மேலும் அறிய

Central Govt: 14 மாநிலங்களில் பேரிடர் தடுப்பு பணிகள் - தமிழ்நாட்டிற்கு ஒதுக்கிய நிதி எவ்வளவு? மத்திய அரசு அதிரடி

Central Govt: உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்மட்ட குழு, பல்வேறு மாநிலங்களுக்கான பேரிடர் தணிப்பு மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

Central Govt: மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத், அகமதாபாத் மற்றும் புனே ஆகிய நகரங்களில் நகர்ப்புற வெள்ள மேலாண்மைக்கு ரூ.2514.36 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அமித் ஷா தலைமையிலான உயர்மட்ட குழு:

மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவு அமைச்சருமான அமித் ஷா தலைமையில் ஒரு உயர்மட்ட குழு, பல்வேறு மாநிலங்களுக்கான பேரிடர் தணிப்பு மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. நிதியமைச்சர், விவசாய அமைச்சர் மற்றும் நிதி ஆயோக் துணைத் தலைவர் உறுப்பினர்களைக் கொண்ட உயர்மட்ட குழுவின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. 

பல்வேறு மாநிலங்களுக்கான திட்டங்கள்:

தெலங்கானா, குஜராத், கர்நாடகா, மேற்கு வங்காளம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மொத்தம் ரூ.60 கோடி செலவில் ஆறு திட்ட முன்மொழிவுகளுக்கு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத் மற்றும் புனே ஆகிய ஆறு பெருநகரங்களில் நகர்ப்புற வெள்ள மேலாண்மைக்கு 2514.36 கோடி ஒதுக்கப்பட்டது.

தமிழ்நாட்டிற்கான திட்டங்கள்:

முன்னதாக, எச்எல்சி, நவம்பர் 27, 2023 அன்று , சென்னை நகரில் வெள்ள மேலாண்மைக்கான ஒருங்கிணைந்த தீர்வுகளுக்கான திட்ட முன்மொழிவுக்கு ரூ. 561.29 கோடி ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் கூடுதலாக அசாம், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு "மாநிலங்களில் தீயணைப்பு சேவைகளின் விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கல்" திட்டத்தின் கீழ் ரூ.810.64 கோடி மதிப்பிலான மூன்று திட்ட முன்மொழிவுகளுக்கு உயர்மட்ட குழு ஒப்புதல் அளித்துள்ளது. தேசிய பேரிடர் நிவாரண நிதியின் (NDRF) கீழ் 5000 கோடி இந்த திட்டத்திற்காக மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிலையில், ஏற்கனவே 11 மாநிலங்களின் திட்டங்களுக்கு மொத்தமாக ரூ. 1691.43 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களுக்கு பயிற்சி:

NDRF இலிருந்து ரூ.470.50 கோடி செலவில் யுவாஆப்தமித்ரா திட்டத்தின் (YAMS) திட்டத்திற்கு உயர்மட்ட குழு ஒப்புதல் அளித்துள்ளது. இது நாட்டின் 315 பேரிடர் பாதிப்புக்குள்ளாகும் மாவட்டங்களில், 1300 பயிற்சி பெற்ற ஆப்த மித்ரா தன்னார்வலர்களுக்கு மாஸ்டர் ட்ரெய்னர்களாகவும், 2.37 லட்சத்திற்கும் பயிற்சி அளிக்கும் வகையில் செயல்படுத்தப்படும் திட்டமாகும். NCC, NSS, NYKS மற்றும் BS&G (பாரத் சாரணர்கள் & வழிகாட்டிகள்) ஆகியவற்றிலிருந்து பிரத்தியேகமாக இளைஞர்களை, எந்த ஒரு பேரிடரின் போதும் சேவையில் ஈடுபடுத்த தயார்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அரசாங்கம் “ஆப்தா மித்ரா” திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இதன் கீழ் நாட்டின் 350 பேரிடர் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் சுமார் 1 லட்சம் சமூக தன்னார்வலர்களுக்கு பேரிடர் மீட்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த திறமையான மற்றும் பயிற்சி பெற்ற 'அப்தா மித்ராஸ்' மற்றும் 'அப்தா சாகிஸ்' ஆகியோர் எந்த ஒரு பேரழிவையும் எதிர்கொள்வதில் உள்ளூர் நிர்வாகத்திற்கு உதவுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

நடப்பு நிதியாண்டில், மாநில பேரிடர் நிவாரண நிதியின் (SDRF) கீழ் 14 மாநிலங்களுக்கு 6348 கோடி ரூபாயும், மாநில பேரிடர் தணிப்பு நிதியின் (SDMF) கீழ் 6 மாநிலங்களுக்கு 672 கோடி ரூபாயும் மத்திய அரசு வழங்கியுள்ளது. மேலும், தேசிய பேரிடர் நிவாரண நிதியின் (NDRF) கீழ் 10 மாநிலங்களுக்கு ரூ.4265 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jolarpettai Murder: LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | Collector

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி - பெண் போலீசுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞர்!
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி - பெண் போலீசுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞர்!
L Murugan :
L Murugan : "யாருடன் கூட்டணி? தாய் மொழிக்கு முக்கியத்துவம்” அடித்து பேசிய எல்.முருகன்..!
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
P. Chidambaram :  ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
P. Chidambaram : ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.