மேலும் அறிய

”ஜல்லிக்கட்டுக்கு போராடியதால கொலை வழக்கு போட்டாங்க” - அரசு வேலை தட்டிப் போவதாக மாடுபிடி வீரர் வேதனை !

”பொய் வழக்கு என்பதால் தேவையற்ற சிக்கலில் மாட்டிக் கொண்டேன். எனவே தமிழ்நாடு அரசு இதை கவனத்தில் எடுத்துக் கொண்டு என்மீதுள்ள பொய் வழக்கை நீக்க  வேண்டும்"

சித்திரை திருவிழா போல் தை மாதம் பொங்கல் பண்டிகையை தென் மாவட்ட பகுதி மக்கள் வெகு சிறப்பாக கொண்டாடுவார்கள். குறிப்பாக மதுரை மாவட்டத்தில் கூடுதல் சிறப்பாக இருக்கும்.  தை முதல் நாள் அவனியாபுரத்திலும் அடுத்த, அடுத்த நாட்களில் பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இந்தாண்டு முழு ஊரடங்கு காரணமாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மட்டும் ஒரு நாள் தள்ளி வைத்து நடத்தப்பட்டது.

”ஜல்லிக்கட்டுக்கு போராடியதால கொலை வழக்கு போட்டாங்க” - அரசு வேலை தட்டிப் போவதாக மாடுபிடி வீரர் வேதனை !
 
கடந்த 17 ஆம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 8 சுற்றுகள் நடைபெற்றது. இதில் 1020 காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. 300 மாடுபிடி வீரர்கள் போட்டியில் கலந்துகொண்டனர். கருப்பாயூரணி கார்த்திக் என்ற இளைஞர் முதல் பரிசையும், இரண்டாவது பரிசை அலங்காநல்லூர் ராம்குமாரும்,  மூன்றாவது பரிசை சித்தாலங்குடி  கோபால கிருஷ்ணனும் தட்டிச்சென்றனர்.

”ஜல்லிக்கட்டுக்கு போராடியதால கொலை வழக்கு போட்டாங்க” - அரசு வேலை தட்டிப் போவதாக மாடுபிடி வீரர் வேதனை !
 
இந்நிலையில் மூன்றாம் பரிசு பெற்ற 24 வயதுடைய இளைஞர் கோபாலகிருஷ்ணனிடம் பேசினோம்ம், ’’பி.காம் முடித்துவிட்டு ஆன்லைன் பொருட்கள் டெலிவரி செய்யும் பணி செய்து வருகிறேன். எனக்கு ஜல்லிக்கட்டு மீது பெரிய ஆர்வம் இருந்ததில்லை. 2017ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது தான் எனக்கு ஜல்லிக்கட்டு போட்டியின் மீது மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் எங்கள் கிராமத்தினருடன் இணைந்து நகரி பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக சாலை மறியல், போரட்டத்தில் ஈடுபட்டோம்.  சாலை மறியலில் ஈடுபட்ட எங்கள் மீது கொலை முயற்சியில் ஈடுபட்டதாக பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. பொய் வழக்கு தொடர்பாக 21 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டோம்.

”ஜல்லிக்கட்டுக்கு போராடியதால கொலை வழக்கு போட்டாங்க” - அரசு வேலை தட்டிப் போவதாக மாடுபிடி வீரர் வேதனை !
 
இதனால் ஜல்லிக்கட்டு மீது ஆர்வம் அதிகமானது. இதனால் மூன்று ஜல்லிக்கட்டு காளைகள் வளர்த்து வருகிறேன். என்னுடைய காளைகள் பல்வேறு இடங்களிலும் பரிசுகள் பெற்றுவருகிறது. நானும் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடிக்க பயிற்சிகள் எடுத்துக் கொண்டேன். இந்தாண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 13 காளைகள் பிடித்து மூன்றாம் இடம் பிடித்துள்ளேன். கிட்டதட்ட 20 காளைக்கு மேல் பிடித்தேன். ஆனால் அதற்கு முறையாக மாடுபிடி என்று அறிவிக்கவில்லை. அதே போல் மாடுபிடி சுற்றுகளிலும் குறைவான வாய்ப்பு தான் கொடுக்கப்பட்டது. ஆர்.ஐ தாசில்தாரிடம் பேசியும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருந்தாலும் மனசை தேர்த்திக் கொண்டு மாடுகளை பிடித்தேன். இதனால் 13 மாடுகள் பிடித்ததாக அறிவிக்கப்பட்டு மூன்றாம் இடம் பிடித்து பைக் பரிசாக வென்றுள்ளேன்.

”ஜல்லிக்கட்டுக்கு போராடியதால கொலை வழக்கு போட்டாங்க” - அரசு வேலை தட்டிப் போவதாக மாடுபிடி வீரர் வேதனை !
 
ஜல்லிக்கட்டு மீது மிகுந்த ஆர்வம் ஏற்பட்ட  அதே சமயம் காவல்துறை பணியில் சேர வேண்டும் என போட்டித் தேர்வுக்கு படித்து வருகிறேன். எஸ்.ஐ ஆகவேண்டும் என்பது தான் என்னுடை லட்சியம்.  ஜல்லிக்கட்டு போரட்டத்தில் கலந்துகொண்டது தொடர்பாக என் மீது பொய் வழக்கு உள்ளதால் பணியில் சேர சிரமம் ஏற்பட்டு வருகிறது. இது தொடர்பாக பலரிடம் மனு கொடுத்து வருகிறேன். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டதாக வழக்கு தொடர்ந்திருந்தால் கூட வழக்கு தள்ளுபடியாயிருக்கும், அரசு வேலையில் சேர்ந்திருப்பேன். பொய் வழக்கு என்பதால் தேவையற்ற சிக்கலில் மாட்டிக் கொண்டேன். எனவே தமிழ்நாடு அரசு இதை கவனித்தில் எடுத்துக் கொண்டு என்மீதுள்ள பொய் வழக்கை நீக்க  நடவடிக்கை மேற்கொள்ள  வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளார்.
 

தலைப்பு செய்திகள்

Nainar Nagendran: காங்கிரஸ் பினாமியாக தவெக.. விஜயை விளாசியெடுத்த நயினார் நாகேந்திரன்!
Nainar Nagendran: காங்கிரஸ் பினாமியாக தவெக.. விஜயை விளாசியெடுத்த நயினார் நாகேந்திரன்!
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
Dindigul power cut: திண்டுக்கல்லில் நாளை (05-06-2026) மின் தடை ஏற்படும் பகுதிகள் லிஸ்ட் வெளியானது
Dindigul power cut: திண்டுக்கல்லில் நாளை (05-06-2026) மின் தடை ஏற்படும் பகுதிகள் லிஸ்ட் வெளியானது
TN Govt MoU: அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
TN Govt MoU: அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Peddi Twitter Review: ராம் சரண் ஜான்வி கபூர் காம்போ..! ஆல்ரவுண்டராக பெத்தி படம் பிளாஸ்டா? ஃபிளாப்பா? திரைப்பட விமர்சனம்
ராம் சரண் ஜான்வி கபூர் காம்போ..! ஆல்ரவுண்டராக பெத்தி படம் பிளாஸ்டா? ஃபிளாப்பா? திரைப்பட விமர்சனம்
Alisa Abdullah: பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு
பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு
TVK Vijay: காங்கிரசுக்கு தூக்கிக் கொடுத்தது ஏன்? திமுக இருக்கக் கூடாது, டார்கெட் 2029? தவெகவின் திட்டம் என்ன?
காங்கிரசுக்கு தூக்கிக் கொடுத்தது ஏன்? திமுக இருக்கக் கூடாது, டார்கெட் 2029? தவெகவின் திட்டம் என்ன?
Tamilnadu Round Up: நாளை அமைச்சரவை கூட்டம், அரசுக்கு எதிராக வழக்கு,சிறுமிக்கு பாலியல் தொல்லை - தமிழ்நாட்டில் இதுவரை
நாளை அமைச்சரவை கூட்டம், அரசுக்கு எதிராக வழக்கு,சிறுமிக்கு பாலியல் தொல்லை - தமிழ்நாட்டில் இதுவரை
TNEB-யில் திருடப்பட்ட 18 ஹார்ட் டிஸ்குகள் - டெண்டர், கொள்முதல், விசாரணை ஆவணங்கள் எங்கே? சிக்குவது யார்?
TNEB-யில் திருடப்பட்ட 18 ஹார்ட் டிஸ்குகள் - டெண்டர், கொள்முதல், விசாரணை ஆவணங்கள் எங்கே? சிக்குவது யார்?
Embed widget