மேலும் அறிய

’உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை’ எப்படி செயல்படுகிறது..?

44 நாட்களில் 63,500 மனுக்களுக்கு தீர்வு கண்டிருக்கும் நிலையில், மொத்தமாக பெறப்பட்ட நான்கரை லட்சம் மனுக்களுக்கும் 100 நாட்களில் தீர்வு கண்டுவிட முடியுமா என்ற சந்தேகம் எழுந்தாலும், அதிகாரிகளின் நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாக இருக்கின்றன

பரிவுள்ள ஆளுமை என்பது இந்த அரசின் முக்கிய கோட்பாடாகும். ’உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தின் கீழ் பெறப்பட்ட அனைத்து மனுக்கள் மீதும் 100 நாட்களுக்குள் தீர்வு காண்பதற்காக, முதல்வர் ஏற்கனவே சிறப்பு அலுவலர் ஒருவரை நியமித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களில், பெருந்தொற்று பரவல் காலத்திலும், இதுவரை 63,500 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என பேரவையில் பெருமைப்பொங்க பேசினார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.’உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை’ எப்படி செயல்படுகிறது..?

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பரப்புரையின் மூலம், பெறப்பட்ட நான்கரை லட்சம் மனுக்களுக்கு எப்படி 100 நாட்களில் தீர்வு காணப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்புகளோடு தொடங்கியது ’உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற தனிப்பிரிவு. திமுக தலைமையிலான அரசு பதவியேற்று 44 நாட்கள் ஆகியிருக்கும் நிலையில், இதுவரை 6, 500 மனுக்களுக்கு தீர்வு கண்டிருப்பதாக ஆளுநர் உரைமூலம் அறிவித்திருக்கிறது அரசு.’உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை’ எப்படி செயல்படுகிறது..?

 

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் பிரிவு எப்படி இயங்குகிறது ?

தமிழ்நாடு மின் ஆளுமை முகமையில்தான் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் குறை தீர்ப்பு அலுவலகம், சிறப்பு அதிகாரி ஷில்பா பிரபாகர் ஐஏஎஸ் தலைமையில் இயங்குகிறது. மனுக்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பெறப்பட்டதால், முதலில் அந்த மனுக்கள் எல்லாம் மாவட்ட வாரியாக பிரிக்கப்பட்டன. பிரிக்கப்பட்ட மனுக்கள் அனைத்தும் கம்பியூட்டர் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு, மாவட்டங்களில் உள்ள தனி அதிகாரியின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்படுகிறது. அதன்பிறகு, மனுக்கள் மீதான உண்மைத் தன்மையை ஆராய்ந்து, கோரிக்கை வைக்கப்பட்ட துறை மூலமாக மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு வருகிறது.

’உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை’ எப்படி செயல்படுகிறது..?
ஷில்பா பிரபாகர் ஐஏஸ்

மாவட்ட மனுக்களுக்கு எப்படி தீர்வு ?

ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட வருவாய் அலுவலர், சீனியர் அதிகாரி ஒருவர் தலைமையில் இதற்கென ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர், வந்திருக்கும் மனுக்கள் எந்த துறை சார்ந்தது என்பதை கண்டறிந்து, அந்த துறையின் அதிகாரி மூலமாக குறைகளுக்கு தீர்வு கண்டு வருகின்றனர்.

என்ன மாதிரியான மனுக்கள் அதிகம் வந்திருக்கிறது ?

வீட்டு மனை பட்டா, முதியோர் மற்றும் இன்னபிற ஓய்வூதியங்கள் கிடைக்காதது, மின் இணைப்பு கிடைக்காதது, குடி நீர் இணைப்பு இல்லை, சாலை வசதி கேட்பது போன்றவை அதிக அளவிலும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவேண்டும், ஜி.எஸ்.டி வரி வேண்டாம், சுங்கச்சாவடி கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், கிராம பஞ்சாயத்துகளை, ஒன்றியங்களை பிரிக்க வேண்டும் என்பவைகளும் பரிந்துரைகளாக கொடுத்திருக்கின்றனர்.’உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை’ எப்படி செயல்படுகிறது..?

தங்கள் மனு பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்பதை மக்கள் எப்படி அறிந்துக்கொள்வது ?

கணினியில் அவர்களது மனுக்களை எண்ட்ரி செய்யும்போதே, அந்த மனுவில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கு இது தொடர்பான குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு விடுகிறது. அந்த குறுஞ்செய்தியில் ஒரு நம்பர் கொடுக்கப்படும், அதனை வைத்து மனு எந்த நிலையில் இருக்கிறது என்பதை பொதுமக்கள் அறிந்துக்கொள்ள முடியும்.

இப்படி ஒவ்வொரு மனுக்களுக்கும் உரிய முக்கியத்துவம் கொடுத்து அவற்றுக்கு தீர்வு காணும் பணியில் ஷில்பா பிரபாகர் தலைமையிலான அணி மிகத் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. 44 நாட்களில் 63 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வுக் கண்டிருக்கும் நிலையில், 100 நாட்களில் நான்கரை லட்சம் மனுக்களுக்குமான தீர்வை எட்டிவிடமுடியுமா என்பது கேள்விக்குறியாக இருந்தாலும், அதிகாரிகளின் நடவடிக்கைகளை வைத்து பார்க்கும்போது அத்தனை மனுக்களுக்கும் விரைவில் தீர்வு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது.

 

I am a seasoned journalist with over 12 years of experience across the visual and digital media landscape. Throughout my career, I have taken up diverse editorial responsibilities—from content writing and ticker management to heading desk and assignment operations. My on-ground reporting includes in-depth coverage of political, cultural, and social affairs. I have had the opportunity to interview several influential figures from politics, arts, and public life. Known for delivering impactful exclusives, I was one of the first to break major stories like the TNPSC scam, cementing my commitment to responsible and fearless journalism.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Maruti Cars 2026: மாருதியின் லிஸ்டில் நான்கு கார்கள் - ரெண்டு EV கன்ஃபார்ம், ஃப்ளெக்ஸ் ஃபியூல் மாடலும் - விவரங்கள் இதோ
Maruti Cars 2026: மாருதியின் லிஸ்டில் நான்கு கார்கள் - ரெண்டு EV கன்ஃபார்ம், ஃப்ளெக்ஸ் ஃபியூல் மாடலும் - விவரங்கள் இதோ
ABP Premium

வீடியோ

TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Maruti Cars 2026: மாருதியின் லிஸ்டில் நான்கு கார்கள் - ரெண்டு EV கன்ஃபார்ம், ஃப்ளெக்ஸ் ஃபியூல் மாடலும் - விவரங்கள் இதோ
Maruti Cars 2026: மாருதியின் லிஸ்டில் நான்கு கார்கள் - ரெண்டு EV கன்ஃபார்ம், ஃப்ளெக்ஸ் ஃபியூல் மாடலும் - விவரங்கள் இதோ
TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Embed widget