மேலும் அறிய

தருமபுரி: கேஸ் சிலிண்டரை வைத்து தற்கொலை மிரட்டல்; தேவாலயத்தில் நடந்த போராட்டம்..!

தூய இருதய ஆண்டவர் ஆலய வளாகத்தில் 50க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அரூர் தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில், கிருத்துவ மக்களுக்கு சலுகைகளை மீண்டும் வழங்க வலியுறுத்தி, கேஸ் சிலிண்டரை வைத்துக் கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்த 6 பெண்கள் உட்பட 17 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம் அரூர் ரவுண்டானாவில் துாய இருதய ஆண்டவர் ஆலயம் உள்ளது.  இந்த ஆலயத்திற்கு அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில், 350க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ குடும்பத்தினர் வழிபாடு செய்ய வருகின்றனர். இதற்கு பள்ளி, திருமண மண்டபம் உள்ளிட்ட சொத்துக்கள் உள்ளது. இந்த தேவாலயத்திற்கு வரும் குடும்பத்தினருக்கு சுப, துக்க நிகழ்விற்கு உதவித் தொகைகள் வழங்கப்பட்டு வந்தது. மேலும் இந்த பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு கட்டணம் இல்லை. இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக புதிய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் தூய இருதய ஆண்டவர் ஆலயம் செயல்பட்டு வருகிறது. இந்த புதிய நிர்வாகம் சலுகைகள் எதுவும் வழங்குவதில்லை என மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதனால் கடந்த சில மாதங்களாக தேவாலய நிர்வாகிகளிடம், இங்குள்ள மக்களுக்கு இடம் வாங்கி வீடு கட்டித்தர வேண்டும். கடந்த காலங்களை போல், மாணவர்களுக்கு படிப்பு கட்டணம் வசூலிக்கக் கூடாது. துக்க நிகழ்ச்சிகளுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கிறிஸ்தவர்கள்  உள்ளிருப்பு, தர்ணா உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.


தருமபுரி: கேஸ் சிலிண்டரை வைத்து தற்கொலை மிரட்டல்; தேவாலயத்தில் நடந்த போராட்டம்..!

ஆனால் தொடர்ந்து கிருத்தவ மக்களின் கோரிக்கைக்கு, நிர்வாகம் செவி சாய்க்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் நேற்று இரவு துாய இருதய ஆண்டவர் ஆலய வளாகத்தில் உள்ள அருளகத்தில் புகுந்து அங்கிருந்த பங்கு தந்தை பெல்லார்மின், 60, அவரது சகோதரர் ஆரோக்கியசாமி, ரெக்ஸ், சமையலர் அந்தோனியம்மாள் ஆகியோரை தகாத வார்த்தையால் திட்டி வெளியேற்றியுள்ளனர். தொடர்ந்து, சமையலறையில் இருந்த காஸ் சிலிண்டரை வெளியே எடுத்து வந்து வாசலில் இருந்த ஷட்டரை பூட்டிக் கொண்டு உள்ளே வந்தால் காஸ் சிலிண்டரை வெடிக்க வைத்து விடுவோம் என மிரட்டல்  விடுத்துள்ளனர். இதனையறிந்த காவல் துறையினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டம் நடத்தி கொண்டு இருந்தனர். தொடர்ந்து தருமபுரி மாவட்ட எஸ்.பி., கலைச்செல்வன் நள்ளிரவில் நேரில் வந்து  பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் வெளியில் வரவில்லை. 

இதையடுத்து, அதிரடியாக பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே நுழைந்த காவல் துறையினர் மணி, மைக்கேல் ராஜ், ராஜா, முத்து, செளரி, ஈஸ்டர்ராஜா, செல்வம்,  இளையரசன், போஸ் உள்ளிட்ட 11 ஆண்கள் மற்றும் அந்தோனியம்மாள்,  மரியம்மாள், செல்வி, சாந்தி, ராணி, ஸ்டெல்லாமேரி என மொத்தம், 17 பேர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து தூய இருதய ஆண்டவர் ஆலய வளாகத்தில் 50க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கூட விஜய்..போராட்டம் திமுகவுக்கு எதிராக, ஆனால், விஜய்யை அடிமட்டமாக விமர்சித்த அண்ணாமலை
நடிகை கூட விஜய்..போராட்டம் திமுகவுக்கு எதிராக, ஆனால், விஜய்யை அடிமட்டமாக விமர்சித்த அண்ணாமலை
சீறிய அண்ணாமலை ”டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் போட்டோ ஒட்டும் போராட்டம்”
சீறிய அண்ணாமலை ”டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் போட்டோ ஒட்டும் போராட்டம்”
TN Weather: தமிழ்நாட்டில் இன்று இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு.! லிஸ்ட் இதோ.!
தமிழ்நாட்டில் இன்று இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு.! லிஸ்ட் இதோ.!
RCB Unbox Event 2025: அன்பாக்ஸ் ஈவென்டில் சிக்ஸர் மழை பொழிந்த ஆர்சிபி வீரர்கள் - வீடியோவை பாருங்க
RCB Unbox Event 2025: அன்பாக்ஸ் ஈவென்டில் சிக்ஸர் மழை பொழிந்த ஆர்சிபி வீரர்கள் - வீடியோவை பாருங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Sengottaiyan: சுத்துப்போட்ட எம்எல்ஏ-க்கள்..! செங்கோட்டையனுக்கு செக்! எடப்பாடி பக்கா ஸ்கெட்ச்!AR Rahman : ”முன்னாள் மனைவினு சொல்லாதீங்க” ஆடியோ வெளியிட்ட சாய்ராபானு! இணையும் ரஹ்மான் தம்பதி?OPS Son Jaya Pradeep: ”அதிமுகவின் உண்மை தொண்டன்” செங்கோட்டையனுக்கு ஆதரவு! ஓபிஎஸ் மகன் செக்!Sivagangai Bonded labour : ”தமிழ்நாட்டில் ஓர் ஆடுஜீவிதம்” 20 ஆண்டு கொத்தடிமை! மீட்கப்பட்ட பின்னணி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கூட விஜய்..போராட்டம் திமுகவுக்கு எதிராக, ஆனால், விஜய்யை அடிமட்டமாக விமர்சித்த அண்ணாமலை
நடிகை கூட விஜய்..போராட்டம் திமுகவுக்கு எதிராக, ஆனால், விஜய்யை அடிமட்டமாக விமர்சித்த அண்ணாமலை
சீறிய அண்ணாமலை ”டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் போட்டோ ஒட்டும் போராட்டம்”
சீறிய அண்ணாமலை ”டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் போட்டோ ஒட்டும் போராட்டம்”
TN Weather: தமிழ்நாட்டில் இன்று இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு.! லிஸ்ட் இதோ.!
தமிழ்நாட்டில் இன்று இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு.! லிஸ்ட் இதோ.!
RCB Unbox Event 2025: அன்பாக்ஸ் ஈவென்டில் சிக்ஸர் மழை பொழிந்த ஆர்சிபி வீரர்கள் - வீடியோவை பாருங்க
RCB Unbox Event 2025: அன்பாக்ஸ் ஈவென்டில் சிக்ஸர் மழை பொழிந்த ஆர்சிபி வீரர்கள் - வீடியோவை பாருங்க
TNPSC Update: தேர்வர்களே.. வெளியான அப்டேட்- குரூப் 1, குரூப் 4 தேர்வுகள் எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்!
தேர்வர்களே.. வெளியான அப்டேட்- குரூப் 1, குரூப் 4 தேர்வுகள் எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்!
TASMAC scam: ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல்: அண்ணாமலை கைது - அன்புமணி கண்டனம்
TASMAC scam: ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல்: அண்ணாமலை கைது - அன்புமணி கண்டனம்
ராதிகாவை பார்க்கும்போது எல்லாம் செருப்பை பார்க்கும் ரஜினிகாந்த்! ஏன் இப்படி பண்றாரு?
ராதிகாவை பார்க்கும்போது எல்லாம் செருப்பை பார்க்கும் ரஜினிகாந்த்! ஏன் இப்படி பண்றாரு?
பரோட்டோனா சும்மாவா.! உலகளவில் டாப் 8 இடங்களை பெற்ற இந்திய ரொட்டிகள்.!
பரோட்டோனா சும்மாவா.! உலகளவில் டாப் 8 இடங்களை பெற்ற இந்திய ரொட்டிகள்.!
Embed widget