மேலும் அறிய

இளம்பெண் மரணத்திற்கு தவறான சிகிச்சையே காரணம் - கரூரில் உறவினர்கள் போராட்டம்

வளர்மதிக்கு கர்ப்பப்பையில் நீர்க்கட்டி இருந்ததால், கரூர் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது.

கரூரில் இளம்பெண் மரணத்திற்கு தவறான சிகிச்சையே காரணம் என்று நடைபெற்ற போராட்டத்தில் இழப்பீடு தருவதாக ஒப்புக்கொண்ட தனியார் மருத்துவமனை நிர்வாகம் இழப்பீடு வழங்காததை கண்டித்து உறவினர்கள் மருத்துவமனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் மாவட்டம், மணவாசி கிராமத்தை சேர்ந்தவர் வளர்மதி (21) இவரது கணவர் பாலமுருகன். இவர்களுக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. வளர்மதிக்கு கர்ப்பப்பையில் நீர்க்கட்டி இருந்ததால் அதனை அகற்றுவதற்காக கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி கரூர் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு கடந்த 1ம் தேதி அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பிறகு சர்க்கரையின் அளவு சரிவர இல்லாததால், மேல் சிகிச்சைக்காக கடந்த 5ம் தேதி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. 


இளம்பெண் மரணத்திற்கு தவறான சிகிச்சையே காரணம் - கரூரில் உறவினர்கள் போராட்டம்

கோவையில் உள்ள தனியார்  மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக மருத்துவமனை தரப்பில் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால், கரூர்  மருத்துவமனையில் அறுவை சிகிச்சையை தவறாக செய்ததன் காரணமாகவே வளர்மதி உயிரிழந்துள்ளார் என்று கூறி, மருத்துவமனைக்கு எதிராக அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் பாதுகாப்புடன் இரு தரப்பினர் இடையே பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. மருத்துவமனை தரப்பில் வளர்மதி குடும்பத்திற்கு இழப்பீடு தருவதாக தெரிவிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதனால் அந்த பிரச்சனை தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.


இளம்பெண் மரணத்திற்கு தவறான சிகிச்சையே காரணம் - கரூரில் உறவினர்கள் போராட்டம்

வளர்மதியின் பிரேதத்தை பெற்றுக் கொண்ட உறவினர்கள் இறுதிச் சடங்கை முடித்தனர். இந்த நிலையில் மருத்துவமனை தரப்பில் வளர்மதி குடும்பத்தினருக்கு இழப்பீடு தருவதாக ஒப்புக்கொண்ட தொகை இன்னும் கொடுக்கவில்லை என்று கூறி அவரது உறவினர்கள் மீண்டும் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் மருத்துவமனை முன்பு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget