மேலும் அறிய

கரூர் : வேலாயுதம்பாளையத்தில் பெண் பொறியியல் பட்டதாரி தூக்கிட்டு தற்கொலை..! போலீஸார் விசாரணை..!

கரூர் மாவட்டம் , வேலாயுதம்பாளையத்தில் இளம் பெண் பொறியாளர் வயிற்று வலியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

வேலாயுதம்பாளையத்தில் என்ஜினியர் படித்த இளம்பெண் வயிற்று வலி காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேலாயுதம்பாளையம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம், அண்ணாநகர் கீழ்மேல் வீதியை சேர்ந்தவர் முருகையன். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி செல்வாம்பாள் (வயது 45) இவர் வேலாயுதம்பாளையம் அருகிலுள்ள தமிழ்நாடு காகித ஆலையில் கூலித் தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார். இவருக்கு பிரியங்கா (26) என்ற மகளும், பிரவீன்குமார் (24) என்ற மகனும் உள்ளார்.


கரூர் : வேலாயுதம்பாளையத்தில் பெண் பொறியியல் பட்டதாரி தூக்கிட்டு தற்கொலை..! போலீஸார் விசாரணை..!

 

தாய் வருமானத்தில் பிரியங்காவும், பிரவீனும் படித்து முடித்துள்ளனர். பிரியங்கா என்ஜினீயரிங் படித்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. தாயின் சுமையை குறைக்க இன்ஜினியரிங் படைத்த பிரியங்கா பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்புக்காக தேடி வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு சிறு வயதில் இருந்தே, வயிற்று வலி தொந்தரவு இருந்துள்ளது. அதற்காக அவர் தாயின் உதவியுடன் பல்வேறு மருத்துவமனைகளில் பார்த்துள்ளார். இருந்தபோதிலும் வயிற்று வலி சிகிச்சை பலன் கிடைக்கவில்லை எனத் தெரியவருகிறது. இதனால் பல்வேறு நாட்களில் மன உளைச்சல் உடனே இருந்து வந்துள்ளார், இளம்பெண் பிரியங்கா.


கரூர் : வேலாயுதம்பாளையத்தில் பெண் பொறியியல் பட்டதாரி தூக்கிட்டு தற்கொலை..! போலீஸார் விசாரணை..!

இந்நிலையில் நேற்று காலைநேர வேலைக்கு தாய் செல்லவேண்டிய நிலையில், அதிகாலை 5 மணிக்கு வழக்கம் போல் பிரவீன் குமார் தனது தாயார் செல்வாம்பாளை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று தமிழ்நாடு காகித ஆலையில் விட்டுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் தனியாக இருந்த பிரியங்காவுக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த பிரியங்கா வீட்டில் யாரும் இல்லாத நிலை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கரூர் : வேலாயுதம்பாளையத்தில் பெண் பொறியியல் பட்டதாரி தூக்கிட்டு தற்கொலை..! போலீஸார் விசாரணை..!

தாயை வேலைக்கு அனுப்பிவிட்டு வீட்டுக்குவந்த பிரவீன் குமார் தூக்கில் தொங்கியபடி இருந்த பிரியங்காவை பார்த்து கதறி அழுததுடன், இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பிரவீன்குமார் அக்கம்பக்கத்தினரை அழைத்து, பிரியங்காவை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பிரியங்காவை பரிசோதித்த அரசு மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பணியிலிருந்த பிரியங்காவின் தாயாருக்கு தகவல் அளித்தனர். பின்னர் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்த பிறகு பிரியங்காவின் உடலை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 
கரூர் : வேலாயுதம்பாளையத்தில் பெண் பொறியியல் பட்டதாரி தூக்கிட்டு தற்கொலை..! போலீஸார் விசாரணை..!

இந்த தற்கொலை சம்பவம் குறித்து பிரியங்காவின் தாய் செல்வாம்பாள் வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலாயுதம்பாளையம் அருகே இன்ஜினியரிங் படித்த இளம்பெண் வயிற்றுவலி காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக சொல்லப்படும் சம்பவம் அவரது குடும்ப உறுப்பினர்கள் மட்டுமல்லாது அருகில் வசிப்பவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்க்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
Embed widget