மேலும் அறிய

பீகார் தேர்தல் முடிவுகள் 2025

(Source:  ECI | ABP NEWS)

மாணவர்களுக்கு அடிச்ச ஜாக்பாட்.. ரெனால்ட் நிசான் நிறுவனத்துடன் கைக்கோர்க்கும் ஐஐடி மெட்ராஸ்!

மாணவர்களுக்கு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பை வழங்கும் நோக்கில் ரெனால்ட் நிசான் டெக்னாலஜி நிறுவனத்துடன் ஐஐடி மெட்ராஸ் கைக்கோர்க்க உள்ளது.

ரெனால்ட் நிசான் டெக்னாலஜி - பிசினஸ் சென்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் ஐஐடி மெட்ராஸ் கைக்கோர்க்க உள்ளது. திறன் மேம்பாடு மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்காக ஐஐடி மெட்ராஸ், இந்த புதிய முயற்சியில் இறங்கியுள்ளது. 

மாணவர்களுக்கு அடிச்ச ஜாக்பாட்:

இந்தக் கூட்டாண்மையின் மூலம் பிஎஸ் பட்டப்படிப்பில் ஈடுபட்டுள்ள 35,000 மாணவ-மாணவிகளுக்கு உள்ளகப் பயிற்சி, பணிநியமன வாய்ப்புகளை சென்னை ஐஐடி வழங்கும். திறன் மேம்பாடு, அறிவுப் பரிமாற்றத்தை வளர்ப்பதற்கு இது வலுமான கட்டமைப்பை ஏற்படுத்தும்.

இந்தக்கூட்டு முயற்சியின் அடிப்படையில் ரெனால்ட் நிசான் டெக் நிபுணர்கள் தலைமையிலான குழுவினர் வழிகாட்டுதல் திட்டங்கள், கலந்தாலோசனை அமர்வுகள், தலைமைப் பண்புக்கான உரையாடல்கள் மூலம் கல்வி அனுபவத்தை மேம்படுத்த உள்ளனர்.

கடந்த நவம்பர் மாதம் 15ஆம் தேதி, சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாற்றம் செய்து கொள்ளப்பட்டது.

ரெனால்ட் நிசான் நிறுவனத்துடன் கைக்கோர்க்கும் ஐஐடி:

இந்த கூட்டாண்மையை வரவேற்றுப் பேசிய சென்னை ஐஐடி டீன் (கல்வி பாடப்பிரிவுகள்) பேராசிரியர் பிரதாப் ஹரிதாஸ், “ரெனால்ட் நிசான் டெக் நிறுவனத்துடனான இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கல்விக்கும் கார்ப்பரேட் உலகங்களுக்கும் இடையே இணைப்பைக் கட்டமைக்கும். இது, ஐஐடி மெட்ராஸின் தொலைநோக்குப் பார்வைக்கு ‘சிறந்த எடுத்துக்காட்டு.

ரெனால்ட் நிசான் டெக் நிறுவனமும் சென்னை ஐஐடியும் இணைந்து, பல்வேறு படிப்புகளை எவ்வாறு செயல்படுத்த முடியும் என்பதன் அடிப்படையில் ஒத்துழைப்புக்கான அளவுகோலை நிர்ணயிக்கின்றன. பெருநிறுவனங்கள் துறையுடன் இதுபோன்ற மேலும் பல ஈடுபாடுகளை எதிர்பார்க்கிறோம்” என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தக் கூட்டு முயற்சி குறித்துப் பேசிய ரெனால்ட் நிசான் டெக் நிர்வாக இயக்குநர் டெபாசிஸ் நியோகி, "கல்வி மற்றும் தொழில்துறைக்கு இடையிலான கூட்டு முயற்சியில் புதுமைகளை வளர்ப்பதற்கும் எதிர்காலத்தில் வரவிருக்கும் திறமைகளை மேம்படுத்திக் கொள்வதற்கும் இந்த ஒத்துழைப்பு இன்றியமையாதது எனக் கருதுகிறோம்.

சென்னை ஐஐடி உடனான இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், மாணவர்களுக்கு அதிகாரம் அளிப்பதுடன், தொழில் வல்லுநர்களை மேம்படுத்தும். அத்துடன் வாகன மற்றும் தொழில்நுட்பத்துறையில் மாறிவரும் சவால்களை எதிர்கொள்ளும் அமைப்பை உருவாக்கும். தொழில்துறை தலைவர்களையும் நாளைய தீர்வுகளையும் ஒரே நேரத்தில் நாங்கள் உருவாக்குகிறோம்” என்றும் அவர்  குறிப்பிட்டார்.

சென்னை ஐஐடி-யின் (மக்கள் தொடர்பு மற்றும் டிஜிட்டல் கல்வி மையம்) தலைவரும் பிஎஸ் பட்டப்படிப்பு மற்றும் என்பிடெல் ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் ஆண்ட்ரூ தங்கராஜ் பேசுகையில், “இந்த ஒத்துழைப்பு கல்விக்கும் தொழில்துறைக்கும் இடையே உள்ள கூட்டுறவை பிரதிபலிக்கிறது.

இதில் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் பலத்தையும் பலன்களையும் பெறுகின்றனர். பெரு நிறுவன சமூகப் பொறுப்புணர்வு முன்முயற்சிகள், வழிகாட்டுதல் திட்டங்கள், பயிற்சி வாய்ப்புகள் வாயிலாக ரெனால்ட் நிசான் டெக் அளித்துவரும் ஆதரவு சென்னை ஐஐடி மாணவர்களின் கற்றல் பயணத்தை மேம்படுத்துகிறது" என்றார்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi on Defeat: “நியாயமற்ற தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை“ - பீகார் தோல்விக்குப் பின் ராகுல் கூறியது என்ன.?
“நியாயமற்ற தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை“ - பீகார் தோல்விக்குப் பின் ராகுல் கூறியது என்ன.?
முதல்வர் ஸ்டாலின் மாஸ்டர்பிளான்..! திமுகவில் முதன்முறையாக பிராமணருக்கு கட்சிப் பதவி.!
முதல்வர் ஸ்டாலின் மாஸ்டர்பிளான்..! திமுகவில் முதன்முறையாக பிராமணருக்கு கட்சிப் பதவி.!
Edappadi Palanisamy: ’’இங்கு ஒவ்வொரு தொகுதியிலும் 50 ஆயிரம் போலி வாக்காளர்கள்’’ - பகீர் கிளப்பிய எடப்பாடி பழனிசாமி
’’இங்கு ஒவ்வொரு தொகுதியிலும் 50 ஆயிரம் போலி வாக்காளர்கள்’’ - பகீர் கிளப்பிய எடப்பாடி பழனிசாமி
Prashant Kishor: கணக்குப் போட்டவர் கோட்டை விட்டார்; டக் அவுட் ஆன பிரசாந்த் கிஷோர் - அரசியலை விட்டு விலகலா.?
கணக்குப் போட்டவர் கோட்டை விட்டார்; டக் அவுட் ஆன பிரசாந்த் கிஷோர் - அரசியலை விட்டு விலகலா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tirupattur School Caste issue | சாதி பெயரை சொல்லி திட்டிய சத்துணவு பெண்!சிறுவன் கண்ணீர் வாக்குமூலம்
Rahul vs Tejashwi Yadav | காங்கிரஸ் கவலைக்கிடம்!ஆத்திரத்தில் தேஜஸ்வி தரப்பு!தோல்விக்கான காரணம் என்ன?
Bihar Election 2025 | மீண்டும் அரியணையில் நிதிஷ்?36 வயதில் சாதிப்பாரா தேஜஸ்வி!காங்கிரஸ் நிலைமை என்ன?
Tejashwi Yadav | பெற்றோரை CM ஆக்கிய தொகுதி! தேஜஸ்விக்கு கைகொடுக்குமா? ராகோபூர் தொகுதி சுவாரஸ்யம்
Sundar c quits thalaivar 173|என்னால முடியல’’சுந்தர்.சி-யின் திடீர் முடிவு!ரஜினியின் அடுத்த DIRECTOR?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi on Defeat: “நியாயமற்ற தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை“ - பீகார் தோல்விக்குப் பின் ராகுல் கூறியது என்ன.?
“நியாயமற்ற தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை“ - பீகார் தோல்விக்குப் பின் ராகுல் கூறியது என்ன.?
முதல்வர் ஸ்டாலின் மாஸ்டர்பிளான்..! திமுகவில் முதன்முறையாக பிராமணருக்கு கட்சிப் பதவி.!
முதல்வர் ஸ்டாலின் மாஸ்டர்பிளான்..! திமுகவில் முதன்முறையாக பிராமணருக்கு கட்சிப் பதவி.!
Edappadi Palanisamy: ’’இங்கு ஒவ்வொரு தொகுதியிலும் 50 ஆயிரம் போலி வாக்காளர்கள்’’ - பகீர் கிளப்பிய எடப்பாடி பழனிசாமி
’’இங்கு ஒவ்வொரு தொகுதியிலும் 50 ஆயிரம் போலி வாக்காளர்கள்’’ - பகீர் கிளப்பிய எடப்பாடி பழனிசாமி
Prashant Kishor: கணக்குப் போட்டவர் கோட்டை விட்டார்; டக் அவுட் ஆன பிரசாந்த் கிஷோர் - அரசியலை விட்டு விலகலா.?
கணக்குப் போட்டவர் கோட்டை விட்டார்; டக் அவுட் ஆன பிரசாந்த் கிஷோர் - அரசியலை விட்டு விலகலா.?
செங்கல்பட்டு அருகே பயிற்சி விமானம் நொறுங்கியது! இறுதியில் உயிர் தப்பிய விமானி! நடந்தது என்ன?
செங்கல்பட்டு அருகே பயிற்சி விமானம் நொறுங்கியது! இறுதியில் உயிர் தப்பிய விமானி! நடந்தது என்ன?
பீகார் முடிவு... செம குஷியில் திமுக.! காங்கிரஸ் இனி வாலாட்ட முடியாது
பீகார் முடிவு... செம குஷியில் திமுக.! காங்கிரஸ் இனி வாலாட்ட முடியாது
Gold Rate Nov. 14th: உன்னால சந்தோஷம் கூட தர முடியுமா.? ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 குறைந்த தங்கம் - தற்போது விலை என்ன.?
உன்னால சந்தோஷம் கூட தர முடியுமா.? ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 குறைந்த தங்கம் - தற்போது விலை என்ன.?
Chennai Power Shutdown: சென்னையில நவம்பர் 15-ம் தேதி எங்கெங்க மின்சார தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
சென்னையில நவம்பர் 15-ம் தேதி எங்கெங்க மின்சார தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
Embed widget