மேலும் அறிய

ABP Nadu Exclusive: "சவால் விடுறேன்... அது பொய் கேஸ்" - முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் பிரத்யேக பேட்டி

Former special DGP Rajesh Das Interview : ஒரு மாதம் அல்லது இரண்டு மாதத்தில் நான் பேச வந்து விடுவேன், இனி யாரும் ஒளிந்து இருக்க முடியாது,  இதை நான் நீதிமன்றத்தில் கூறியிருக்கிறேன்.

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது அத்துமீறி வீட்டில் நுழைந்ததாக பல்வேறு பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அவர் மீது அதிகாரியிடம் தவறாக நடந்து  கொண்ட   வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த சர்ச்சையில் சிக்கி வரும்,  ராஜேஷ் தாஸ் ஏபிபி நாடு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டி.

 

1. முன்னாள்  தலைமை காவலர் வீட்டில் கூட அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும் பொழுது யோசிப்பார்கள் உங்கள் விஷயத்தில் யோசிக்காமல், மின்சாரத்தை துண்டித்தது ஏன் ?

ராஜேஷ் தாஸ்: நான் இந்த வீட்டிற்கு 18ஆம் தேதி வந்திருந்தேன். அதற்கு அடுத்த நாள் மாலை மின்சார ஊழியர் ஒருவர் வந்திருந்தார். எல்லோரும் கூறுகிறார்கள் மேலிருந்து அழுத்தம் கொடுக்கிறார்கள். டிஜிபியாக இருந்தால் என்ன,  தலைமை காவலராக இருந்தால் என்ன  மேலிருந்து உத்தரவு வந்தால் இவர்கள் செய்து விடுவார்கள். 19 ஆம் தேதி எந்த கடிதமும் இல்லாமல் வந்தார்கள் 20ம் தேதி மின்சாரத்தை துண்டித்து விட்டார்கள். எந்தவித காரணமும் இல்லை,  நோட்டீஸ் கொடுக்கவில்லை. மின்சார ஊழியர்கள் அனைவருக்கும் என்னைத் தெரியும்.   இங்கு நான் இருக்கிறேன் என அனைவருக்கும் தெரியும்.


2.  வீட்டு இடம் தொடர்பாக என்ன பிரச்சனை ?  அதில்  எக்கச்சக்க குழப்பம் வர காரணம் ஏன் ?

 ராஜேஷ் தாஸ்: 1999 இல் இந்த இடத்தை வாங்க வந்தேன். நான் எனது எதிர்காலத்தில் ஓய்வு எடுக்க வேண்டும் என எண்ணத்தில் இந்த இடத்தை வாங்கினேன்.  இது என் முன்னாள் மனைவியின் அப்பா சொத்து கிடையாது. ஒரு பகுதி மட்டுமே அவரின் அப்பா பெயரில் வாங்கினோம், மீதம் ஒரு பகுதி எனது நண்பர் பெயரில் உள்ளது. இது நான் வாங்கிய இடம் இதற்கு யாரும் பணம் தரவில்லை.

3.  நீங்கள் இந்த வீட்டில் இருந்த காவலாளியை அடித்து விரட்டி இருக்கிறீர்கள் ?  பத்து பேருடன் வந்து அவர் மிரட்டலில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது? சாதாரண நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யும் பொழுதே காவல்துறையினர்  குறைந்தபட்ச ஆதாரத்தை எதிர்பார்க்கும் பொழுது,  உச்சபட்ச பதவியில் இருந்த உங்கள் மீது வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள் என்றால் ஒரு சதவீதமாவது உண்மை இருக்கும் அல்லவா ?

ராஜேஷ் தாஸ்:  ஒரு சதவீதம் இதில் உண்மையாக இருந்தால் நான் இந்த வழக்கில் கைதாக ரெடி. 19ஆம் தேதி முதல்முறையாக நான், இந்த இடத்தில் விட்டுச் சென்ற பொழுது வீடில்லாததால் புகார் அளித்தேன்.  இங்கு யார் வந்து சென்றார்கள் என விசாரிக்க வேண்டும் என புகார் கொடுத்து இருந்தேன். விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் வர உள்ளது,  அவர்களுக்கு இந்த சொத்து வேண்டும். சொத்துக்காக இந்த பிரச்சனை செய்கிறார்கள். காவல்துறைக்கு மேலிருந்து அழுத்தம் வருவதாக கூறுகிறார்கள். எனக்கு  அனைத்து கடிதங்களும் இந்த முகவரிக்கு தான் வந்து கொண்டிருக்கிறது.  

4. பின்னணியில் ஒருவர் இருப்பதாக கூறுகிறீர்கள். இதை யார் செய்கிறார்கள் என உங்களுக்கு தெரியுமா   ?

ராஜேஷ் தாஸ்: யார் என்று எனக்கு நன்றாக தெரியும். அது குறித்து நான் தலைமைச் செயலகத்திற்கும் நீதிபதிக்கும்  புகார் எழுப்பி உள்ளேன். அவர்கள் கைது செய்வதற்கு முன்பு இதுகுறித்து நான் புகார் அளித்து விட்டேன். என்னிடம் அனைத்து ஆதாரங்களும் உள்ளது. என் மீது பொய் வழக்கு போட்டு விட்டார்கள்.

5.  மற்றொரு பெரிய வழக்கு தற்பொழுது உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. அந்த வழக்கில் ஏதாவது உண்மை உள்ளதா ?

ராஜேஷ் தாஸ்:  அந்த வழக்கு இதைவிட மோசமான வழக்கு. இது பொய் வழக்கு,  இதுகுறித்து நான் எந்த கேள்வி கேட்டாலும் பேசுவேன், ஆனால் இப்பொழுது இல்லை. கண்டிப்பாக ஒரு முறை ஊடகத்தில் கூற வருவேன். அதை ஊடகத்தில் போட்டு பெரிதாகி விட்டார்கள்.  ஒரு மாதம் அல்லது இரண்டு மாதத்தில் நான் பேச வந்து விடுவேன். இனி யாரும் ஒளிந்து இருக்க முடியாது,  இதை நான் நீதிமன்றத்தில் கூறியிருக்கிறேன். நான் சவால் விடுகிறேன்  என தெரிவித்தார்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா- வெளுத்து வாங்கிய புகழேந்தி!
வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா- வெளுத்து வாங்கிய புகழேந்தி!
Gaza Tragedy: சோகத்திலும் சோகம்; காசாவில் நிவாரண விநியோகத்தின்போது நெரிசலில் 19 பேர் பலி - என்ன கொடுமை இது.?!
சோகத்திலும் சோகம்; காசாவில் நிவாரண விநியோகத்தின்போது நெரிசலில் 19 பேர் பலி - என்ன கொடுமை இது.?!
கூட்டணிக்கு அழைத்த ஈபிஎஸ்; ‘’ஆட்சியில் பங்கு வேண்டும்’’- செக் வைத்த அன்புமணி!
கூட்டணிக்கு அழைத்த ஈபிஎஸ்; ‘’ஆட்சியில் பங்கு வேண்டும்’’- செக் வைத்த அன்புமணி!
’’கூட்டணி ஆட்சியா? இங்க நான் எடுக்கறதுதான் இறுதி முடிவு’’- மீசையை முறுக்கிய ஈபிஎஸ்!
’’கூட்டணி ஆட்சியா? இங்க நான் எடுக்கறதுதான் இறுதி முடிவு’’- மீசையை முறுக்கிய ஈபிஎஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

NDA Alliance | வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா! வெளுத்து வாங்கிய புகழேந்தி
PMK ADMK Alliance | கூட்டணிக்கு அழைத்த EPS ”ஆட்சியில் பங்கு வேண்டும்” செக் வைத்த அன்புமணி
O Panneerselvam | செப்டம்பரில் புது கட்சி.. OPS எடுத்த அஸ்திரம்! ஐடியா கொடுத்த அமித்ஷா
Anbumani Vs Ramadoss | பாஜக கூட்டணியில் அன்புமணி.. ரூட்டை மாற்றும் ராமதாஸ் பக்கா ஸ்கெட்ச்!
Nainar Nagendran | ”சோறு கூட போடுறோம் ஓட்டு போட மாட்டோம்” அதிர்ச்சியில் உறைந்த  நயினார் நாகேந்திரன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா- வெளுத்து வாங்கிய புகழேந்தி!
வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா- வெளுத்து வாங்கிய புகழேந்தி!
Gaza Tragedy: சோகத்திலும் சோகம்; காசாவில் நிவாரண விநியோகத்தின்போது நெரிசலில் 19 பேர் பலி - என்ன கொடுமை இது.?!
சோகத்திலும் சோகம்; காசாவில் நிவாரண விநியோகத்தின்போது நெரிசலில் 19 பேர் பலி - என்ன கொடுமை இது.?!
கூட்டணிக்கு அழைத்த ஈபிஎஸ்; ‘’ஆட்சியில் பங்கு வேண்டும்’’- செக் வைத்த அன்புமணி!
கூட்டணிக்கு அழைத்த ஈபிஎஸ்; ‘’ஆட்சியில் பங்கு வேண்டும்’’- செக் வைத்த அன்புமணி!
’’கூட்டணி ஆட்சியா? இங்க நான் எடுக்கறதுதான் இறுதி முடிவு’’- மீசையை முறுக்கிய ஈபிஎஸ்!
’’கூட்டணி ஆட்சியா? இங்க நான் எடுக்கறதுதான் இறுதி முடிவு’’- மீசையை முறுக்கிய ஈபிஎஸ்!
Varunkumar IPS : ’ஆபரேஷன் TVK – சென்னை வரும் வருண்குமார்’ இதுதான் அசைண்மெண்டா..?
’ஆபரேஷன் TVK – சென்னை வரும் வருண்குமார்’ இதுதான் அசைண்மெண்டா..?
TVK Vijay: “வாகை சூடும் வரலாறு திரும்பட்டும்“ - தவெகவின் 2-வது மாநில மாநாட்டு தேதியை அறிவித்த விஜய்
“வாகை சூடும் வரலாறு திரும்பட்டும்“ - தவெகவின் 2-வது மாநில மாநாட்டு தேதியை அறிவித்த விஜய்
Chennai Power Cut: சென்னைல நாளை(17.07.25) எங்கெங்க மின் தடை ஏற்படப் போகுதுன்னு தெரிஞ்சுக்கோங்க
சென்னைல நாளை(17.07.25) எங்கெங்க மின் தடை ஏற்படப் போகுதுன்னு தெரிஞ்சுக்கோங்க
Tesla Model Y: பெயிண்டுக்கே புல்லட் விலை, முழு செல்ஃப் ட்ரைவிங்கிற்கு தனி கார் விலை - டெஸ்லா மாடல் Y தேறுமா?
Tesla Model Y: பெயிண்டுக்கே புல்லட் விலை, முழு செல்ஃப் ட்ரைவிங்கிற்கு தனி கார் விலை - டெஸ்லா மாடல் Y தேறுமா?
Embed widget