மேலும் அறிய

ரூ.108க்கு விற்கப்படும் பெட்ரோல்; இதுவரை கவனிக்காத மக்கள்-ஒருவர் மட்டும் கண்டுபிடித்தது எப்படி?

கரூரில் நயாரா பெட்ரோல் பங்க் நிறுவனங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 108 ரூபாய் 19 காசுகள் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதாக கூறப்பட்டு வந்தது. தற்போது மெல்ல மெல்ல அந்த நிலை மாறி வருகிறது. இந்த நிலையில், கரூரில் நயாரா பெட்ரோல் பங்க் நிறுவனங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 108 ரூபாய் 19 காசுகள் விற்பனை செய்யப்படுவதாக புதிய சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது.

 


ரூ.108க்கு விற்கப்படும் பெட்ரோல்; இதுவரை கவனிக்காத மக்கள்-ஒருவர் மட்டும் கண்டுபிடித்தது எப்படி?

தமிழகம் முழுவதும் எஸ்ஸார் நிறுவனத்தின் சார்பில் செயல்பட்டு வந்த பெட்ரோல் பங்குகள் "நயாரா" என்ற நிறுவனம் வாங்கி எரிபொருள் விற்பனை செய்து வருகின்றது. கரூரில் பல்வேறு இடங்களில் இந்த பெட்ரோல் பங்குகள் செயல்பட்டு வருகின்றன. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு பகுதியில் அமைந்துள்ள இந்த பெட்ரோல் பங்க் ஒன்றில், தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 108 ரூபாய் 19 காசுகள் விற்பனை செய்யப்படுவதாக அதே பகுதியில் இருக்கும் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். 

 


ரூ.108க்கு விற்கப்படும் பெட்ரோல்; இதுவரை கவனிக்காத மக்கள்-ஒருவர் மட்டும் கண்டுபிடித்தது எப்படி?

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான பெட்ரோல் பங்குகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 92 காசுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நயாரா பெட்ரோல் பங்குகளில் மட்டும் நிர்ணயம் செய்யப்பட்ட விலையைவிட கூடுதலாக விலை வைத்து விற்பனை செய்வது அதிர்ச்சி அளிப்பதாக அந்த நபர் தெரிவித்தார்.

 


ரூ.108க்கு விற்கப்படும் பெட்ரோல்; இதுவரை கவனிக்காத மக்கள்-ஒருவர் மட்டும் கண்டுபிடித்தது எப்படி?

இதுகுறித்து புகார் தெரிவித்த நபர் கூறுகையில், “நான் வெங்கமேடு பகுதியில் லட்சுமி கிரில் பட்டறை வைத்துள்ளேன். எனக்கு ஒரு ஆட்டோ, இரண்டு இருசக்கர வாகனங்கள் உள்ளது. இந்த நிலையில், நான் இன்று பெட்ரோல் பங்குக்கு சென்று பெட்ரோல் அடிக்கும் பொழுது, பெட்ரோல் விலை கேட்கும்போது தான் எனக்கு அந்த பங்கில் நடக்கும் மோசடி குறித்து தெரிய வந்தது.

 


ரூ.108க்கு விற்கப்படும் பெட்ரோல்; இதுவரை கவனிக்காத மக்கள்-ஒருவர் மட்டும் கண்டுபிடித்தது எப்படி?

பெட்ரோல் விலை உயர்வை குறித்து வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த லட்சுமி கிரில் ஒர்க்  உரிமையாளர் சபரீசன் புகைப்படம்.

 

சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் உள்ளிட்ட 102 ரூபாய்க்கு விற்பனையாகி வரும் நிலையில், கடந்த ஆறு மாத காலமாக இந்த பெட்ரோல் நார்மல் விலையை விட அதிகபட்ச விலை வைத்து பெட்ரோல் அடிப்பதாக எனக்கு தகவல் கிடைத்தது. இதைப்பற்றி பெட்ரோல் பங்க் உரிமையாளரிடம் கேட்ட போது,  ’எங்கள் பங்கின் விலை இவ்வளவு தான் என்று ஒரே வார்த்தையில் முடித்து விட்டார்’. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தயவு செய்து பெட்ரோல் அடிக்கும் பொழுது பெட்ரோலின் விலை எவ்வளவு என்ன பில் தருகிறார்கள் என்று பார்க்க வேண்டும். அதே போல் கரூர் வெங்கமேடு பகுதியில் உள்ள நயாரா பெட்ரோல் பங்கில் விலையை குறைக்காவிட்டால் வெங்கமேடு பகுதி பொதுமக்களை திரட்டி பெட்ரோல் பங்க் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப் போகிறேன்’ என கூறினார்.

கரூர் மாவட்டத்தில் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் சில தனியார் பெட்ரோல் நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலையில் குறிப்பாக நயாரா பெட்ரோல் பங்கில் மட்டும் இத்தகைய விலை உயர்வால் இருசக்கர வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக இந்த நயாரா பெட்ரோல் பங்கில் 108 ரூபாய்க்கு விற்கப்படும் விலை குறித்து இதுவரை யாரும் கவனிக்கவில்லை என்பதுதான் வேடிக்கையான ஒரு நிகழ்வு.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

15 வயது சிறுமியை அடுத்தடுத்து சீரழித்த 4 பேர் - ஆம்புலன்ஸ் டிரைவர் வரை திடுக்கிடும் பின்னணி
15 வயது சிறுமியை அடுத்தடுத்து சீரழித்த 4 பேர் - ஆம்புலன்ஸ் டிரைவர் வரை திடுக்கிடும் பின்னணி
கடற்கரையில் போதைப்பொருள் மருந்துகள்: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல்
கடற்கரையில் போதைப்பொருள் மருந்துகள்: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல்
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
செங்கழுநீர் ஏரியை முழுமையாக தூர்வார மத்திய அரசு நிதி ஒதுக்க கவன ஈர்ப்பு தீர்மானம் மக்களவை எம்.பி., தகவல்
செங்கழுநீர் ஏரியை முழுமையாக தூர்வார மத்திய அரசு நிதி ஒதுக்க கவன ஈர்ப்பு தீர்மானம் மக்களவை எம்.பி., தகவல்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
Embed widget