மேலும் அறிய

வேலை கேட்டு கண்ணீர் விட்டு கதறிய முதியவர் - ஆட்சியர் அலுவலகத்தில் சோகம்

கடந்த 5 ஆண்டுகளாக இவருக்கு 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்கப்பட்டதால் அந்த வருமானத்தை கொண்டு ஒரு வேளை வெளியில் சாப்பிட்டும், மருத்துவச் செலவையும் பார்த்து வந்துள்ளார்.

கரூரில் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்க வேண்டும் எனக் கோரி பார்வை குறைபாடுடைய மாற்று திறனாளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க மனு அளித்தார்.

 


வேலை கேட்டு  கண்ணீர் விட்டு கதறிய முதியவர் - ஆட்சியர் அலுவலகத்தில் சோகம்

வாரம் தோறும் திங்கட்கிழமைகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. வாரம் தோறும் திங்கட்கிழமையில் நடைபெற்று வரும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வாரம் தோறும் ஏராளமான பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் தங்களது தெரு பிரச்சனை, ஊர் (குடிநீர், பொது கழிப்பிடம், சாக்கடை) அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார் மனு வழங்கி பிரச்சனையை கூறிய தீர்வுகளை கண்டு வருகின்றனர்.

LIVE | Kerala Lottery Result Today (06.08.2024): கேரளா லாட்டரி முடிவு இன்று (06.08.2024): ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-427 செவ்வாய் டிரா அவுட் - முதல் பரிசு 75 லட்சம்

 


வேலை கேட்டு  கண்ணீர் விட்டு கதறிய முதியவர் - ஆட்சியர் அலுவலகத்தில் சோகம்

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற கரூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த முத்துரெங்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 40). பார்வை குறைபாடுடைய மாற்றுத் திறனாளியான இவருக்கு தாய், தந்தை இல்லாததால் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை பெற்று வாழ்ந்து வருகிறார். உதவிக்கு யாரும் இல்லாததால் அருகில் உள்ள அரசுப் பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவை பெற்று உண்டு வருகிறார். 

 




வேலை கேட்டு  கண்ணீர் விட்டு கதறிய முதியவர் - ஆட்சியர் அலுவலகத்தில் சோகம்

கடந்த 5 ஆண்டுகளாக இவருக்கு 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்கப்பட்டதால் அந்த வருமானத்தை கொண்டு ஒரு வேளை வெளியில் சாப்பிட்டும், மருத்துவச் செலவையும் பார்த்து வந்துள்ளார். கடந்த ஓராண்டாக கைரேகை 100 நாள் வேலை திட்ட இயந்திரத்தில் பதிவாகவில்லை என்றும், ஆதாரில் திருத்தம் செய்ய வேண்டும் எனக் கூறி ஊராட்சி  அலுவலகத்தில் அவரை அலைக்கழித்து வருவதாக கூறப்படுகிறது. 

 


வேலை கேட்டு  கண்ணீர் விட்டு கதறிய முதியவர் - ஆட்சியர் அலுவலகத்தில் சோகம்

இதனால் கிராமத்திலிருந்து பேருந்து மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த அவர், ஆட்சியரிடம் தனக்கு 100 நாள் வேலை திட்டத்தில் மீண்டும் பணி வழங்க வேண்டும் என மனு அளித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய செல்வராஜ், தனக்கு உடலில் பல நோய்கள் இருப்பதாகவும், அரசு சார்பில் வழங்கப்படும் 1,500 ரூபாய் உதவித் தொகை போதுமானதாக இல்லாததால், 100 நாள் வேலை திட்டத்தில் தன்னை இணைக்க வேண்டும் என்றும், தன்னை போன்ற மாற்றுத் திறனாளிகள் வேலை பார்த்து வரும் நிலையில், தனக்கு மட்டும் தராமல் ஊராட்சி நிர்வாகம் அலைக்கழிப்பதாக கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார்.

 


வேலை கேட்டு  கண்ணீர் விட்டு கதறிய முதியவர் - ஆட்சியர் அலுவலகத்தில் சோகம்

மேலும் இவரது மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக அவரிடம் கூறியுள்ளார். முதியோர் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த நிகழ்வு சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
EPS:
EPS: "விவசாயிகளுக்கு பச்சைத் துரோகி நானா?" ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!
EV Scooter Sales: ஓலா, பஜாஜை தூக்கி சாப்பிட்ட டிவிஸ்.. நடுங்க வைத்த நவம்பர் விற்பனை.. நம்பர் 1 EV ஸ்கூட்டர் எது?
EV Scooter Sales: ஓலா, பஜாஜை தூக்கி சாப்பிட்ட டிவிஸ்.. நடுங்க வைத்த நவம்பர் விற்பனை.. நம்பர் 1 EV ஸ்கூட்டர் எது?
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
Embed widget