மேலும் அறிய

மரபணு குறைபாட்டால் தவிக்கும் சிறுமி கௌசிகா: காஞ்சிபுரத்தில் குவியும் உதவி! பெற்றோரின் கண்ணீர் கதை

"மரபணு குறைபாட்டால் தவிக்கும் சிறுமி கௌசிகாவுக்கு சமூக அலுவலர்கள் உதவி செய்து வருகின்றனர்."

"காஞ்சிபுரம் மரபணு குறைபாட்டால் பாதிப்படைந்து, சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவித்து வரும் சிறுமிக்கு காஞ்சிபுரத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றனர். இதுவரை சுமார் 3.5 ரூபாய் மட்டுமே உதவி கிடைத்திருப்பதாகவும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்"

உதவிக்காக காத்திருந்த சிறுமி

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட தாயார் குளம் எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் - சசிகலா தம்பதியினரின் ஏழு வயது மகள் கௌசிகா. கடந்த 2018-ஆம் ஆண்டு பிறந்த கௌசிகா, முதல் ஒரு வருடம் ஆரோக்கியமாகவே வளர்ந்துள்ளார். 

ஆனால், அதன் பிறகு அவரது உடல் வளர்ச்சியில் பெரும் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. மூக்கு, கண் மற்றும் கல்லீரல் போன்ற உறுப்புகளின் வளர்ச்சியில் ஏற்பட்ட மாறுபாடுகளால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், குழந்தையை சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர். பரிசோதனையில், சிறுமி கௌசிகாவுக்கு அரிய வகை மரபணு குறைபாடு (Genetic Disorder) இருப்பது கண்டறியப்பட்டது.

சிகிச்சைக்கு தேவைப்பட்ட 60 லட்சம்

இந்த நோய்க்கான சிகிச்சையாக, வாரம் ஒருமுறை தலா ₹2 லட்சம் மதிப்பிலான ஊசி மருந்து செலுத்தப்பட வேண்டும். கடந்த ஆண்டு, சுமார் ₹60 லட்சம் மதிப்பிலான 30 வார கால சிகிச்சையைத் தனியார் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் பெற்றோர் மேற்கொண்டனர். இதனால் குழந்தையின் உடல்நிலை சீரடைந்த நிலையில், கடந்த நான்கு மாதங்களாக நிதி உதவி கிடைக்காததால் சிகிச்சை தடைப்பட்டது.

சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

சிகிச்சை நிறுத்தப்பட்டதால், மீண்டும் உடல் உறுப்புகளின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டு, சிறுமி மூச்சு விடக் கூட சிரமப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டார். மீண்டும் 30 வார சிகிச்சைக்கு ₹60 லட்சம் தேவைப்படும் நிலையில், வறுமையில் வாடும் பெற்றோர் என்ன செய்வதென்று அறியாது திகைத்தனர். ஆட்சியரிடம் மனுவும், பள்ளி மாணவர்களின் கேலியும் தன் மகளைக் காப்பாற்றக் கோரி, தந்தை செல்வகுமார் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து கண்ணீர் மல்க மனு அளித்தார். 

இதற்கிடையே, உடல் தோற்றத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் பள்ளியில் சக மாணவர்கள் கேலி செய்ததால், கல்வியில் சிறந்து விளங்கிய கௌசிகா கடந்த ஒரு வாரமாகப் பள்ளிக்குச் செல்லாமல் முடங்கியிருந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்தச் செய்தி ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரவியதை அடுத்து, பலரும் உதவி செய்ய முன்வந்துள்ளனர். தற்போது வரை சமூக வலைத்தளங்கள் வாயிலாக சுமார் ₹2.5 லட்சம் நிதி திரட்டப்பட்டுள்ளது.

சிறுமிக்கு தொடரும் உதவிகள்

இந்தத் துயரச் செய்தியை ஊடகங்கள் வாயிலாக அறிந்த சமூக ஆர்வலரும், காஞ்சிபுரம் தனியார் மேல்நிலைப் பள்ளியின் தாளாளருமான அருண்குமார், நேரில் சென்று குழந்தையின் பெற்றோரைச் சந்தித்தார். உடனடியாகத் தனது பங்களிப்பாக ₹1 லட்சம் நிதியுதவியை வழங்கினார். மேலும், ஒரு முக்கிய அறிவிப்பாக, "சிறுமி கௌசிகா சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வரும்போது, அவர் தனது பாரதிதாசன் பள்ளியில் கட்டணமில்லா கல்வியைப் பயிலலாம். தொடர்ந்து எனது நண்பர்கள் மூலம் குழந்தைகளுக்கு உதவி செய்வதற்காக பேசி வருவதாகவும்" உறுதியளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சிறுமைக்கு காஞ்சிபுரம் மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு தன்னார்வலர்கள் உதவி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
New Year and Christmas special train: 12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
America Vs Venezuela: சீனாவுக்கு சென்ற கச்சா எண்ணெய் கப்பலை மடக்கிய அமெரிக்கா; வெனிசுலா கண்டனம் - பதற்றம்
சீனாவுக்கு சென்ற கச்சா எண்ணெய் கப்பலை மடக்கிய அமெரிக்கா; வெனிசுலா கண்டனம் - பதற்றம்
Maruti Swift Without Tax: வரி இல்லாமல் மாருதி ஸ்விஃப்ட் வாங்கணுமா! இப்படி வாங்கினால் ரூ.1.89 லட்சம் மிச்சம் - விவரம் இதோ
வரி இல்லாமல் மாருதி ஸ்விஃப்ட் வாங்கணுமா! இப்படி வாங்கினால் ரூ.1.89 லட்சம் மிச்சம் - விவரம் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
New Year and Christmas special train: 12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
America Vs Venezuela: சீனாவுக்கு சென்ற கச்சா எண்ணெய் கப்பலை மடக்கிய அமெரிக்கா; வெனிசுலா கண்டனம் - பதற்றம்
சீனாவுக்கு சென்ற கச்சா எண்ணெய் கப்பலை மடக்கிய அமெரிக்கா; வெனிசுலா கண்டனம் - பதற்றம்
Maruti Swift Without Tax: வரி இல்லாமல் மாருதி ஸ்விஃப்ட் வாங்கணுமா! இப்படி வாங்கினால் ரூ.1.89 லட்சம் மிச்சம் - விவரம் இதோ
வரி இல்லாமல் மாருதி ஸ்விஃப்ட் வாங்கணுமா! இப்படி வாங்கினால் ரூ.1.89 லட்சம் மிச்சம் - விவரம் இதோ
South Africa Gun Shoot: தென் ஆப்பிரிக்காவில் கொடூரம்; மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 9 பேர் உயிரிழப்பு - 10 பேர் காயம்
தென் ஆப்பிரிக்காவில் கொடூரம்; மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 9 பேர் உயிரிழப்பு - 10 பேர் காயம்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
Bahubali Rocket: இந்தியாவின் பாகுபலி ராக்கெட் தெரியுமா? ப்ளூபேர்ட் என்றால் என்ன? டவரே இல்லாமல் சிக்னல்...
Bahubali Rocket: இந்தியாவின் பாகுபலி ராக்கெட் தெரியுமா? ப்ளூபேர்ட் என்றால் என்ன? டவரே இல்லாமல் சிக்னல்...
உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!
உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!
Embed widget