Karur power cut (30-12-2025): கரூரில் நாளை மின் தடை! உங்கள் பகுதியும் இதில் இருக்கா? உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
Karur power cut (30-12-2025): கரூர் மாவட்டத்தில் நாளை பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படவுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை ( டிசம்பர் 30, 2025, செவ்வாய்க்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.
மாதாந்திர பராமரிப்புப் பணிகள்
தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்:
தாளப்பட்டி கரூர் டெக்ஸ் பார்க், ஆறு ரோடு, எஸ்ஜி புதூர், மணல்மேடு, காக்காவாடி, குள்ளம்பட்டி, வையப்பம்பட்டி, ஆட்டையம்பறப்பு, கருப்பம்பாளையம், தும்பிவாடி, பள்ளபாளையம், தத்தம்பாளையம், பள்ளபட்டி, அரவக்குறிச்சி, அண்ணாநகர், தமிழ்நகர், மண்மாரி, வேலம்பாடி, மோளையாண்டிபட்டி, பேரி சீத்தாபட்டி, ரெங்கராஜ் நகர், சௌந்தரபுரம், லிங்கமநாயக்கன்பட்டி, அரவக்குறிச்சி நகர் பகுதி, கொத்தபாளையம், கரடிப்பட்டி, பெரியவாளை பட்டி, ஆர்.பி.புதூர், ஈசநத்தம், மணமேட்டுப்பட்டி, இசட்-ஆலமரத்துப்பட்டி, அம்மா பட்டி, முத்து கவுண்டனூர், வல்லப்பம்பட்டி, சாந்தைப்பேட்டை, பண்ணைப்பட்டி ஏனுங்கனூர், வேடிக்காரன்பட்டி, தலையாரி பட்டி, மொடக்கூர், குரும்பபட்டி, பாறையூர், விராலிப்பட்டி, நவமரத்துப்பட்டி, புதுப்பட்டி, குறிக்காரன் வலசு.
மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை
மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.
பாதுகாப்பாக சமாளிக்க முடியும்
மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.





















