Gold Rate Increase; ஏறுமுகத்தில் தங்கம் விலை... சோக முகத்தில் இல்லத்தரசிகள்...
சென்னையில் தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் உள்ள நிலையில், இல்லத்தரசிகள் சோகத்திற்கு ஆளாகியுள்ளனர். தங்கம் விலை மீண்டும் 59 ஆயிரத்தை நெருங்குவதால் பொதுமக்கள் கவலை.

சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை அவ்வப்போது கூடுவதும், குறைவதுமாக இருக்கிறது. இந்த நிலையில், தங்கம் விலை ரூ.59,000-ஐ நெருங்கி வருவதால், இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.
தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை
புத்தாண்டு பிறந்து, 3ம் தேதி தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.640 உயர்ந்தது. அதன்பின், 4ம் தேதி ரூ.360 குறைந்து, ஒரு சவரன் ரூ.57,720 ஆக இருந்தது. அதன்பின், 7ம் தேதி வரை அதே விலையில் நீடித்த தங்கம் விலை, 8ம் தேதி ரூ.80-ம், 9ம் தேதி ரூ.280-ம், 10-ம் தேதி ரூ.200-ம், 11-ம் தேதி ரூ.240-ம் உயர்ந்து, ஒரு சவரன் ரூ.58,520 ரூபாயாக இருந்தது.
ரூ.59,000-ஐ நெருங்கும் தங்கம் விலை
இந்த நிலையில், இன்று(13.01.25) தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்து, 59,000 ரூபாயை நெருங்கியுள்ளது. அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.25 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,340 ரூபாயாகவும், ஒரு சவரன் தங்கம் ரூ.200 உயர்ந்து, ரூ.58,720-க்கு விற்பனையாகிறது.
இதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ரூ.102 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ள தங்கம் விலை, மீண்டும் 59,000 ரூபாயை நெருங்கியுள்ளதால். இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

