Tasmac: பாட்டிலுக்கு பத்து ரூபா.. இன்னும் 10 நாட்களில் தீர்வு.. டாஸ்மாக் ஊழியர் சொன்ன தகவல்!
டாஸ்மாக்கில் மதுபாட்டிலுக்கு அதன் அடக்கவிலையை விட கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவது பெரும் பிரச்னையாக வெடித்துள்ளது. முந்தைய திமுக அரசில் இது கட்டாயமாக வசூலிக்கப்பட்ட நிலையில், தவெக அரசு வந்த பிறகும் அது மாறவில்லை

டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வாங்குவது தொடர்பான பிரச்னை வெடித்துள்ள நிலையில் இன்னும் 10 நாட்களில் நிலைமை சரியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
விஸ்வரூபம் எடுத்த டாஸ்மாக் பிரச்னை
தமிழ்நாட்டில் தவெக அரசு பொறுப்பேற்று ஒரு மாதத்தை நெருங்கியுள்ள நிலையில் நாள்தோறும் ஏகப்பட்ட பிரச்னைகள் முதலமைச்சர் விஜய்க்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. இருந்தாலும் அத்தனைப் பிரச்னைகளையும் சமாளிக்கும் வகையில் தவெக நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் வருவாய் மூலங்களில் முதன்மையானதாக உள்ள டாஸ்மாக்கில் நடக்கும் பிரச்னைகளை தலைசுற்ற வைக்கிறது.
போதையில்லா தமிழகம் என்ற கொள்கையோடு செயல்படும் தவெக அரசு முதற்கட்டமாக 717 டாஸ்மாக் கடைகளை மூடியுள்ளது. போதைப்பொருட்களின் புழக்கத்தைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேசமயம் டாஸ்மாக்கில் மதுபாட்டிலுக்கு அதன் அடக்கவிலையை விட கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவது பெரும் பிரச்னையாக வெடித்துள்ளது. முந்தைய திமுக அரசில் இது கட்டாயமாக வசூலிக்கப்பட்ட நிலையில், தவெக அரசு வந்த பிறகும் அது மாறவில்லை என மதுபிரியர்கள் குமுறியுள்ளனர்.
அமைச்சர் விக்னேஷ் கடும் எச்சரிக்கை
இந்த நிலையில் மதுபாட்டில்களால் ஆபத்து ஏற்படுவதை சுட்டிக்காட்டி விற்பனை செய்யும்போது பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காலி பாட்டில்களை கொடுக்கும்போது அந்த ரூ.10 திருப்பி அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் டாஸ்மாக் கடைகளில் ரூ.210க்கு விற்பனை செய்யப்படும் ஒரு மதுபாட்டிலுக்கு நீதிமன்றம் சொன்ன டெபாசிட் தொகை ரூ.10 தாண்டி, கூடுதலாக இன்னொரு ரூ.10 வசூலிக்கப்படுகிறது. இதனால் மதுபிரியர்கள் ரூ.230 கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
இதுதொடர்பாக பேசிய மதுவிலக்குத்துறை அமைச்சர் விக்னேஷ், “மதுபாட்டில்களுக்கு கூடுதல் பணம் வசூலிக்க கூடாது. இந்த நடைமுறையை தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: MLAவை அசிங்கப்படுத்துறீங்களா?.. ஒரு மேயர் சீட் ஜெயிக்க முடியுமா? - திமுகவுக்கு ஆதவ் சவால்!
இணையத்தில் பரவும் வீடியோ
இதனிடையே இணையத்தில் வைரலாக ஒரு வீடியோ பரவி வருகிறது. அது திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள டாஸ்மாக் கடையில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு மதுவாங்க வந்த ஒருவர் பாட்டிலுக்கு அதன் அடக்கவிலையை விட கூடுதலாக ரூ.20 வசூலிக்கப்பட்டது குறித்து ஊழியரிடம் கேள்வியெழுப்பினார். அதற்கு நீதிமன்றம் சொன்னது போல ரூ.10 தருகிறேன். மேற்கொண்டு எதற்கு தர வேண்டும் என கேட்டார்.
அதற்கு டாஸ்மாக்கில் வேலை பார்க்கும் கடை ஊழியர், “மதுபாட்டில்கள் வரும்போது சில உடைந்து விடுகிறது. லோடுமேன் எல்லாருக்கும் நாங்கள் இந்த கூடுதல் பணத்தில் இருந்து தான் சம்பளம் கொடுக்க வேண்டியிருக்கிறது. இப்படித்தான் டாஸ்மாக் ஓடிக் கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு 10 நாட்களுக்கு இந்த பிரச்னை இருக்கும்” என தெரிவிக்கிறார். அதனால் டாஸ்மாக்கில் கூடுதல் பணம் வசூலிக்கப்படுவது தொடர்பான பிரச்னைக்கு தவெக அரசு முற்றுப்புள்ளி வைக்க தயாராகி வருகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்





















