"யாரைக் கேட்டு விஜய்க்கு கான்வாய்?” - ஆளுநரின் அதிரடி கேள்வியால் திணறிய அரசு அதிகாரிகள் - நடந்தது என்ன?
யாரை கேட்டு விஜய்க்கு, முதலமைச்சர் அந்தஸ்த்துக்கான பாதுகாப்பு மற்றும் கான்வாய் வாகனங்கள் கொடுக்கப்பட்டது? - ஆளுநர் கேள்வி

எதன் அடிப்படையில் தவெக தலைவர் விஜய்க்கு முதலமைச்சர் அந்தஸ்த்திற்கான பாதுகாப்பு மற்றும் கான்வாய் வாகனங்கள் கொடுப்பட்டது ? என்று தமிழக அரசு அதிகாரிகளிடம் ஆளுநர் அர்லேகர் கேள்வி எழுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனிப்பெரும் கட்சியாக தவெக
தமிழக சட்டமன்றத் தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் விஜயின் தவெக கட்சி 108 இடங்களை பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய் போட்டியிட்ட இரண்டு தொகுதியிலும் வெற்றி பெற்றார். இதனால், தவெக ஆட்சியமைக்கப்போகும் என்றும் விஜய் முதலமைச்சர் ஆவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இதனால், புதிய ஆட்சி மாற்றத்திற்கான அனைத்து வேலைகளையும் அரசு அதிகாரிகள் செய்து வந்தனர். வாக்கு எண்ணிக்கை நாளான மாலையில் விஜய்க்கு தேவையான அனைத்து பாதுகாப்புகளும் கொடுக்கப்பட்டது.
ஆனால், விஜயால் இன்னும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத சூழ்நிலை இருப்பதால், அவருக்கு கொடுக்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. தொடர்ந்து மூன்று நாட்கள் கொடுக்கப்பட்ட பாதுகாப்பு விலகிக்கொள்ளப்பட்டது தவெகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால், விஜய் கேட்டுக்கொண்டதற்காக பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதாக அக்கட்சியை சேர்ந்த நிர்மல் குமார் தெரிவித்திருந்தார்.
யாரைக்கேட்டு விஜய்க்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டது
இந்த நிலையில், எதன் அடிப்படையில் விஜய்க்கு, முதலமைச்சர் அந்தஸ்த்துக்கான பாதுகாப்பு மற்றும் கான்வாய் வாகனங்கள் கொடுக்கப்பட்டது? யாருடைய உத்தரவின்பேரில் நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடத்தப்பட்டது? என்று தமிழக அரசு அதிகாரிகளிடம் ஆளுநர் அர்லேகர் கேள்வி எழுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜயின் தவெக 108 இடங்களை பிடித்து வெற்றி பெற்றது. இருப்பினும், ஆட்சியமைக்க 118 இடங்கள் தேவை என்பதால் தங்களுக்கு ஆதரவு தரக்கோரி காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தவெக அழைப்பு விடுத்தது. இதில், காங்கிரஸ் ஆதரவு கொடுத்ததால் அவர்களின் 5 சீட்டுகளை சேர்ந்து 112 இடங்கள் கிடைத்துள்ளது (திருச்சி கிழக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டாம்). ஆனால், இரண்டு கட்சிகள் இன்னும் தங்களின் முடிவுகளை தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் தவெக தலைவர் விஜய் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்தார். அப்போது பெரும்பான்மையை 112 எம்.எல்.ஏ.,க்களை வைத்து எப்படி நிரூபிப்பீர்கள் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை ஆளுநர் எழுப்பியதாகவும், அதற்கு விஜய் விளக்கம் கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் வரை நிகழ்ந்தது. இதனைத் தொடர்ந்து விஜய் ஆளுநர் மாளிகையில் இருந்து பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.
தவெக பெரும்பான்மை பெறவில்லை
இதனை தொடர்ந்து, ஆட்சி அமைக்க தவெக பெரும்பான்மை பெறவில்லை என்றும் விஜய் ஆட்சி அமைக்க வேண்டுமென்றால் பெரும்பான்மை தேவை என்று ஆளுநர் அர்லேகர் அதிரடி அறிவித்துள்ளார்.
Before You Go
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
ட்ரெண்டிங் செய்திகள்






















