மேலும் அறிய

கரூரில் கொட்டித்தீர்த்த கனமழை...சாலையோரங்களில் தேங்கிய மழைநீர்... மக்கள் அவதி..!

கரூரில் பல்வேறு இடங்களில் சாலையோரங்களில் மழை நீர் தேங்கி நின்றது. மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.

கரூர் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்ததால் இன்றும் பள்ளி  கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

கரூரில் நேற்று காலை முதல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழையானது தொடர்ந்து பரவலாக பெய்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நேற்று விடுமுறை அளித்து கலெக்டர் பிரபு சங்கர் உத்தரவிட்டார்.

 


கரூரில் கொட்டித்தீர்த்த கனமழை...சாலையோரங்களில் தேங்கிய மழைநீர்... மக்கள் அவதி..!

 

வாகன ஓட்டிகள் அவதி

இந்த நிலையில் கரூர், தான்தோன்றி மலை, காந்திகிராமம், பசுபதிபாளையம் உள்ள பகுதிகளில் நேற்று காலை முதல் பரவலாக மழை பெய்தது. இதனால் காலையில் வேலைக்குச் சென்றவர்கள் மலையில் நனைந்து கொண்டும், குடை பிடித்து  சென்றதை காண முடிந்தது. அதனால் வாகன ஒட்டிகள் அவதி அடைந்தனர். கரூர் பஸ் நிலையத்தில் பயணிகள் கையில் குடை பிடித்துக்கொண்டு பேருந்துக்காக காத்திருந்தனர். இந்த மழையால் கரூரில் பல்வேறு இடங்களில் சாலையோரங்களில் மழை நீர் தேங்கி நின்றது. இந்த மலையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிப்படைந்தது. வீதிகளிலும் கூட்டம் குறைவாக காணப்பட்டது.

 

 


கரூரில் கொட்டித்தீர்த்த கனமழை...சாலையோரங்களில் தேங்கிய மழைநீர்... மக்கள் அவதி..!


குளித்தலை பகுதிகளில் நேற்று அதிகாலை முதலே மழை பெய்ய தொடங்கியது. இந்த மலை இரவு வரை தொடர்ந்து இடைவிடாமல் பெய்து கொண்டிருந்தது. சில நிமிடங்கள் மழை விட்டாலும் மீண்டும் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் பொதுமக்கள் நடமாட்டம் மிகக் குறைந்த அளவே இருந்தது. குளித்தலை பஸ் நிலையத்திற்கு வந்த பயணிகள் பலர் மழையில் நனைந்தபடியும் அப்பகுதியில் உள்ள கடைகளில் ஓரமாக நின்றபடி பேருந்துக்காக காத்திருந்தனர்.

 

 


கரூரில் கொட்டித்தீர்த்த கனமழை...சாலையோரங்களில் தேங்கிய மழைநீர்... மக்கள் அவதி..!

 

சாலையோர கடைகள் பல இன்று போடப்படவில்லை. அதேபோல் குளித்தலை காவேரி நகர் மற்றும் உழவர் சந்தை பகுதிகளில் தரைக்கடை அமைத்து வியாபாரம் செய்யும் காய்கறி வியாபாரிகள் பெரும்பாலானோர் கடைகள் அமைக்கவில்லை. ஒரு சிலரே மழையில் நனைந்தபடி குடை பிடித்து வர வியாபாரம் செய்து வந்தனர்.குளித்தலையில் இன்று வார சந்தை என்பதால் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தொடர் மழை பெய்து வந்த காரணத்தால் குண்டும், குழியுமான சாலைகள் மற்றும் பள்ளங்களில் மழை நீர் தேங்கி நின்றது. தொடர் மழையால் வியாபாரிகள் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை சற்று பாதிக்கப்பட்டுள்ளது. 

 


கரூரில் கொட்டித்தீர்த்த கனமழை...சாலையோரங்களில் தேங்கிய மழைநீர்... மக்கள் அவதி..!

தவிட்டுப்பாளையம், நஞ்சை புகலூர், பாலதுறை, புன்னசத்திரம், திருக்காடுதுறை, நத்தமேடு, அத்திப்பாளையம் உள்பட நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் காலையில் இருந்து இடைவிடாமல் பரவலாக மழை பெய்தது. இதனால் சாலையோர கடைக்காரர்கள் வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். இப்பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. மழையின் காரணமாக சாலையின் இரு புறம் உள்ள குழிகளில், மழைநீர் தேங்கி சேரும் சகதியமாக உள்ளது. மழையின் காரணமாக அனைத்து பணிகளும் முற்றிலும் முடங்கியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்? என்ன பிரச்னை? இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர்
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்? என்ன பிரச்னை? இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர்
Crime: 3 திருமணங்கள், தன்பாலின உறவான நட்பு..! வந்த தடை, காதலிக்காக கணவனை போட்டு தள்ளிய மனைவி ..
Crime: 3 திருமணங்கள், தன்பாலின உறவான நட்பு..! வந்த தடை, காதலிக்காக கணவனை போட்டு தள்ளிய மனைவி ..
Chennai Peripheral Ring Road: சென்னை எல்லைச்சாலை திட்டம்! போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு! விரைவில் திறக்கப்படும் முக்கிய பகுதி!
சென்னை எல்லைச்சாலை திட்டம்! போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு! விரைவில் திறக்கப்படும் முக்கிய பகுதி!
WPL 2026: ஆர்சிபி-யின் அதிரடி ஆட்டம்! குஜராத்தை வீழ்த்தி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது!
WPL 2026: ஆர்சிபி-யின் அதிரடி ஆட்டம்! குஜராத்தை வீழ்த்தி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது!
ABP Premium

வீடியோ

PC Sreeram supports Vijay|‘’அதிகார துஷ்பிரயோகம்!இது டிரம்ப் மண் கிடையாதுவிஜய்க்கு PC ஸ்ரீராம்SUPPORT
Vijay CBI Enquiry | CBI விசாரணையில் TWIST தேர்தலுக்கு முன் குற்றப்பத்திரிகை? அடுத்த சிக்கலில் விஜய்?
Villupuram News|முளைப்பாரி..கும்மியாட்டம்!களைகட்டிய பேரங்கியூர் தென்பெண்ணை ஆற்று திருவிழா
Woman Police with Baby|Traffic-ல் சிக்கிய ஆம்புலன்ஸ்!கைக்குழந்தையுடன் கடமை! மாஸ் காட்டிய பெண் காவலர்
”முடிவு என்கிட்ட தான்” ராகுல் போட்ட ORDER! டெல்லி MEETING-ல் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்? என்ன பிரச்னை? இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர்
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்? என்ன பிரச்னை? இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர்
Crime: 3 திருமணங்கள், தன்பாலின உறவான நட்பு..! வந்த தடை, காதலிக்காக கணவனை போட்டு தள்ளிய மனைவி ..
Crime: 3 திருமணங்கள், தன்பாலின உறவான நட்பு..! வந்த தடை, காதலிக்காக கணவனை போட்டு தள்ளிய மனைவி ..
Chennai Peripheral Ring Road: சென்னை எல்லைச்சாலை திட்டம்! போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு! விரைவில் திறக்கப்படும் முக்கிய பகுதி!
சென்னை எல்லைச்சாலை திட்டம்! போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு! விரைவில் திறக்கப்படும் முக்கிய பகுதி!
WPL 2026: ஆர்சிபி-யின் அதிரடி ஆட்டம்! குஜராத்தை வீழ்த்தி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது!
WPL 2026: ஆர்சிபி-யின் அதிரடி ஆட்டம்! குஜராத்தை வீழ்த்தி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது!
Car Mileage: மைலேஜ் விவரங்களை அடித்து விடும் கார் நிறுவனங்கள்.. ஆப்படித்த மத்திய அரசு - இனி ஏசி கட்டாயம்
Car Mileage: மைலேஜ் விவரங்களை அடித்து விடும் கார் நிறுவனங்கள்.. ஆப்படித்த மத்திய அரசு - இனி ஏசி கட்டாயம்
Bengaluru Power Shutdown: பெங்களூருவில் நாளை(21-01-2026) 8 மணி நேர மின் தடை! உங்கள் பகுதியில் மின்சாரம் இருக்குமா? BESCOM அறிவிப்பு
Bengaluru Power Shutdown: பெங்களூருவில் நாளை(21-01-2026) 8 மணி நேர மின் தடை! உங்கள் பகுதியில் மின்சாரம் இருக்குமா? BESCOM அறிவிப்பு
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Embed widget