வயது 31 சிவகங்கை சேர்ந்த பாலகிருஷ்ணன் வயது 33 ஆகிய ஐந்து பேரும் அது வெற்றி கொண்டிருந்தனர் இதை அடுத்து ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர் மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 51 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADINGAyodhya Ram Temple  rain water leakage | ”அய்யோ ராமா”அலரும் அயோத்தி அர்ச்சகர் கோவில் கூரையின் நிலைAccident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Indian 2 Trailer Review:
Indian 2 Trailer Review: "காந்திய வழியில் நீங்க! நேதாஜி வழியில் நான்" எப்படி இருக்கு இந்தியன் 2 ட்ரெயிலர்?
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
Indian 2:
Indian 2: "நான்கு நாட்கள் கயிற்றில் தொங்கிய கமல்" பிரமித்த இயக்குனர் ஷங்கர்!
Embed widget