மேலும் அறிய

Erode East Election: நீண்ட இழுபறிக்குபின் அதிமுக.. களத்தில் நேரடியாக களமிறங்கும் காங்கிரஸ்! இன்று மனுக்கள் மீது பரிசீலனை..

ஈரோடு இடைத்தேர்தலில் நேற்று ஒரே நாளில் 37 பேர் வேட்பு மனுதாக்கல் செய்தனர். இதையடுத்து, இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 96 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.  

சமீபத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா உடல் நலக்குறைவால் காலமானார். இதனால் அந்த தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திமுக கூட்டணி சார்பில் ஏற்கனவே போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திமுக கூட்டணி வேட்பாளராக தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டார். 

நீண்ட இழுபறிக்கு பிறகு ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் ஈபிஎஸ் தரப்பிலான அதிமுக வேட்பாளர், இரட்டை சிலை சின்னத்தில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இதனால்,  திமுக கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் ஈபிஎஸ் தரப்பிலான அதிமுக வேட்பாளரான தென்னரசு இடையே நேரடி போட்டி நிலவியுள்ளது. அதோடு நாம் தமிழர், தேமுதிக கட்சிகளும் நேரடியாக களமிறங்கியுள்ளன.

வேட்புமனு: 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் (பிப்ரவரி,07) நிறைவடைந்தது. இறுதிநாளான நேற்று மட்டும் 37 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். கடந்த 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் வேட்புமனு தாக்கல் நடைபெறாதநிலையில், நேற்று முன் தினம் வரை 59 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தனர். 

டோக்கன்:

வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் என்பதால் மனுதாக்கல் செய்ய ஏராளமானவர்கள் குவிந்தனர். இதனால், ஈரோடு மாநகராட்சி அலுவலகம் கூட்டம் நிரம்பி வழிந்தது. பகல் 11 மணியில் இருந்து வேட்பு மனுதாக்கல் செய்ய ஒவ்வொருவராக அனுப்பப்பட்டனர். தொடர்ந்து, மதியம் 3 மணிக்கு வேட்பு மனுதாக்கல் நிறைவடைந்தது. 

இருப்பினும், பலர் வேட்பு மனுதாக்கல் செய்ய காத்திருந்ததால் டோக்கன் வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் வேட்பு மனுக்களை தேர்தல் அதிகாரிகள் பெற்றனர். 3 மணிக்கு பிறகு மட்டும் 26 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

மனுதாக்கல் செய்த 96 பேர்:

ஈரோடு இடைத்தேர்தலில் நேற்று ஒரே நாளில் 37 பேர் வேட்பு மனுதாக்கல் செய்தனர். இதையடுத்து, இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 96 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.  

இந்தநிலையில், வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது. வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு நாளை மறுதினம் (பிப்ரவரி.10) கடைசி நாளாகும். அன்றைய தினத்தின் இறுதியில்தான் இறுதிவேட்பாளர் பட்டியல் வெளியாகும். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Nadu (@abpnadu)

வாபஸ் பெறப்போகும் அமமுக, ஓபிஎஸ் தரப்பு:

காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அதிமுக சார்பில் கேஎஸ் தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அதிமுக ஓபிஎஸ் தரப்பில் செந்தில் முருகனும், அமமுக வேட்பாளர் சிவபிரசாத்தும் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவார்கள் என்று அக்கட்சியின் தலைமை அறிவித்தது. இதையடுத்து, இவர்கள் இருவரும் வருகிற 10ம் தேதி தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற இருக்கின்றனர். 

தலைப்பு செய்திகள்

கடற்கரையில் போதைப்பொருள் மருந்துகள்: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல்
கடற்கரையில் போதைப்பொருள் மருந்துகள்: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல்
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
செங்கழுநீர் ஏரியை முழுமையாக தூர்வார மத்திய அரசு நிதி ஒதுக்க கவன ஈர்ப்பு தீர்மானம் மக்களவை எம்.பி., தகவல்
செங்கழுநீர் ஏரியை முழுமையாக தூர்வார மத்திய அரசு நிதி ஒதுக்க கவன ஈர்ப்பு தீர்மானம் மக்களவை எம்.பி., தகவல்
"டெல்லி போகக் கூடாதா?" - தமிழக விவசாயிகளை வழியிலேயே இறக்கிவிட்ட மராட்டிய போலீஸ்! விஜய் அரசு கண்டிக்கக் கோரிக்கை!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
Embed widget