மேலும் அறிய

”ஜல்லிக்கட்டுக்கு போராடியதால கொலை வழக்கு போட்டாங்க” - அரசு வேலை தட்டிப் போவதாக மாடுபிடி வீரர் வேதனை !

”பொய் வழக்கு என்பதால் தேவையற்ற சிக்கலில் மாட்டிக் கொண்டேன். எனவே தமிழ்நாடு அரசு இதை கவனத்தில் எடுத்துக் கொண்டு என்மீதுள்ள பொய் வழக்கை நீக்க  வேண்டும்"

சித்திரை திருவிழா போல் தை மாதம் பொங்கல் பண்டிகையை தென் மாவட்ட பகுதி மக்கள் வெகு சிறப்பாக கொண்டாடுவார்கள். குறிப்பாக மதுரை மாவட்டத்தில் கூடுதல் சிறப்பாக இருக்கும்.  தை முதல் நாள் அவனியாபுரத்திலும் அடுத்த, அடுத்த நாட்களில் பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இந்தாண்டு முழு ஊரடங்கு காரணமாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மட்டும் ஒரு நாள் தள்ளி வைத்து நடத்தப்பட்டது.

”ஜல்லிக்கட்டுக்கு போராடியதால கொலை வழக்கு போட்டாங்க” - அரசு வேலை தட்டிப் போவதாக மாடுபிடி வீரர் வேதனை !
 
கடந்த 17 ஆம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 8 சுற்றுகள் நடைபெற்றது. இதில் 1020 காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. 300 மாடுபிடி வீரர்கள் போட்டியில் கலந்துகொண்டனர். கருப்பாயூரணி கார்த்திக் என்ற இளைஞர் முதல் பரிசையும், இரண்டாவது பரிசை அலங்காநல்லூர் ராம்குமாரும்,  மூன்றாவது பரிசை சித்தாலங்குடி  கோபால கிருஷ்ணனும் தட்டிச்சென்றனர்.

”ஜல்லிக்கட்டுக்கு போராடியதால கொலை வழக்கு போட்டாங்க” - அரசு வேலை தட்டிப் போவதாக மாடுபிடி வீரர் வேதனை !
 
இந்நிலையில் மூன்றாம் பரிசு பெற்ற 24 வயதுடைய இளைஞர் கோபாலகிருஷ்ணனிடம் பேசினோம்ம், ’’பி.காம் முடித்துவிட்டு ஆன்லைன் பொருட்கள் டெலிவரி செய்யும் பணி செய்து வருகிறேன். எனக்கு ஜல்லிக்கட்டு மீது பெரிய ஆர்வம் இருந்ததில்லை. 2017ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது தான் எனக்கு ஜல்லிக்கட்டு போட்டியின் மீது மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் எங்கள் கிராமத்தினருடன் இணைந்து நகரி பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக சாலை மறியல், போரட்டத்தில் ஈடுபட்டோம்.  சாலை மறியலில் ஈடுபட்ட எங்கள் மீது கொலை முயற்சியில் ஈடுபட்டதாக பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. பொய் வழக்கு தொடர்பாக 21 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டோம்.

”ஜல்லிக்கட்டுக்கு போராடியதால கொலை வழக்கு போட்டாங்க” - அரசு வேலை தட்டிப் போவதாக மாடுபிடி வீரர் வேதனை !
 
இதனால் ஜல்லிக்கட்டு மீது ஆர்வம் அதிகமானது. இதனால் மூன்று ஜல்லிக்கட்டு காளைகள் வளர்த்து வருகிறேன். என்னுடைய காளைகள் பல்வேறு இடங்களிலும் பரிசுகள் பெற்றுவருகிறது. நானும் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடிக்க பயிற்சிகள் எடுத்துக் கொண்டேன். இந்தாண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 13 காளைகள் பிடித்து மூன்றாம் இடம் பிடித்துள்ளேன். கிட்டதட்ட 20 காளைக்கு மேல் பிடித்தேன். ஆனால் அதற்கு முறையாக மாடுபிடி என்று அறிவிக்கவில்லை. அதே போல் மாடுபிடி சுற்றுகளிலும் குறைவான வாய்ப்பு தான் கொடுக்கப்பட்டது. ஆர்.ஐ தாசில்தாரிடம் பேசியும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருந்தாலும் மனசை தேர்த்திக் கொண்டு மாடுகளை பிடித்தேன். இதனால் 13 மாடுகள் பிடித்ததாக அறிவிக்கப்பட்டு மூன்றாம் இடம் பிடித்து பைக் பரிசாக வென்றுள்ளேன்.

”ஜல்லிக்கட்டுக்கு போராடியதால கொலை வழக்கு போட்டாங்க” - அரசு வேலை தட்டிப் போவதாக மாடுபிடி வீரர் வேதனை !
 
ஜல்லிக்கட்டு மீது மிகுந்த ஆர்வம் ஏற்பட்ட  அதே சமயம் காவல்துறை பணியில் சேர வேண்டும் என போட்டித் தேர்வுக்கு படித்து வருகிறேன். எஸ்.ஐ ஆகவேண்டும் என்பது தான் என்னுடை லட்சியம்.  ஜல்லிக்கட்டு போரட்டத்தில் கலந்துகொண்டது தொடர்பாக என் மீது பொய் வழக்கு உள்ளதால் பணியில் சேர சிரமம் ஏற்பட்டு வருகிறது. இது தொடர்பாக பலரிடம் மனு கொடுத்து வருகிறேன். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டதாக வழக்கு தொடர்ந்திருந்தால் கூட வழக்கு தள்ளுபடியாயிருக்கும், அரசு வேலையில் சேர்ந்திருப்பேன். பொய் வழக்கு என்பதால் தேவையற்ற சிக்கலில் மாட்டிக் கொண்டேன். எனவே தமிழ்நாடு அரசு இதை கவனித்தில் எடுத்துக் கொண்டு என்மீதுள்ள பொய் வழக்கை நீக்க  நடவடிக்கை மேற்கொள்ள  வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளார்.
 

தலைப்பு செய்திகள்

E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
ஒப்பந்ததாரர் பில் பாஸ் செய்ய ரூ.1.30 லட்சம் லஞ்சமா? திருப்போரூர் மாம்பாக்கம் ஊராட்சியில் நடந்தது என்ன?
ஒப்பந்ததாரர் பில் பாஸ் செய்ய ரூ.1.30 லட்சம் லஞ்சமா? மாம்பாக்கம் ஊராட்சியில் நடந்தது என்ன?
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
தருமபுரிக்கு பேருந்து சேவை வெறும் வசதியல்ல; அது சமூகநீதி ஆயுதம்! – அமைச்சருக்கு சௌமியா அன்புமணி MLA பறக்கவிட்ட அவசரக் கடிதம்!
தருமபுரிக்கு பேருந்து சேவை வெறும் வசதியல்ல; அது சமூகநீதி ஆயுதம்! – அமைச்சருக்கு சௌமியா அன்புமணி MLA பறக்கவிட்ட அவசரக் கடிதம்!

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
Gold rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
Premalatha vs Vijay : தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
EV Car Charging : மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
Embed widget