மேலும் அறிய

குழந்தைகளுக்கு நாம் சேர்த்து வைக்கும் சொத்து குடும்ப நல அறுவை சிகிச்சை- கரூர் ஆட்சியர்

கரூர் மாவட்டம் குளித்தலை அண்ணா சமுதாய மன்றத்தில்மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக அதிக பிறப்புள்ள தாய்மார்கள் மற்றும் அவரது குடும்ப நபர்களுக்கு கருத்தடை குறித்த விழிப்புணர்வு முகாம்.

குழந்தைகளுக்கு நாம் சேர்த்து வைக்கும் சொத்து அதிகமாக குழந்தை பெற்றுக் கொள்ளாமல் உரிய காலத்தில் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து கொள்வதுதான் என  மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு சங்கர் கருத்தடை குறித்த விழிப்புணர்வு முகாமில் தகவல் தெரிவித்துள்ளார்.

 


குழந்தைகளுக்கு நாம் சேர்த்து வைக்கும் சொத்து குடும்ப நல அறுவை சிகிச்சை- கரூர் ஆட்சியர்

 

கரூர் மாவட்டம் குளித்தலை அண்ணா சமுதாய மன்றத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக அதிக பிறப்புள்ள தாய்மார்கள் மற்றும் அவரது குடும்ப நபர்களுக்கு கருத்தடை குறித்த விழிப்புணர்வு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது,

 

 


குழந்தைகளுக்கு நாம் சேர்த்து வைக்கும் சொத்து குடும்ப நல அறுவை சிகிச்சை- கரூர் ஆட்சியர்

 

 

தாய்மார்கள் மற்றும் இங்கு வந்திருக்கக்கூடிய அற்புதமான இனிமையான குழந்தைகள் அனைவரையும் வருக என்று வரவேற்கிறேன். தாய்மார்கள் உடன் வருகை புரிந்திருக்கும் கணவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். முதலில் இந்த நிகழ்ச்சி எதற்காக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவேண்டும். உங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கான திறவுகோலுக்கான கூட்டம். உங்கள் குடும்பத்திற்கு மகிழ்ச்சி அளிக்கும் கூட்டம். இந்த துறைக்கு குடும்ப நலன் துறை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.  இதற்கு முன்னதாக குடும்ப கட்டுப்பாட்டு என்று சொல்வார்கள். 

என் குடும்பத்தில் நான் ஒரே குழந்தை தான். என்னை நல்லபடியாக படிக்க வைத்தார்கள் சந்தோசமாக வைத்தார்கள். அதேபோல் நீங்கள் அதிகபட்சம் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ளக்கூடாது அப்போதுதான் உங்கள் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் நாம் செய்து கொடுக்க முடியும். நல்ல கல்வி அளிக்க முடியும், நல்ல உணவு அளிக்க முடியும் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க முடியும். உங்கள் குழந்தை உங்களுக்கு பிடித்திருக்கிறது உண்மை என்றால் அதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க நீங்கள் முன்வர வேண்டும். இந்த கூட்டத்தில் படித்து அரசு வேலைக்கு வந்துள்ளவர்களில் அதிக அளவில் பணியில் உள்ள பெண்கள் தான் இருக்கிறீர்கள் இதிலிருந்து நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் பெண்கள் நல்லா படிப்பார்கள் பணிக்கு செல்வார்கள் என்பது உறுதியாக தெரிகிறது.  அதனால் பெண் பிள்ளைகள் மட்டும் இருக்கிறது ஆண் பிள்ளைகள் இல்லை என்று யாரும் வருத்தப்படக்கூடாது.  மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு உடல் ரீதியான சத்து குறைபாடுகள் ஏற்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அதிக குழந்தை வேண்டாம் என்று நினைப்பவர்கள் மருத்துவத்துறையில் அறிவியல் ரீதியாக தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இயற்கையாக தடுக்க முடியாது. அதனால் குடும்ப நல அறுவை சிகிச்சை மேற்கொள்ள முன்வர வேண்டும். குறிப்பாக பெண்களை விட ஆண்கள் குடும்ப நல அறுவை சிகிச்சை மேற்கொள்ள முன்வர வேண்டும். குடும்ப நல அறுவை சிகிச்சை குறித்து அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது இருந்த போதும் சில பெண்கள் குடும்ப சூழ்நிலை மற்றும் சமுதாய பிரச்சனை உள்ளது என்ற காரணத்தை கூறி அறுவை சிகிச்சை மேற்கொள்ள முன்வராமல் அதிக அளவில் குழந்தைகளை பெற்று வருகிறார்கள் இது தவறான செயலாகும்.

 

 

 


குழந்தைகளுக்கு நாம் சேர்த்து வைக்கும் சொத்து குடும்ப நல அறுவை சிகிச்சை- கரூர் ஆட்சியர்

 

 

கரூர் மாவட்டத்தில் ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சை செய்வதற்கு தங்க தந்தை என்ற ஒரு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தங்க தந்தை திட்டத்தில் மிகவும் எளிமையான முறையில் கத்தியின்றி, இரத்தமின்றி அறுவை சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் செய்து வைக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் ஆண்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக 5 ஆயிரம் ரூபாய் பரிசாகவும், அத்துடன் அரசு நலத்திட்ட உதவிகளாக தொழில் தொடங்குவதற்கு வங்கி கடன்கள், இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்டவைகள் வழங்கி ஊக்கிவிக்கப்படுகிறது. தங்க தந்தை திட்டம் கரூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது இதில் பயன்பெற ஆண்கள் முன் வர வேண்டும். மனைவியின் மீது அதிக அன்பு கொண்ட கணவர்கள் தாங்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்ள முன்வர வேண்டும்.

குழந்தைகளை சுமந்து கொண்டிருக்கும் கர்ப்பிணி பெண்கள் பிரசவங்களை மருத்துவமனைகளில் மட்டும்தான் பார்க்க வேண்டும் அவ்வாறு பிரசவம் முடிந்தவுடன் அதே மருத்துவமனையில் கணவனோ அல்லது மனைவியோ குடும்ப நல அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். பிரசவத்திற்கு ஒரு முறையும் குடும்ப நல அறுவை சிகிச்சைக்காக ஒரு முறையும் மருத்துவமனைகளுக்கு சென்று கால விரையத்தை தடுக்க வேண்டும். நமது குழந்தைகளுக்கு பெற்றோர்கள் சேர்த்து வைக்கப்படும் சொத்து எதுவென்றால் இரண்டு குழந்தையோடு நிறுத்திக் கொள்வது தான் எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் இணை இயக்குனர்(மருத்துவ பணிகள்) மரு.ரமாமணி, துணை இயக்குனர்கள் மரு.சந்தோஷ்குமார் (சுகாதாரப் பணிகள்) மரு. ஸ்ரீபிரியா தேன்மொழி (குடும்ப நலன்), வட்டார மருத்துவ அலுவலர்கள் மரு. சிவகுமார், மரு. தியாகராஜன், மரு.சகுந்தலாதேவி, வட்டாட்சியர் கலியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்பு செய்திகள்

மூவர்ணத்தில் ஜொலித்த வங்கக்கடல்! 20 நாட்டிகல் மைல் தூரம் கடலுக்குள் சென்று போலீசார் நடத்திய பிரம்மாண்ட பேரணி!
மூவர்ணத்தில் ஜொலித்த வங்கக்கடல்! 20 நாட்டிகல் மைல் தூரம் கடலுக்குள் சென்று போலீசார் நடத்திய பிரம்மாண்ட பேரணி!
Drone Training : 10ஆம் வகுப்பு பாஸ் போதும்! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
10ஆம் வகுப்பு பாஸ் போதும்.! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Drone Training : 10ஆம் வகுப்பு பாஸ் போதும்! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
10ஆம் வகுப்பு பாஸ் போதும்.! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
Embed widget