![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
தஞ்சை மாணவி வழக்கு: தமிழக அரசு தொடர்ந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை
தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி பன்னிரெண்டாம் வகுப்பு பயின்று வந்த தஞ்சை மாணவி தற்கொலை செய்து கொண்டார்
![தஞ்சை மாணவி வழக்கு: தமிழக அரசு தொடர்ந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை Lavanya suicide CBI case matter to be heard by SC today TN Govt asks to stay the high Court order தஞ்சை மாணவி வழக்கு: தமிழக அரசு தொடர்ந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/10/0e88109b1401aef54c4e416b86ff8df2_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழக அரசு தொடர்ந்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ள இருக்கிறது.
முன்னதாக, தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல் பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி பன்னிரெண்டாம் வகுப்பு பயின்று வந்த மாணவி களைக்கொல்லி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு ஒருநாள் முன்பு நீதிபதி முன் அளித்த வாக்குமூலத்தில் விடுதிக் காப்பாளர் தன்னை துன்புறுத்தி வந்ததாக குறிப்பிடிருந்தார். இதனடிப்படையில், விடுதிக் காப்பாளரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது.
இந்நிலையில், தஞ்சை மாணவி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கின் தீவிரத் தன்மையைக் கருத்தில் கொண்டு சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு இந்திய உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்தது. இந்த, மனுமீதான விசாரணையை உச்சநீதிமன்றம் இன்று எடுத்துக் கொள்கிறது.
முன்னதாக, உயிரிழந்த பள்ளி மாணவியின் தந்தை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தாக்கல் செய்தார். பள்ளியில் மதம் மாற சொல்லி வற்புறுத்திய காரணத்தினால் தான் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாகவும், முறையான வகையில் புலானாய்வு விசாரணையை மேற்கொள்ள தமிழக அரசின் சிபிசிஐடிக்கு வழக்கை மாற்ற வேண்டும் என்றும் தனது மனுவில் கோரிக்கை வைத்தனர்.
இந்த வழக்கை விசாரித்த ஜி.ஆர்.சாமிநாதன், தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றுவதாக உத்தரவிட்டார். வழக்கின் தீவிரத்தன்மையை எடுத்துரைப்பதாகக் கூறி, பல்வேறு யூகங்களுக்கு வழிவகுக்கும் வகையில் சில கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
உதாரணமாக, பள்ளி இருக்கும் ஊரின் பெயர் மைக்கேல்பட்டி என்று இருப்பதாக குறிப்பட்ட அவர், ஊரின் பெயரை வைத்துக் கொண்டு கூட பள்ளியில் மதமாற்றத்திற்கான முயற்சி நடைபெறலாம் என்பதை ஊகிக்க முடிகிறது என்று குறிப்பிட்டார். கிறத்தவர்களின் புனித நூலான பைபிளைச் சுட்டிக்காட்டி, அதில் மதப் பிரசாரம் செய்வது கிறித்துவர்களின் கடமை என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனவே, மதமாற்றத்திற்கான முயற்சி பள்ளியில் நடைபெற வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தார்.
மேலும், இந்தியில் சுதிர் மிஸ்ரா இயக்கிய ‘சீரியஸ் மென்’, தமிழில் பாலசந்தர் இயக்கிய ‘கல்யாண அகதிகள்’ உள்ளிட்ட திரைப்படங்களில் வரும் உரையாடல்களையும், தஞ்சை பள்ளி மனைவி தற்கொலை வழக்கோடு இணைத்து பேசினார்.
பொதுவாக, மிகவும் அரிதான, அசாதாரணமான சூழ்நிலையில் (Rare and exceptional circumstances) மட்டுமே மாநில காவல்துறை செய்யும் புலனாய்வு விசாரணையை மத்திய புலனாய்வு அமைப்புக்கு மாற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பல்வேறு வழக்குகளின் மூலம் தெரிவித்துள்ளது.
எனவே, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிடக் கோரிய தீர்ப்பை எதிர்த்தும், வழக்குத் தொடர்பாக நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் தெரிவித்த சில கருத்துக்களை திரும்ப பெறவேண்டும் எனவும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. அந்த, மனு மீதனை விசாரணையை உச்ச நீதிமன்றம் இன்று எடுத்துக் கொள்கிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)