மேலும் அறிய

கரூரில் விஷவாயு தாக்கி இறந்த 3 தொழிலாளர்கள் - உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் கழிவுநீர் தொட்டிக்குள் மயங்கி கிடந்த மூன்று பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காந்திகிராமத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி பலியான மூன்று தொழிலாளர்களின் உறவினர்கள் இன்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 


கரூரில் விஷவாயு தாக்கி இறந்த 3 தொழிலாளர்கள் - உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

கரூர் சுக்காலியூர் காந்தி நகரை சேர்ந்தவர் குணசேகரன். இவர் அப்பகுதியில் வீடு கட்டி வருகிறார். இதில் தாந்தோணி மலை சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த மோகன்ராஜ் வயது 23, தோரணங்கள் பட்டியைச் சேர்ந்த சிவகுமார் வயது 35 ஆகியோர் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த வீட்டின் அருகே கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கழுவு நீர் தொட்டி முடிக்கப்பட்டு சிமெண்ட் பூச்சுகள் முடித்து இருந்தனர். 

 இதில் இரண்டு அடி அளவிற்கு தண்ணீர் தேங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அந்தத் தொட்டியின் உள்புறம் அடிக்கப்பட்டிருந்த பலகைகள் மற்றும் சவுக்கு கட்டைகளை அகற்றும் பணியில் மோகன்ராஜ் சிவக்குமார் ஆகியோர் ஈடுபட்டு இருந்தனர்.  அப்போது கழிவுநீர் தொட்டியில் விஷ வாயு தாக்கி இரண்டு பேரும் அலறியபடி மயங்கி விழுந்தனர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து கட்டிடத்தில் பணி செய்து கொண்டிருந்த மணவாசியை சேர்ந்த சிவா என்கின்ற ராஜேஷ் என்பவர் அவர்கள் இரண்டு பேரையும் மீட்க முயன்று உள்ளார். இதில் அவரும் விஷவாயுத்தாக்கி மயக்கமடைந்தார். 

 


கரூரில் விஷவாயு தாக்கி இறந்த 3 தொழிலாளர்கள் - உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கரூர் தீயணைப்பு நிலையத்திற்கும் தான்தோன்றி மலை போலீஸ் நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். இதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கழிவுநீர் தொட்டிக்குள் மயங்கி கிடந்த மூன்று பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காந்திகிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் அவர்கள் மூன்று பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சுந்தரவதனம்,  போலீஸ் துணைசூப்பிரண்ட் தேவராஜ் உள்ளிட்ட போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தின.  


கரூரில் விஷவாயு தாக்கி இறந்த 3 தொழிலாளர்கள் - உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

இதற்கிடையே கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி பலியான மூன்று பேரின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். கழிவு நீர் தொட்டியில் விஷவாயு தாக்கி மூன்று பேர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்த தொழிலாளர்கள் மூவரின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதில் அவர்கள் முதலமைச்சர் நிவாரண நிதி மற்றும் குடும்பத்தினருக்கு அரசு வேலை வேண்டி என கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் சமரசம் ஏற்பட்டு கலைந்து சென்றனர்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
Tomato Price: பாதியாக குறைந்த தக்காளி விலை.. ஒரு கிலோ இவ்வளவு தானா.? குஷியில் இல்லத்தரசிகள்
பாதியாக குறைந்த தக்காளி விலை.. ஒரு கிலோ இவ்வளவு தானா.? குஷியில் இல்லத்தரசிகள்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Embed widget