மேலும் அறிய

கரூர் : வேலாயுதம்பாளையத்தில் பெண் பொறியியல் பட்டதாரி தூக்கிட்டு தற்கொலை..! போலீஸார் விசாரணை..!

கரூர் மாவட்டம் , வேலாயுதம்பாளையத்தில் இளம் பெண் பொறியாளர் வயிற்று வலியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

வேலாயுதம்பாளையத்தில் என்ஜினியர் படித்த இளம்பெண் வயிற்று வலி காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேலாயுதம்பாளையம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம், அண்ணாநகர் கீழ்மேல் வீதியை சேர்ந்தவர் முருகையன். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி செல்வாம்பாள் (வயது 45) இவர் வேலாயுதம்பாளையம் அருகிலுள்ள தமிழ்நாடு காகித ஆலையில் கூலித் தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார். இவருக்கு பிரியங்கா (26) என்ற மகளும், பிரவீன்குமார் (24) என்ற மகனும் உள்ளார்.


கரூர் : வேலாயுதம்பாளையத்தில் பெண் பொறியியல் பட்டதாரி தூக்கிட்டு தற்கொலை..! போலீஸார் விசாரணை..!

 

தாய் வருமானத்தில் பிரியங்காவும், பிரவீனும் படித்து முடித்துள்ளனர். பிரியங்கா என்ஜினீயரிங் படித்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. தாயின் சுமையை குறைக்க இன்ஜினியரிங் படைத்த பிரியங்கா பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்புக்காக தேடி வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு சிறு வயதில் இருந்தே, வயிற்று வலி தொந்தரவு இருந்துள்ளது. அதற்காக அவர் தாயின் உதவியுடன் பல்வேறு மருத்துவமனைகளில் பார்த்துள்ளார். இருந்தபோதிலும் வயிற்று வலி சிகிச்சை பலன் கிடைக்கவில்லை எனத் தெரியவருகிறது. இதனால் பல்வேறு நாட்களில் மன உளைச்சல் உடனே இருந்து வந்துள்ளார், இளம்பெண் பிரியங்கா.


கரூர் : வேலாயுதம்பாளையத்தில் பெண் பொறியியல் பட்டதாரி தூக்கிட்டு தற்கொலை..! போலீஸார் விசாரணை..!

இந்நிலையில் நேற்று காலைநேர வேலைக்கு தாய் செல்லவேண்டிய நிலையில், அதிகாலை 5 மணிக்கு வழக்கம் போல் பிரவீன் குமார் தனது தாயார் செல்வாம்பாளை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று தமிழ்நாடு காகித ஆலையில் விட்டுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் தனியாக இருந்த பிரியங்காவுக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த பிரியங்கா வீட்டில் யாரும் இல்லாத நிலை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கரூர் : வேலாயுதம்பாளையத்தில் பெண் பொறியியல் பட்டதாரி தூக்கிட்டு தற்கொலை..! போலீஸார் விசாரணை..!

தாயை வேலைக்கு அனுப்பிவிட்டு வீட்டுக்குவந்த பிரவீன் குமார் தூக்கில் தொங்கியபடி இருந்த பிரியங்காவை பார்த்து கதறி அழுததுடன், இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பிரவீன்குமார் அக்கம்பக்கத்தினரை அழைத்து, பிரியங்காவை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பிரியங்காவை பரிசோதித்த அரசு மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பணியிலிருந்த பிரியங்காவின் தாயாருக்கு தகவல் அளித்தனர். பின்னர் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்த பிறகு பிரியங்காவின் உடலை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 
கரூர் : வேலாயுதம்பாளையத்தில் பெண் பொறியியல் பட்டதாரி தூக்கிட்டு தற்கொலை..! போலீஸார் விசாரணை..!

இந்த தற்கொலை சம்பவம் குறித்து பிரியங்காவின் தாய் செல்வாம்பாள் வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலாயுதம்பாளையம் அருகே இன்ஜினியரிங் படித்த இளம்பெண் வயிற்றுவலி காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக சொல்லப்படும் சம்பவம் அவரது குடும்ப உறுப்பினர்கள் மட்டுமல்லாது அருகில் வசிப்பவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்க்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

தலைப்பு செய்திகள்

கள்ளக் காதலுக்காக கணவனை கொன்ற மனைவி ; மலைக் கோயிலில் அரங்கேறிய நாடகம் !!
கள்ளக் காதலுக்காக கணவனை கொன்ற மனைவி ; மலைக் கோயிலில் அரங்கேறிய நாடகம் !!
மார்க்கெட்டிங் பெண் தலையில் அடித்துக் கொன்று 9 பவுன் நகை கொள்ளை !! வாலிபர் சிக்கியது எப்படி ?
மார்க்கெட்டிங் பெண் தலையில் அடித்துக் கொன்று 9 பவுன் நகை கொள்ளை !! வாலிபர் சிக்கியது எப்படி ?
பிசியோதெரபி கிளினிக்கில் பாலியல் தொழில் ; ஆன்லைன் புக்கிங் மோசடி அம்பலம்
பிசியோதெரபி கிளினிக்கில் பாலியல் தொழில் ; ஆன்லைன் புக்கிங் மோசடி அம்பலம்
செண்டாக் கலந்தாய்வு எப்போது? 12,885 மாணவர்கள் தவிப்பு: தனியார் கல்லூரிகளில் தஞ்சம் புகும் அவலம்!
செண்டாக் கலந்தாய்வு எப்போது? 12,885 மாணவர்கள் தவிப்பு: தனியார் கல்லூரிகளில் தஞ்சம் புகும் அவலம்!

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த மாணவர்.. கைகட்டி அமைதியாக கேட்ட முதலமைச்சர் விஜய் - வீடியோவைப் பாருங்க
CM Vijay: ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த மாணவர்.. கைகட்டி அமைதியாக கேட்ட முதலமைச்சர் விஜய் - வீடியோவைப் பாருங்க
"லஞ்சம் வாங்குனா இதான் கதி.." கட்சிக்காரனுக்கே இந்த கதியா? விஜய் ஆக்ஷனால் அரசியல் கட்சிகள் அச்சம்!
Iraq Vs Donald Trump: 'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
Madurai Hc ; பழனி மட நிலப் பதிவு: சார்பதிவாளருக்கு நிபந்தனை ஜாமின் - சிக்கலில் இருவர்!
Madurai Hc ; பழனி மட நிலப் பதிவு: சார்பதிவாளருக்கு நிபந்தனை ஜாமின் - சிக்கலில் இருவர்!
Udhayanithi Stalin:
Udhayanithi Stalin: "லட்சக்கணக்கான இளைஞர்கள் ஏமாற்றம்.." காவலர் நியமனம் ஒத்திவைப்பிற்கு உதயநிதி கண்டனம்
Reliance Jio Satellite LEO Network: ஸ்டார்லிங்க்-க்கு ஆப்பு ரெடி.! சொந்த செயற்கைக்கோள்களை நிறுவ ஜியோவுக்கு கிடைத்த அனுமதி; முழு விவரம்
ஸ்டார்லிங்க்-க்கு ஆப்பு ரெடி.! சொந்த செயற்கைக்கோள்களை நிறுவ ஜியோவுக்கு கிடைத்த அனுமதி; முழு விவரம்
செடான் கார்களில் பின்புற வைப்பர் ஏன் இல்லை? அறிவியல், வடிவமைப்பு ரகசியம்
செடான் கார்களில் பின்புற வைப்பர் ஏன் இல்லை? அறிவியல், வடிவமைப்பு ரகசியம்
CM Vijay: அமைச்சர்களுக்கு கட்டுப்பட மறுக்கும் அதிகாரிகள்..? அடுத்த ஆக்ஷனுக்கு ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: அமைச்சர்களுக்கு கட்டுப்பட மறுக்கும் அதிகாரிகள்..? அடுத்த ஆக்ஷனுக்கு ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
Embed widget