மேலும் அறிய

லஞ்சம் இந்த அளவுக்கு விரிவடைந்துள்ளது துரதிர்ஷ்டவசமானது - மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை

’’மனுத்தாக்கல் செய்த கூடுதல் அரசு வழக்கறிஞர் கண்ணனை நீதிமன்றம் பாராட்டுகிறது. ஒவ்வொரு அரசு ஊழியரும் தங்களுக்கு லஞ்சம் கொடுக்க அணுகும்போது இவ்வாறு செயல்பட வேண்டும்''

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அரசு வழக்கறிஞருக்கு லஞ்சம் கொடுக்க அரசு ஊழியர் முயன்ற விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துணை காவல் கண்காணிப்பாளர் விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உதவியாளராகப் பணிபுரிபவர் குமாரவேல். இவர் மீது பணி நேரத்தில் சக ஊழியர் ஒருவருடன் தகராறு செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் இவருக்கு 3 ஆண்டு ஊதிய உயர்வை நிறுத்தி வைத்து 2013ஆம் ஆண்டு உத்தரவிடப்பட்டது. ஊதிய உயர்வு நிறுத்தத்தை 3 மாதமாக குறைக்கக் கோரி குமாரவேல், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் அரசு வழக்கறிஞர் கண்ணன் ஆஜராகி, "இந்த வழக்கின் மனுதாரர் எனது உதவியாளர்களிடம் நேரிலும், போனிலும், இந்த வழக்கில் தனக்கு சாதகமாக நடந்துகொண்டால் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருவதாகக் கூறியுள்ளார்" என தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி, "லஞ்சம் இந்த அளவுக்கு விரிவடைந்துள்ளது துரதிர்ஷ்டவசமானது. மனுதாரர் ஏற்கெனவே தண்டனை அனுபவித்து வருகிறார். அவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அரசு வழக்கறிஞர் அலுவலகத்துக்குள் நுழைந்து, தனது வழக்கு எந்த அரசு வழக்கறிஞருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தைத் தெரிந்துகொண்டு, அந்த வழக்கில் தனக்கு சாதகமாக நடந்து கொள்வதற்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருவதாக தைரியமாகக் கூறியுள்ளார்.

மனுதாரரின் இந்தச் செயலைக் கடுமையாக அணுக வேண்டும். கூடுதல் அரசு வழக்கறிஞரின் குற்றச்சாட்டு குறித்து மதுரை லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி விசாரணை நடத்தி ஜனவரி 19ஆம் ஆண்டில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். தனக்கு லஞ்சம் கொடுக்க முன்வந்த தகவலை நீதிமன்றத்துக்குக் கொண்டுவந்ததுடன், அது தொடர்பாக மனுத்தாக்கல் செய்த கூடுதல் அரசு வழக்கறிஞர் கண்ணனை நீதிமன்றம் பாராட்டுகிறது. ஒவ்வொரு அரசு ஊழியரும் தங்களுக்கு லஞ்சம் கொடுக்க அணுகும்போது இவ்வாறு செயல்பட வேண்டும்'' என கூறியுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget