Jayalalithaa Death Case: ஜெயலலிதா மரணம்: 3 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விசாரணையை தொடங்கிய ஆறுமுகசாமி ஆணையம்
இதுவரை 154-க்கும் மேற்பட்டோர் இந்த விசாரணையில் ஆஜராகி பதிலளித்துள்ளனர். அடுத்ததாக, எய்மஸ் பரிந்துரைத்த மருத்துவர்கள் குழு காணொளி வாயிலாக பங்கேற்பார்கள் என தகவல் கிடைத்துள்ளது.
![Jayalalithaa Death Case: ஜெயலலிதா மரணம்: 3 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விசாரணையை தொடங்கிய ஆறுமுகசாமி ஆணையம் Jayalalithaa Death Case: Arumugasamy commission resumes inquiry of the case Jayalalithaa Death Case: ஜெயலலிதா மரணம்: 3 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விசாரணையை தொடங்கிய ஆறுமுகசாமி ஆணையம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/07/3254ffe09d8ef16d302e2b63c050bbe3_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்தார். அவருடைய மரணத்தில் சில சந்தேகங்கள் இருப்பதாக சில கேள்வி எழுப்பியதை தொடர்ந்து இது தொடர்பாக விசாரிக்க ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. இது ஒய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள், சசிகலா மற்றும் அவருடைய உறவினர்கள் உள்பட பலரையும் விசாரித்தது. எனினும் தற்போது வரை இந்த ஆணையம் விசாரணையை முடிக்கவில்லை. இந்த ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு கொண்டு வந்தது.
இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் மீண்டும் விசாரணையை தொடங்கி உள்ளது. இதுவரை 154-க்கும் மேற்பட்டோர் இந்த விசாரணையில் ஆஜராகி பதிலளித்துள்ளனர். அடுத்ததாக, எய்மஸ் பரிந்துரைத்த மருத்துவர்கள் குழு காணொளி வாயிலாக பங்கேற்பார்கள் என தகவல் கிடைத்துள்ளது.
முன்னதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தது. அதில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்த தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தது. அந்த வழக்கில், ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் 2 ஆண்டுகள் இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து மருத்துவ குழு அமைத்து விசாரணையை நடத்த எய்ம்ஸ் இயக்குனரகத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி எய்ம்ஸ் மருத்துவர் நிகில் டாண்டன் தலைமையில் மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டது. இந்தச் சூழலில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து சசிகலா தரப்பு, அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்திடம் நீதிபதி ஆறுமுகசாமி இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இதில் காணொளி வாயிலாக எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் விசாரணை முடிவடைந்து 3-4 மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Sasikala AIADMK: “தொண்டர்களின் எதிர்ப்பார்ப்புகள், ஏக்கங்களை நிறைவேற்றுவேன்” - வி.கே.சசிகலா அறிக்கையின் அம்சங்கள்!https://t.co/iV5FKDCzAt#Sasikala #AIADMK
— ABP Nadu (@abpnadu) March 7, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)