மேலும் அறிய

மத்திய சர்க்காரையும், மாநில சர்க்காரையும் வரும் தேர்தலில் முடிவு செய்யப்போவதே விவசாயிகள்தான் - அய்யாக்கண்ணு

அதிகாரிகள் விவசாயிகள் மற்றும் பொதுமக்களை நாய்க்குட்டி போல பார்க்கின்றனர் விவசாய சங்க தலைவர்களை சொறிநாய் போல பார்த்து வேலை செய்கின்றனர்.

வேளாண்துறைக்கு என தனி பட்ஜெட் போடுவதை விட முதல்வர் அறிவித்ததை எங்களுக்கு பெற்றுத் தாருங்கள் என்பது தான் உழவர் நலன் மற்றும் வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்களிடம் நாங்கள் வைக்கும் கோரிக்கை என தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத் தலைவா் அய்யாக்கண்ணு பேட்டியளித்தார்.
 
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் சாத்துகூடல் கீழ்பாதி கிராமத்தில் கோவில் குளம் இருந்த இடம், நீர் நிலை புறம்போக்கு என்று அரசு பதிவேட்டில் மாறியுள்ளது. இந்த இடத்தில் ஊராட்சி சார்ந்த கட்டிடங்கள் கட்ட ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் இதனை சரி செய்து தர அப்பகுதி விவசாயிகள் கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில்  மாவட்ட ஆட்சியரை சந்தித்து விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் அய்யாக்கண்ணு மனு அளித்தனர்.
 
 அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த  அய்யாக்கண்ணு, ”கடலூர் மாவட்டத்தில் ஆருரான் சக்கரை ஆலையில் விவசாயிகளுக்கு தரவேண்டிய நிலுவைத் தொகையை உடனே தர வேண்டும், கடலூர் மாவட்டத்தில் உளுந்து முற்றிலுமாக அழிந்துவிட்டது. ஒன்பது மாவட்டங்களில் நெல்லுக்கு இழப்பீடு வழங்குவது போல உளுந்துக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது பற்றி எல்லாம் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளோம்” என்று கூறினார்.
 
தஞ்சாவூா் மாவட்டம் திருமண்டங்குடிமில் 100 நாட்கள் விவசாயிகள் போராடி வரும் நிலையிலும் கூட அரசு செவி சாய்க்காததற்கு காரணம் விவசாயிகள் ஒற்றுமையாக பாடுபட மாட்டார்கள் என்ற எண்ணம் தான் மேலும் அரசு விவசாயிகளை அடிமை போல் பார்ப்பதாகவும் அய்யாக் கண்ணு வேதனை தெரிவித்தார்.
 
மத்திய சர்க்காரையும் மாநில சர்க்காரையும் வரும் தேர்தலில் முடிவு செய்ய போவதே விவசாயிகள் தான், தமிழக முதல்வர் கரும்புக்கு 4000 ரூபாயும் நெல்லுக்கு 2500 ரூபாயும் தருவதாக கூறியிருந்தார் ஆனால் தரவில்லையே, 100% கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் என்று கூறிய முதல்வர் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றவில்லையே? என அவர் கேள்வி எழுப்பினார்.
 
வேளாண்  தனி பட்ஜெட் போடுவதை விட முதல்வர் அறிவித்ததை எங்களுக்கு பெற்றுத் தாருங்கள் என்பதே அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்களிடம் நாங்கள் வைக்கும் கோரிக்கை, மேலும் நெல்  கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக பல இடங்களில் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதைப் பற்றியும் மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துரைத்தும் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்ததாக  அவர் தெரிவித்தார்.
 
அதிகாரிகள் விவசாயிகள் மற்றும் பொதுமக்களை நாய்க்குட்டி போல பார்க்கின்றனர் விவசாய சங்க தலைவர்களை சொறிநாய் போல பார்த்து வேலை செய்கின்றனர். இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகளையும் ஒருங்கிணைத்து கூட்டம் போட உள்ளோம், விவசாயி ஆதரவு இல்லாமல் அரசியலில் வெற்றி பெற முடியாது என்ற நிலை உருவாகும், விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்து கூட்டம் போட்டதற்கு பிறகு இந்த நிலை வருகின்ற தேர்தலில் மாறும். அதன் பிறகாவது அதிகாரிகள் விவசாயிகளுக்கு மதிப்பளிப்பார்கள் என நம்புகிறோம் என தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்தார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget