மேலும் அறிய

கரூரில் சித்தர் என சித்தரித்த முதியவர் குணமடைந்த பின் மனநல காப்பகத்தில் ஒப்படைப்பு

கரூர் மாவட்டம் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 15 to 20 ஆண்டுகளாக சுப்ரமணி என்பவர் மனநலம் பாதிக்கப்பட்டு, யாசகம் எடுத்து , தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் உள்ள அரளிச் செடியில் படுத்திருந்து இருந்தார்.

சித்தர் என்ன சித்தரித்து பொதுமக்கள் வழிபட்ட முதியவர் தற்பொழுது பூரண குணமடைந்து மனநல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.


கரூரில் சித்தர் என சித்தரித்த முதியவர் குணமடைந்த பின் மனநல காப்பகத்தில் ஒப்படைப்பு
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே நாகம்பள்ளி கிராமம் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 15 to 20 ஆண்டுகளாக சுப்ரமணி என்பவர் மனநலம் பாதிக்கப்பட்டு, உடைகள் அணியாமல் சுற்றி திரிந்தும், யாசகம் எடுத்து உணவருந்தியும், தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் உள்ள அரளிச் செடியில் படுத்திருந்திருந்தார்.



கரூரில் சித்தர் என சித்தரித்த முதியவர் குணமடைந்த பின் மனநல காப்பகத்தில் ஒப்படைப்பு

இந்நிலையில், சுப்பிரமணி சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் இவர் அரசு பேருந்து பணிமனையில் நேரம் காப்பாளராக பணி செய்து, அரசு வேலையே வேண்டாம் என்று எழுதிக் கொடுத்துவிட்டு வந்ததாகவும், இவருக்கு இரண்டு மனைவிகள் இருப்பதாகவும், அக்கம் பக்கத்தினர் கூறுகின்றனர். சுப்பிரமணி அவர்களிடம் ஏதேனும் கேட்டால் எதுவும் பேசுவதில்லை.


கரூரில் சித்தர் என சித்தரித்த முதியவர் குணமடைந்த பின் மனநல காப்பகத்தில் ஒப்படைப்பு


கடந்த நான்கு மாதங்களாக சித்தர் என்றும் நெடுஞ்சாலை சித்தர் என்றும் கூறி பொதுமக்களிடம் ஏமாற்றியும், சமூக வலைதளம் மூலமாக வதந்தியை பரப்பியும் கரூர் to திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை, தகரக் கொட்டகை அருகில் உள்ள நாகம்பள்ளி பிரிவு, பகுதியில் குடிசை போட்டு அமர வைத்து அவரிடம் ஆசி வாங்க வரும் பொதுமக்களிடமிருந்து உண்டியல் வசூல் செய்து சுய லாபம் பெற்று பணம் வசூல் செய்து வந்ததாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து, அவரை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பெயரில் வருவாய்த்துறை, காவல்துறை உதவியுடன் 2.12.2022 அன்று  மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் 15 நாள் சிகிச்சைக்கு பின்பு அவர் பூரண குணம் அடைந்த பின்பு தற்போது  தேனி மாவட்டத்தில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.


குழப்பம் ஏற்படுத்தும் வழிகாட்டி பலகை
 கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த திருச்சி கரூர் புறவழிச்சாலையில் உள்ளது பிரிவு சாலை இவ்வழியாகத்தான் தினந்தோறும் கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு, காங்கேயம் கரூர் மார்க்கெட்டிலிருந்து வரும் வாகனங்கள் செல்கிறது. அதேபோல் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கும்பகோணம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய மார்க்கத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் இந்த புறவழிச்சாலை வழியாகத்தான் செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது.

மேலும், பெரம்பலூர் துறையூர் முசிறி சேலம் நாமக்கல் மார்க்கத்திலிருந்து வரும் வாகனங்கள் திருச்சி கோ கரூருக்கோ செல்ல வேண்டும் என்றால் இந்த புறப்பாலயம் பிரிவு ரோட்டில் வந்து தான் செல்ல வேண்டும் அது போல் மதுரை,துவரங்குறிச்சி,திண்டுக்கல் மணப்பாறை, தரகம்பட்டி,பாளையம் மார்க்கத்திலிருந்து வரும் வாகனங்கள் குளித்தலை வழியாக குறைப்பாளையம் பிரிவு ரோடு சென்று அதன் பிறகு திருச்சி கரூர் செல்கிறது. இதனால் தினந்தோறும் இந்த குறைப்பாளையம் பிரிவு ரோட்டில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கனரக வாகனங்கள் பேருந்துகள் செல்கின்றன. இந்நிலையில் திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலை குறைபாளையம் பிரிவு ரோட்டில் இறக்கத்தில் வழிகாட்டி பலகை வைக்கப்பட்டுள்ளது அதில் குளித்தலை திருச்சி தஞ்சாவூர் என போடப்பட்டுள்ளது.

இதனால் கேரளா மாநிலத்திலிருந்தும் மற்றும் கோயமுத்தூர், ஈரோடு, காங்கேயம், பல்லடம் கரூர் பகுதிகளில் இருந்து வரும் சரக்கு வாகனங்கள் பயணிகள் வாகனங்கள் திருச்சி வழியாக தஞ்சாவூர் புதுக்கோட்டை காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்ல வேண்டும். என்ற நிலையில் இந்த குறை பாளையம் பிரிவு ரோட்டில் வழிகாட்டு பழைய பார்த்தவுடன் புறவழிச்சாலையில் இருந்து கீழே இறங்கி குளித்தலை மருதூர் பிரிவு ரோடு சென்று மீண்டும் திருச்சி கரூர் புறவழிச்சாலையை செல்கின்றனர்.

இதனால் குளித்தலை நகரப் பகுதியில் ஒரு சில நேரத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் சூழ்நிலையும் இருந்து வருகிறது மேலும் இரவு நேரங்களில் வரும் வெளியூர் பயணிகள் செய்வது அறியாது இந்த வழிகாட்டு பலகையை பார்த்துவிட்டு மிகவும் குழப்பம் அடைந்து வருகின்றனர் மேலும் மேற்கு பகுதியில் இருந்தும் கிழக்கு பகுதியில் இருந்தும் வரும் வாகனங்கள் முசிறி குளித்தலை மணப்பாறை செல்ல வேண்டும் என்றால் இந்த குறப்பாளையம் பிரிவு ரோட்டில் வந்து தான் திரும்ப வேண்டும் அதற்காக இந்த வழிகாட்டு பலகையில் திருச்சி குளித்தலை தஞ்சாவூர் என்று இருப்பதை முசிறி குளித்தலை மணப்பாறை என வழிகாட்டி பலகையில் மாற்றி அமைக்க வேண்டும். இதனால் வெளியூர் பயணிகள் அச்சமின்றி நேராக திருச்சி கரூர் சாலையில் சென்று நேரத்தை மிச்சப்படுத்த முடியும் மேலும் நகரப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு இல்லாத வகையில் இருந்து வரும் இதனால் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து வழிகாட்டு பலகையில் உள்ள ஊர் பெயர்களை மாற்றி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Vs Vijay: “அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
“அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
PM Modi Oman: “இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
“இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
US Venezuela Russia: “அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
“அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
Trump on US Citizenship: 2026-ல் மாதத்திற்கு 100-200 பேரின் அமெரிக்க குடியுரிமை பறிப்பா.?! ட்ரம்ப் கூறிய பதில் என்ன தெரியுமா.?
2026-ல் மாதத்திற்கு 100-200 பேரின் அமெரிக்க குடியுரிமை பறிப்பா.?! ட்ரம்ப் கூறிய பதில் என்ன தெரியுமா.?
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Vs Vijay: “அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
“அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
PM Modi Oman: “இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
“இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
US Venezuela Russia: “அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
“அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
Trump on US Citizenship: 2026-ல் மாதத்திற்கு 100-200 பேரின் அமெரிக்க குடியுரிமை பறிப்பா.?! ட்ரம்ப் கூறிய பதில் என்ன தெரியுமா.?
2026-ல் மாதத்திற்கு 100-200 பேரின் அமெரிக்க குடியுரிமை பறிப்பா.?! ட்ரம்ப் கூறிய பதில் என்ன தெரியுமா.?
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Putin Warns Ukraine: “அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
“அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
Chennai Power Cut: சென்னையில் டிசம்பர் 19-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? இதோ விவரம்
சென்னையில் டிசம்பர் 19-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? இதோ விவரம்
TN government free laptop: இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
Embed widget