மேலும் அறிய

தி.மலை: சும்மா எடுத்துச்செல்லக்கூட ஆள் இல்லை.. வெண்டைக்காய் தோட்டத்தை மாடுவிட்டு மேய்க்கும் விவசாயிகள்!

கொரோனா முழுஊரடங்கால் செங்கம் அருகே வெண்டைக்காய் பயிரிட்ட விவசாயி விற்பனை ஆகாததால் மாடு விட்டு மேய்த்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும்கொரோனா 2ம் அலைத்தொற்று பரவலால் பொதுமக்கள் பெரும்  பாதிப்பு உள்ளாகி வருகின்றனர். கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் தமிழகத்தில் கடந்த 10-ஆம் தேதி முதல் வரும் 24-ஆம் தேதி வரை தமிழக அரசு முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது.
பொது ஊரடங்கால் கடைகள் திறப்பதற்கு அனுமதியில்லை. காய்கறி மற்றும் மளிகை கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் காய்கறிகள் விற்பனை தேக்கம் அடைந்துள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவால் விவசாயிகள் வியாபாரிகள், வணிகர்கள், பொதுமக்கள் என பாதிப்புக்குள்ளானவர்கள் ஏராளம்.

 

தி.மலை: சும்மா எடுத்துச்செல்லக்கூட ஆள் இல்லை.. வெண்டைக்காய் தோட்டத்தை மாடுவிட்டு மேய்க்கும் விவசாயிகள்!

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தங்கள் விளைநிலங்களில் விளைவித்த வெண்டைக்காய் விலை இல்லாததாலும், கமிஷன் மண்டிகள் இல்லாததால் எங்குமே எடுத்துச் செல்ல முடியாத சூழல் நிலை உருவாகி உள்ளது .

வெண்டைகாய் பயிரிட்டுள்ள தோட்டத்தில் விவசாயிகள் தங்களது கால்நடைகளை  விட்டு மேய்த்து வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.தோட்டக்கலை பயிர்களை நம்பி வாழ்வாதாரத்தை சார்ந்துள்ள விவசாயிகள் இத்தகைய கொரோனா பரவலால் காய்கறிகள் விற்பனை ஆகாததால் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். 
வெண்டைக்காய் பயிரிட்டுள்ள விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு தங்களது வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாகவும் தமிழக அரசு விவசாயிகள் நலன் கருதி நிவாரணம் வழங்கினால் விவசாயிகளுக்கு பேருதவியாக இருக்கும் என விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

இதைப்பற்றி  தெரிவித்த விவசாயி ரவி, திருவண்ணாமலை மாவட்டம் மேல்செங்கம் கிராமத்தை சேர்ந்தவன் நான் பல தலைமுறையாக விவசாயம் செய்து வருக்கிறோம் தற்சமயம் என்னிடத்தில் 2 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் பருவத்திற்கு ஏற்றார் போல் விவசாயம் செய்துவருகிறோம். தற்போது எங்கள் விலை நிலத்தில் 1 ஏக்கர் வெண்டைக்காய் நட்டுள்ளோம். எங்கள் பகுதியில் விளைவிக்கும் காய்கறிகளை கர்நாடகா மாநிலம் பெங்களூருவுக்கு  ஏற்றுமதி செய்து வந்தோம். முதல் கொரோனா பரவல் பொழுதே எங்களுக்கு விவசாயத்தில் பெரிய நஷ்டம் ஏற்பட்டது.இப்போது கொரோனா தொற்று இரண்டாவது அலை பரவல் காரனமாக கர்நாடகா மாநில முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

 

தி.மலை: சும்மா எடுத்துச்செல்லக்கூட ஆள் இல்லை.. வெண்டைக்காய் தோட்டத்தை மாடுவிட்டு மேய்க்கும் விவசாயிகள்!


தமிழக அரசு  பொது ஊரடங்கால் கடைகள் திறப்பதற்கு அனுமதியில்லை. காய்கறி மற்றும் மளிகை கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் வெண்டைக்காய் வாங்க ஆள் இல்லை.

 

தி.மலை: சும்மா எடுத்துச்செல்லக்கூட ஆள் இல்லை.. வெண்டைக்காய் தோட்டத்தை மாடுவிட்டு மேய்க்கும் விவசாயிகள்!

வெண்டைக்காயை  மீண்டும் எடுத்து செல்ல மனம் இல்லாததால்  கடைகாரரிடம் இலவசமாக எடுத்து கொள்ளுங்கள் என்று கூறினேன்.  அதனை அவர் மறுத்துவிட்டார். இலவசமாகக்கூட எடுத்து செல்ல யாரும் வராததால் வெண்டைக்காய் தோட்டத்தில் மாடுகள் விட்டு மேய்த்து வருகிறேன். தமிழக அரசு விவசாயிகளின் வேதனைகளை புரிந்து கொண்டு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Top 5 Cars India: டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
ABP Premium

வீடியோ

LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah
ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Top 5 Cars India: டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
Embed widget