மேலும் அறிய

கரூர் : 150 தடுப்பூசிகள் கையிருப்பு இருந்த நிலையில், 700 பேர் திரண்டதால் பரபரப்பு!

கரூர் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தடுப்பூசி முகாமில் 150 நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போட டோக்கன் வழங்கப்பட்டு இருந்த நிலையில் சுமார் 700 நபர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள குவிந்தனர்

கரூரில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் முறையான அறிவிப்பு மற்றும் சரியான விளக்கம் இல்லாமல் தடுப்பூசி போடப்பட்டதால், தேவையின்றி மக்கள் குவிந்து தொற்று பரவும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். தடுப்பூசி போடும் மையத்தில் அதிகாரிகளை  முற்றுகையிட்ட பொதுமக்கள் சரமாரியாக கேள்வி கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது


கரூர் : 150 தடுப்பூசிகள் கையிருப்பு இருந்த நிலையில், 700 பேர் திரண்டதால் பரபரப்பு!

கரூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 6 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. குளித்தலை அரசு மருத்துவமனையில் 50 தடுப்பூசிகளும்,  ஆரம்ப சுகாதார நிலையத்தில் 50 தடுப்பூசிகளும்,  கரூர் நகராட்சி பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 150 தடுப்பூசிகள்,  கடவூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக மட்டும் 50 தடுப்பூசிகள், அரவக்குறிச்சி பகுதியில் 100 தடுப்பூசிகள், தான்தோன்றிமலை பகுதியில் 100 தடுப்பூசிகள் என மொத்தம் 500 தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.
கரூர் : 150 தடுப்பூசிகள் கையிருப்பு இருந்த நிலையில், 700 பேர் திரண்டதால் பரபரப்பு!

இந்த நிலையில், கரூர் நகராட்சி பகுதியில் உள்ள பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் 150 நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போட டோக்கன் வழங்கப்பட்டு இருந்தது.  இந்த நிலையில் சரியான விளக்கம் மற்றும் அறிவிப்பு மக்களுக்கு செல்லாததால் சுமார் 700 நபர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள குவிந்தனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.


கரூர் : 150 தடுப்பூசிகள் கையிருப்பு இருந்த நிலையில், 700 பேர் திரண்டதால் பரபரப்பு!

150 தடுப்பூசி மட்டுமே உள்ள நிலையில் 700 நபர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள குவிந்ததால், சுகாதார அலுவலர்கள் செய்வதறியாது தடுமாறினர். தடுப்பூசி பற்றாக்குறையை கண்டித்து அங்குள்ள சுகாதார அலுவலர்கள் முற்றுகையிட்ட பொதுமக்கள் அறிவிக்கப்பட்டுள்ள 150 தடுப்பூசிக்கு  எத்தனை பேருக்கு டோக்கன் கொடுத்துள்ளீர்கள். இன்றைய (01-06-21) தேதியில் தடுப்பூசி போட்டுக் கொள்ள டோக்கன் வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது, தடுப்பூசி இல்லை முடிந்துவிட்டது என எப்படி கூறுகிறீர்கள்? என சரமாரியாக கேள்வி கேட்டனர். 


கரூர் : 150 தடுப்பூசிகள் கையிருப்பு இருந்த நிலையில், 700 பேர் திரண்டதால் பரபரப்பு!

முறையான தகவல் மற்றும் வெளிப்படையான அறிவிப்பு இல்லாததால் தேவையின்றி மக்கள் பலர் குவியும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தொற்று பரவும் நிலை ஏற்பட்டுள்ளது என குற்றம் சாட்டினர். மேலும், கரூர் நகர பகுதியில் ஒரே இடத்தில் மட்டும் தடுப்பூசி போடுவதால் கூட்டம் அலை மோதுகிறது. இதனை கட்டுப்படுத்த கரூர் நகரில் இரண்டு அல்லது  மூன்று இடங்களில் தடுப்பூசி போடும் மையத்தை உருவாக்கவேண்டும் என்றும், முதல் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு எந்த குறுந்தகவலும் அனுப்பப்படுவதில்லை எனவே, இது மக்கள் மத்தியில் அதிருப்தியையும் மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது எனவே, தமிழக முதல்வர் இதில் சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Trump on 3rd World War: மூன்றாம் உலகப் போரை நோக்கி செல்கிறோம்; ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை; எதற்காக தெரியுமா.?
மூன்றாம் உலகப் போரை நோக்கி செல்கிறோம்; ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை; எதற்காக தெரியுமா.?
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Trump on 3rd World War: மூன்றாம் உலகப் போரை நோக்கி செல்கிறோம்; ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை; எதற்காக தெரியுமா.?
மூன்றாம் உலகப் போரை நோக்கி செல்கிறோம்; ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை; எதற்காக தெரியுமா.?
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை; 2 ஆண்டுகளில் 5.31 லட்சம் வீழ்ச்சி- எழும் கேள்விகள்
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை; 2 ஆண்டுகளில் 5.31 லட்சம் வீழ்ச்சி- எழும் கேள்விகள்
Chennai Power Cut: சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
Maruti Ciaz: பட்ஜெட் விலையில் கார் வாங்கனுமா? Maruti Ciaz விலை, மைலேஜ் எப்படி?
Maruti Ciaz: பட்ஜெட் விலையில் கார் வாங்கனுமா? Maruti Ciaz விலை, மைலேஜ் எப்படி?
Embed widget