Karur Stampede: ”விஜயை கைது பண்ணுங்க.. அதிகார பசி நடத்திய civil war” மொத்தமாக கிளம்பிய எதிர்ப்பு
வ்வளவு பெரிய துயர சம்பவத்துக்கு விஜய் செய்தியாளர்களை சந்திக்காமல் சென்றது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகியது. அரசியல் கட்சி தலைவர்கள் பலர் தங்கள் கண்டத்தை தெரிவித்துள்ளனர்

கரூரில் தவெக தலைவர் விஜயின் பரப்புரை கூட்டம் சோகத்தில் முடிந்த நிலையில் விஜயை கைது செய்ய வேண்டும் என கடும் திரைப்பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.
கரூர் சோகம்:
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கரூர் மாவட்டத்தில் மக்களை சந்தித்து உரையாற்றினார். விஜய் வேன் அருகே கட்டுக் கடங்காத கூட்டம் கூடியது. இதனால் விஜய் பேசிக் கொண்டிருக்கும் போதே , பெண் ஒருவர் மயக்கம் அடைந்தார். அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விஜய் பேசி முடித்து புறப்பட்ட பின்னர் , கூட்டம் கலைந்து செல்லும் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் 39 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் 50-க்கும் மேற்ப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விஜய்க்கு கிளம்பும் எதிர்ப்பு:
இதற்கிடையில் இவ்வளவு பெரிய துயர சம்பவத்துக்கு விஜய் செய்தியாளர்களை சந்திக்காமல் சென்றது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகியது. அரசியல் கட்சி தலைவர்கள் பலர் தங்கள் கண்டத்தை தெரிவித்துள்ளனர்
நடிகர் விஷால் பதிவு
விஜய்யின் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குழந்தைகள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததைக் கேள்விப்படுவது மனதை வேதனைப்படுத்துகிறது. முற்றிலும் சரியல்ல.
பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் என் இதயம் அஞ்சலி செலுத்துகிறது. மேலும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும். விஜய் கட்சியினரிடம் எனது மனமார்ந்த வேண்டுகோள், இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு தயவுசெய்து கேட்டுக்கொள்கிறேன்.
எதிர்காலத்தில் நடைபெறும் எந்தவொரு அரசியல் பேரணிகளிலும் இப்போதிலிருந்து போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கும் என்று நம்புகிறேன்.
விசிக சிந்தனைசெல்வன்:
விசிக பொதுச்செயலாளாரான சிந்தனை செல்வன் வெளியிட்டுள்ள பதிவில் இயல்பாக காவல்துறை விதித்த கட்டுப்பாடுகளை தனக்கு எதிராக பின்னப்பட்ட சதிவலையைப்போல விஜய் தவறாக சித்தரித்ததால் ஏற்பட்ட கட்டுப்பாடுகளுக்கு எதிராக உருவான கும்பல் மனோநிலையே இந்த மரணங்களுக்கு காரணம். அதிகார பசி நடத்திய civil war இது என்று பதிவிட்டு இருந்தார்.
நடிகை ஓவியா:
சினிமா நடிகையான ஓவியா விஜயை கைது செய்ய வேண்டும் என தனத் இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

சரத்குமார்:
தமிழக வெற்றிக் கழக தலைவர் திரு.விஜய் அவர்கள் கரூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது, கூட்டத்தில் கலந்து கொண்ட 7 குழந்தைகள், 17 பெண்கள் உட்பட அப்பாவி மக்கள் 40 பேருக்கும் மேற்பட்டோர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்திருப்பதும், பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செய்தியும் பெரும் வேதனையளிக்கிறது.
தவெக தலைவர் 3 ம் கட்ட சுற்றுப்பயணம் இன்று மேற்கொண்ட நிலையில், இதுபோன்ற பேரிடர் ஏற்படக்கூடாதென முதல்கட்ட சுற்றுப்பயணத்தின் போதிலிருந்து காவல்துறையினர் அனுமதி வழங்குவதில் பல்வேறு நிபந்தனைகளை முன்வைத்தனர். ஆனால், காவல்துறையினரின் அனுமதியை எதிர்மறையாக எடுத்துக்கொண்டு அதையும் தவெக தலைவர் விமர்சித்து பேசியிருந்தார்.
அரசியல் பயணத்தில் முதன்மையானது பாதுகாப்பு. தன்னுடைய சுயபாதுகாப்பை ஒரு கட்சியின் தலைவர் உறுதி செய்து கொண்டால் மட்டும் போதாது. தொண்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே தலைவரின் தலையாய கடமையாக இருக்க வேண்டும். முதல்முறை சுற்றுப்பயணத்திற்காக திருச்சி விமான நிலையம் வந்து இறங்கிய போது, வரவேற்க சென்ற தொண்டர்களின் கூட்டமே அரசு உடைமைகளையும், பொதுசொத்துகளையும் சேதப்படுத்தியதை ஒரு தலைவராக கண்டிக்காமல், ஒவ்வொரு வார சனிக்கிழமையும் இதையே வாடிக்கையாக கொண்டு அடுத்த பணிகளை மேற்கொண்டது பொதுசொத்துகள் மீதும், தொண்டர்கள் மீதும் அக்கறையின்மையை காட்டுகிறது.
தான் செல்லும் இடங்களில் அதிகமான கூட்டம் சேருவதை திரு.விஜய் அவர்கள் பெருமையாக எண்ணிக் கொண்டதும் இந்த பெரும் உயிர்சேதத்திற்கு ஓர் முக்கிய சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்தாலோ அல்லது வாரத்தில் 3-4 தினங்கள் சுற்றுப்பயண திட்டத்தை காரணமாக கருத வேண்டும். அன்றாடம் மேற்கொண்டிருந்தாலோ இந்த பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டிருக்கும்.
காவல்துறையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை, அறிவுறுத்தல்கள் மற்றும் நிபந்தனைகளுக்கு ஒத்துழைப்பு தராமல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட தவெக தலைவர் திரு.விஜய் அவர்கள் தான் இந்த சம்பவத்திற்கு முழு பொறுப்பேற்க வேண்டும். இனி வருங்காலங்களில் காவல்துறைக்கு தகுந்த ஒத்துழைப்பும், அரசு அறிவுறுத்தும் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு கட்டுப்பட்டு இணக்கமான செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
தற்போது பிரான்சு நாட்டில் தூய லூர்து அன்னையை தரிசிக்க சென்றிருப்பதால் இந்த துயரமான சமயத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் காண இயலாத சூழலில் வேதனையில் என் இரத்தம் உறைகிறது. துரதிர்ஷ்டவசமாக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தார்க்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை வழங்குவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டு, அவர்கள் விரைவில் வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.






















