மேலும் அறிய

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி தேரோட்டம் - ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

கடந்த இரண்டு ஆண்டுகளாக தொற்றின் பரவல் காரணமாக தேர்பவனி நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு மிக சிறப்பாக பங்குனி தேரோட்டம் நடைபெற்றது

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவாலயங்களில் ஒன்றான கரூர் ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி பெரும் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தொற்றின் தாக்கத்தால் ஆலயத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு பக்தர்கள் அனுமதியுடன் கடந்த 10ஆம் தேதி ஆலயத்தில் கொடிமரத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நாள்தோறும் இரவு ஸ்ரீ கல்யாணபசுபதீஸ்வரர், ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உள்ளிட்ட சுவாமிகளுக்கு பல்வேறு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று, ஆலயத்தில் சிவாச்சாரியார் சுவாமிகளுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து பிறகு, நாள்தோறும் யானை, குதிரை, அன்னம் உள்ளிட்ட பல்வேறு வாகனத்தில் திருவீதி உலா இரவு தொடங்கி நள்ளிரவு வரை நடைபெற்று வந்தது.

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி தேரோட்டம் - ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்வாக சுவாமி திருக்கல்யாண வைபவம் கடந்த வியாழக்கிழமை ஆலய மண்டபத்தில் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர், ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சவுந்தரநாயகி உள்ளிட்ட சுவாமி சிறப்பு அலங்காரத்தில் மணக்கோலத்தில் காட்சி அளிக்கும்படி செய்திருந்தனர். பின்னர் பக்தர்கள் முன்னிலையில் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவமும் நடைபெற்ற பின்னர் பால், பழம் மற்றும் மொய் கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி தேரோட்டம் - ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

அடுத்து முக்கிய நிகழ்வாக தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. தேரோட்ட நிகழ்ச்சியை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு உற்சவர் கல்யாணபசுபதீஸ்வரர் அலங்காரவல்லி சௌந்தரநாயகி கணபதி பாலமுருகன் வள்ளி-தெய்வானை உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று பட்டாடை உடுத்தி வண்ண மாலைகள் அறிவித்த பிறகு ஆலயத்திலிருந்து ஆலய வாசலில் இருக்கும் தேருக்கு சுவாமியை தூக்கிச் சென்றனர்.


கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி தேரோட்டம் - ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

கல்யாணபசுபதீஸ்வரர்  செயல் அலுவலர் மற்றும் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் முன்னிலையில் சுவாமிகளுக்கு தீபாராதனை காட்ட பிறகு, கங்கானம் கட்டப்பட்ட பின்னர், தேங்காய் உடைக்க பிறகு கூடியிருந்த பக்தர்கள் தேரின் வடத்தை பிடித்து இழுத்தவாறு அரோகரா முழக்கத்தை எழுப்பினர். பின்னர் ஆலய வடக்கு வாசல், மேற்கு வாசல், தெற்கு வாசல், கிழக்கு வாசல் வழியாக தேர்பவனி நடைபெற்றது. பங்குனி தேர் நிகழ்ச்சியை கரூர், நாமக்கல், திண்டுக்கல், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து புகழ்பெற்ற கல்யாணபசுபதீஸ்வரர் மனமுருகி வழிபட்டனர். பங்குனி மாத தேர் திருவிழாவை முன்னிட்டு ஆலயம் சுற்றி பல்வேறு இடங்களில் சிறப்பான முறையில் அன்னதானம் நடைபெற்றது.

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி தேரோட்டம் - ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

கரூர் நகரின் முக்கிய பகுதியில் நடைபெற்ற தேர் திருவிழாவின் ஏற்பாடுகளை கல்யாணபசுபதீஸ்வரர் ஆலய நிர்வாகிகள் சிறப்பான முறையில் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக 50க்கும் மேற்பட்ட போலீசார் தங்களது பணியில் ஈடுபட்டு இருந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக தொற்றின் பரவல் காரணமாக தேர்பவனி நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு மிக சிறப்பாக பங்குனி தேரோட்டம் நடைபெற்றது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Ukraine's Planned Attack: ட்ரக்கில் பயணித்த ட்ரோன்கள்; சீக்ரெட் ஆபரேஷன் ‘Spider's Web‘ - ரஷ்யாவுக்கே பாயசம் போட்ட உக்ரைன்
ட்ரக்கில் பயணித்த ட்ரோன்கள்; சீக்ரெட் ஆபரேஷன் ‘Spider's Web‘ - ரஷ்யாவுக்கே பாயசம் போட்ட உக்ரைன்
TVK Vijay: ஒரு பக்கம் ஜனநாயகன்.. மறுபக்கம் தவெக! பிறந்த நாளில் டபுள் ட்ரீட் தரப்போகும் விஜய்?
TVK Vijay: ஒரு பக்கம் ஜனநாயகன்.. மறுபக்கம் தவெக! பிறந்த நாளில் டபுள் ட்ரீட் தரப்போகும் விஜய்?
Poonamallee-Paranthur Metro: பூந்தமல்லி சுற்றுவட்டார மக்களுக்கு குதூகலமான செய்தி; வருது பரந்தூர் மெட்ரோ - முழு விவரம்
பூந்தமல்லி சுற்றுவட்டார மக்களுக்கு குதூகலமான செய்தி; வருது பரந்தூர் மெட்ரோ - முழு விவரம்
IPL Final RCB vs PBKS: ஐபிஎல் கோப்பை யாருக்கு? இவர்கள் கையில்தான் சாம்பியன் பட்டம் இருக்கு!
IPL Final RCB vs PBKS: ஐபிஎல் கோப்பை யாருக்கு? இவர்கள் கையில்தான் சாம்பியன் பட்டம் இருக்கு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ukraine's Planned Attack: ட்ரக்கில் பயணித்த ட்ரோன்கள்; சீக்ரெட் ஆபரேஷன் ‘Spider's Web‘ - ரஷ்யாவுக்கே பாயசம் போட்ட உக்ரைன்
ட்ரக்கில் பயணித்த ட்ரோன்கள்; சீக்ரெட் ஆபரேஷன் ‘Spider's Web‘ - ரஷ்யாவுக்கே பாயசம் போட்ட உக்ரைன்
TVK Vijay: ஒரு பக்கம் ஜனநாயகன்.. மறுபக்கம் தவெக! பிறந்த நாளில் டபுள் ட்ரீட் தரப்போகும் விஜய்?
TVK Vijay: ஒரு பக்கம் ஜனநாயகன்.. மறுபக்கம் தவெக! பிறந்த நாளில் டபுள் ட்ரீட் தரப்போகும் விஜய்?
Poonamallee-Paranthur Metro: பூந்தமல்லி சுற்றுவட்டார மக்களுக்கு குதூகலமான செய்தி; வருது பரந்தூர் மெட்ரோ - முழு விவரம்
பூந்தமல்லி சுற்றுவட்டார மக்களுக்கு குதூகலமான செய்தி; வருது பரந்தூர் மெட்ரோ - முழு விவரம்
IPL Final RCB vs PBKS: ஐபிஎல் கோப்பை யாருக்கு? இவர்கள் கையில்தான் சாம்பியன் பட்டம் இருக்கு!
IPL Final RCB vs PBKS: ஐபிஎல் கோப்பை யாருக்கு? இவர்கள் கையில்தான் சாம்பியன் பட்டம் இருக்கு!
NEET PG 2025 Exam: குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்; தள்ளிப்போன நீட் முதுகலைத் தேர்வு- எப்போது தெரியுமா?
NEET PG 2025 Exam: குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்; தள்ளிப்போன நீட் முதுகலைத் தேர்வு- எப்போது தெரியுமா?
Gold Rate 2nd June: மீண்டும் வேலையை காட்டிய தங்கம்; ஒரே நாளில் சவரனுக்கு இவ்வளவு உயர்வா.? இன்றைய நிலவரம்
மீண்டும் வேலையை காட்டிய தங்கம்; ஒரே நாளில் சவரனுக்கு இவ்வளவு உயர்வா.? இன்றைய நிலவரம்
Sellur Raju on DMK: போச்சு.! அடுத்த 10 வருஷத்துக்கு திமுக ஆட்சிக்கு வர முடியாது; செல்லூர் ராஜு சொன்ன மதுரை செண்ட்டிமென்ட்
போச்சு.! அடுத்த 10 வருஷத்துக்கு திமுக ஆட்சிக்கு வர முடியாது; செல்லூர் ராஜு சொன்ன மதுரை செண்ட்டிமென்ட்
IPL Final RCB vs PBKS: 18 ஆண்டு தவம்.. ஆர்சிபி - பஞ்சாப் இதுவரை எப்படி? ஐபிஎல் வரலாறு சொல்வது என்ன?
IPL Final RCB vs PBKS: 18 ஆண்டு தவம்.. ஆர்சிபி - பஞ்சாப் இதுவரை எப்படி? ஐபிஎல் வரலாறு சொல்வது என்ன?
Embed widget