மேலும் அறிய

கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி வரும் 5ஆம் தேதி சட்டப்பேரவை முற்றுகை

’’கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்காமல், வாக்களித்த மக்களை ஏமாற்றி விட்டார்.  முதல்வரை நம்பி வாக்களித்ததால், அனைத்து மக்களும் ஏமாளியாகி விட்டார்கள்’’

கும்பகோணம் புதிய மாவட்டம் கோரும் ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம்  போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ம.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. விடுதலை தமிழ் புலிகட்சி நிறுவனர் குடந்தை அரசன், பாஜக மாவட்டத்தலைவர் சதிஸ்குமார், குடந்தை வழக்கறிஞர் சங்கத்தலைவர் மா.இராஜசேகர், பாமக மாவட்ட செயலாளர்  ஜோதிராஜ்,  நாம் தமிழர் கட்சி மாவட்டத்தலைவர் ராஜ்குமார், வன்னியர் சங்க மாவட்டசெயலாளர் மதி.விமல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மனிதநேய மக்கள் கட்சிபொறுப்பாளர் குடந்தை ஜாபர் வரவேற்றார். இக்கூட்டத்தில், உழவர் பேரியக்க மாநிலத்தலைவர் கோஆலயமணி, பாஜக மாவட்டசெயலாளர் பொன்ராஜ்தேவர்,  குடந்தை வர்த்த சங்கத் தலைவர் சேகர், காங்கிரஸ் கட்சி மாவட்ட பொது செயலாளர் கவிஞர்.அய்யப்பன், இந்துமக்கள்கட்சி மாநில பொறுப்பாளர் குருமூர்த்தி,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்  இறுதியில் ரமேஷ்  நன்றி கூறினார்.


கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி வரும் 5ஆம் தேதி சட்டப்பேரவை முற்றுகை
கூட்டத்தின், திமுக அரசு அமைந்தவுடன் நூறு நாட்களில் கும்பகோணம் புதிய மாவட்டமாக அறிவிப்படும் என  உறுதியளித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நினைவூட்டும் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் வருகின்ற 5ஆம் தேதி  புதன்கிழமை காலை 11 மணியளவில் கும்பகோணம் காந்திபூங்கா அருகில் நடைபெறவுள்ளதால் அனைவரும் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும். மார்ச் மாதம் நடைபெறவுள்ள தமிழக அரசு பட்ஜெட் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும்போது கும்பகோணம், திருவிடைமருதூர் பாபநாசம் தாலுகாவில் உள்ள 15 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட கடைகளை அடைத்து போராட்டம் மற்றும் ஆர்பாட்ட பேரணி நடத்துவது, மார்ச் மாதம் தமிழ்நாடு தலைமை செயலகம் முன்பு கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது, திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினரும், அரசு கொறடா கோவி.செழியன், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா, நாடாளுமன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம் ஆகியோர்களின் இல்லங்கள், அலுவலங்கள் முன்பு முற்றுகை போராட்டம் நடத்துவது எனவும் மற்றும் பல கட்ட தொடர் போராட்டங்கள் செய்வது எனவும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.


கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி வரும் 5ஆம் தேதி சட்டப்பேரவை முற்றுகை

இது குறித்து போராட்ட குழுவினர் கூறுகையில்,கும்பகோணத்தை தனி வருவாய் மாவட்டமாக அறிவிப்போம் என தேர்தல் பரப்புரையின் போது, தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.கும்பகோணம், திருவிடைமருதுார், பாபநாசம் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் வெற்றி பெற்றும், கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்காமல், வாக்களித்த மக்களை ஏமாற்றி விட்டார்.  முதல்வரை நம்பி வாக்களித்ததால், அனைத்து மக்களும் ஏமாளியாகி விட்டார்கள்.  கும்பகோணத்தை மாவட்டமாக்க வேண்டும் என, கடந்த அதிமுக ஆட்சி காலத்தில்  பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்திய போது, தற்போதைய முதல்வர், அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று எண்ணத்தில், எங்களுக்கு ஆதரவாக பேசினார். ஆனால் பதவிக்கு வந்தவுடன், அதிமுக ஆட்சி போல், எங்களை கண்டு கொள்ளாமல் இருந்து வருகின்றார். கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்கும் வரை போராட்டங்கள் தொடரும். முதல்வர் அறிவிக்கா விட்டால், போராட்டங்கள் வலு பெற்று, கும்பகோணம், திருவிடைமருதுார், பாபநாசம் பகுதிகளில் முழுவதும் ஸதம்பிக்கும். எனவே, தமிழக முதல்வர், கும்பகோணம் மக்களின் கோரிக்கையை ஏற்று, உடனடியாக கும்பகோணத்தை தனி வருவாய் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றனர்.

தலைப்பு செய்திகள்

லோடு இறக்க 3 நாள் தாமதம் !! லாரி டிரைவரை இரும்பு ராடால் அடித்துக் கொன்ற உரிமையாளர்
லோடு இறக்க 3 நாள் தாமதம் !! லாரி டிரைவரை இரும்பு ராடால் அடித்துக் கொன்ற உரிமையாளர்
மது குடிக்க பணம் கேட்டு டார்ச்சர்...கணவரை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்ற மனைவி
மது குடிக்க பணம் கேட்டு டார்ச்சர்...கணவரை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்ற மனைவி
300 டோக்கன்கள்... நள்ளிரவு வரை நீடித்த பத்திரப்பதிவு! ஸ்ரீபெரும்புதூரில் நள்ளிரவில் நடந்தது என்ன?
300 டோக்கன்கள்! நள்ளிரவு வரை நீடித்த பத்திரப்பதிவு! ஸ்ரீபெரும்புதூரில் நள்ளிரவில் நடந்தது என்ன?
காதலிக்கு பரிசு தர மளிகை கடைக்காரர் மனைவி கொலை ? 15 சவரன் கொள்ளையடித்த வாலிபர் சிக்கியது எப்படி
காதலிக்கு பரிசு தர மளிகை கடைக்காரர் மனைவி கொலை ? 15 சவரன் கொள்ளையடித்த வாலிபர் சிக்கியது எப்படி

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Embed widget