மேலும் அறிய

”கோவணத்தில் இருந்து கோர்ட்..கோர்ட்டில் இருந்து கோவணம் “ : முழு நேர விவசாயியாக மாறிய முன்னாள் நீதிபதி..

"ஆடம்பர கார் , பகட்டான வாழ்க்கை என இருந்தால் நிம்மதியாக தூக்கம் வராது. கார் வெளியே நிற்கும் , கஷ்டம் வீட்டிற்குள் போய்விடும்."

ஒரு நீதிபதி நீதிமன்ற வளாகத்தில் நடந்துவரும் பொழுதே அங்கிருக்கும் மற்றவர்கள் ஒரு நிமிடம் தலை குனிந்து மரியாதை செலுத்துவார்கள். ஒருவரின் தலை எழுத்தையே மாற்றும் வல்லமை அவர்களின் தீர்ப்பிற்கு, நீதி வழங்கும் பேனாவுக்கும் இருக்கிறதல்லவா!

சேறு தோய்ந்த ஆடை, அலப்பறை இல்லாத பேச்சு , கிராமத்து வாசம் என முழு விவசாயியாகவே மாறி பலரின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ. செல்வம். 


”கோவணத்தில் இருந்து கோர்ட்..கோர்ட்டில் இருந்து கோவணம் “ : முழு நேர விவசாயியாக மாறிய முன்னாள் நீதிபதி..

உயர்நீதிமன்ற நீதிமன்ற நீதிபதியாக மக்கள் பணியாற்றிய ஏ.செல்வம் அவர்கள் தற்போது  ஓய்வுக்குப் பிறகு சொந்த கிராமமான பூலாங்குறிச்சியில் விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். ஊர் மீது அதீத பற்றுகொண்ட இவர் கடந்த ஆண்டு கூட வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில் பூலாங்குறிச்சி பகுதியில் இருக்கும் உருமான் சாமி  கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் அறநிலையத் துறையிடம் அனுமதி பெறாமல் 225 அடி தூரத்திற்குத் தார்ச்சாலை அமைத்துள்ளனர் என்றும் இந்த தார்ச் சாலையை அகற்ற உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

அவர் தொடர்ந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிமன்றம் 30 நாளில் அகற்ற உத்தரவிட்டிருந்தது. இது தவிர கருவேல மரங்களை அகற்ற கோரி போராட்டம் என  சட்டத்தால் தனது ஊருக்கு என்ன நல்லது செய்ய முடியுமோ அதனை தனது ஓய்வு நாட்களிலும் செய்து வருகிறார்.


”கோவணத்தில் இருந்து கோர்ட்..கோர்ட்டில் இருந்து கோவணம் “ : முழு நேர விவசாயியாக மாறிய முன்னாள் நீதிபதி..

சமீபத்தில் Behindwoods யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த , ஏ.செல்வம் அவர்கள் “ எளிமையாக இருக்கிறேன் என்பார்கள். நான் என்ன கோட்-சூட் போட்டுக்கொண்டா விவசாயம் செய்ய முடியும். ஆடம்பர கார் , பகட்டான வாழ்க்கை என இருந்தால் நிம்மதியாக தூக்கம் வராது. கார் வெளியே நிற்கும் கஷ்டம் வீட்டிற்குள் போய்விடும். என் வயல்தான் இது. நான் சம்பாதித்து வாங்கவில்லை, பூர்வீகமானது. என் வயலின் அனைத்து வேலைகளையும் நான்தான் செய்கிறேன்.

2018-ஆம் ஆண்டு இறுதியாக கையெழுத்து போட்டுவிட்டு பேனாவை சேம்பரில் போட்டுவிட்டு வந்தேன். அதன் பிறகு பேனா , புத்தகம் எதையும் தொடவில்லை. நான் பணியில் இருந்த காலத்தில் யாரிடமும் ஆலோசனை பெற்றது கிடையாது. எனக்கு நியாபக சக்தி அதிகம் நானே எல்லாவற்றையும் கையாளுவேன்.  வீட்டிற்கு வெளியே இலவச சட்ட ஆலோசனை கிடையாது என போர்ட் வைத்திருக்கிறேன். காரணம் நாம் உதவி என செய்தால் , அவர்கள் நீதிபதிகளிடம் ரெக்கமெண்ட் செய்ய சொல்லி கேட்கிறார்கள்.

அதனால்தான் பணம் என்றால் யாரும் வரமாட்டார்கள் என போர்ட் வைத்துவிட்டேன். பென்ஷன் எனக்கு போதும். எனக்கு பணத்தின் மீது ஆசை இல்லை. கோவணத்தில் இருந்து கோர்ட்... கோர்ட்டில் இருந்து கோவணம் அவ்வளவுதான்.“ என ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார் மனிதர்

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Breaking News LIVE: நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? என்ன ஆச்சு அவருக்கு? அமெரிக்கா அவசர ஆலோசனை..
ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? அமெரிக்கா அவசர ஆலோசனை..
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Breaking News LIVE: நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? என்ன ஆச்சு அவருக்கு? அமெரிக்கா அவசர ஆலோசனை..
ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? அமெரிக்கா அவசர ஆலோசனை..
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Embed widget