Krishnagiri power cut (22-01-2026): கிருஷ்ணகிரியில் நாளை 8 மணி நேரம் கரண்ட் இருக்காது.. உங்கள் பகுதியும் இதில் உள்ளதா? உடனே செக் பண்ணுங்க
Krishnagiri power cut (22-01-2026): கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படவுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை ( ஜனவரி 22, 2026, வியாழக்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.
மாதாந்திர பராமரிப்புப் பணிகள்
தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்:
சூளகிரி டவுன், உலகம், மதராசனப்பள்ளி, ஏனுசோனை, சின்னார், சாமல்பள்ளம், பீர்பள்ளி, பிக்கனப்பள்ளி, கலிங்கவரம், எளியதேரடி
கமந்தொட்டி, கோனேரிப்பள்ளி, பாதகோட்டை, சின்னகொத்தூர், கங்கோஜிகொத்தூர், பாதிமடுகு, நல்லூர், தீர்த்தம், மணவாரனப்பள்ளி, நாச்சிக்குப்பம், செம்பரசனஹள்ளி, பஸ்தலப்பள்ளி, எர்ரஹண்டஹள்ளி, பெத்தேப்பள்ளி, சென்னப்பள்ளி
பர்கூர், சிப்காட், ஒப்பதவாடி, வரமலைகுண்டா, காரகுப்பம், குருவிநயனப்பள்ளி, சின்னமட்டாரப்பள்ளி, நேரலக்குட்டை, வெங்கடசமுத்திரம், வரத்தனப்பள்ளி, காளிகோவில், சின்னத்தரப்பள்ளி, மெதுகானப்பள்ளி, ஜி.என்.மங்கலம்.
டவுன் காவேரிப்பட்டினம், தளிஹள்ளி, பெண்ணேஸ்வரமடம், சவுலூர், சாந்தபுரம், நரிமேடு, எர்ரஹள்ளி, பொத்தபுரம், பையூர், தேர்முக்குளம், பெரியண்ணன்கோட்டை, தேர்பட்டி, பாலனூர், நெடுங்கல், ஜெகதாப், ஹவுசிங் போர்ட்.
மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை
மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.
பாதுகாப்பாக சமாளிக்க முடியும்
மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.
Before You Go
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
ட்ரெண்டிங் செய்திகள்






















