மேலும் அறிய

EPS Speech : "மனசாட்சியுடன் பேசுங்க திருமா..உங்களுக்கும் இதே நிலை தான்! விஜய்க்கு அட்வைஸ் சொன்ன இபிஎஸ்

திருமாவளவன் மனசாட்சியுடன் பேச வேண்டும். மது ஒழிப்பு மாநாடு நடத்த அனுமதி கொடுக்காமல் எப்படி அலைக்கழித்தார்கள் என்று நீங்களே பேசுனீர்கள்

 திருமாவளவன் மனசாட்சியோடு பேச வேண்டும், விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அனுமதி கொடுக்க எப்படியெல்லாம் அலைக்கழித்தார்கள் என விஜய் மீதான திருமாவின் கருத்துக்கு எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார். 

இபிஎஸ் சுற்றுப்பயணம்:

'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் முன்னாள் முதல்வரும்  அதிமுக பொதுச் செயலாளருமான  எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்து வருகிறார்.அதன் ஒருபகுதியாக இன்று தருமபுரியில் பிரசாரக் கூட்டத்தில் இபிஎஸ். ஈடுபட்டார்.

அப்போது கரூர் துயர நிகழ்வுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக இரண்டு நிமிடங்கள் மெளன அஞ்சலி செலுத்தினார். 

திருமாவுக்கு கேள்வி:

”இன்று ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி; எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி என்று ஆகிவிட்டது. முதல்வர் ஸ்டாலின் கூடும் இடங்களில் அதிக பாதுகாப்பு வழங்கப்படும் நிலையில், மற்ற கட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை.

அரசியல் கட்சி கூட்டத்திற்கு பாதுகாப்பு கொடுப்பது அரசின் கடமை. இனி வருங்காலங்களில் உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும். ஆனால் ஆளே இல்லாத இடத்தில் ஆளுங்கட்சி கூட்டத்திற்கு காவல் துறை பாதுகாப்பை குவிக்கின்றனர். இதற்கெல்லாம் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் பதில் கொடுப்பார்கள். கூட்டணி கட்சிகள் ஜால்ரா போடுகின்றன.

திருமாவளவன் மனசாட்சியுடன் பேச வேண்டும். மது ஒழிப்பு மாநாடு நடத்த அனுமதி கொடுக்காமல் எப்படி அலைக்கழித்தார்கள் என்று நீங்களே பேசுனீர்கள். கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் இதே நிலைமை தான், என்றார். 

விஜய்க்கு அட்வைஸ்:

” கரூரில் நடைபெற்ற சம்பவத்தில், ஆட்சியாளர்கள் முறையாக பாதுகாப்பு கொடுத்திருந்தால், 41 உயிர்கள் பாதுகாக்கப்பட்டிருக்கும். 41 பேர் உயிரிழப்பிற்கு அரசாங்கம் தான் பொறுப்பேற்க வேண்டும். 41 பேர் இறந்ததற்கு காரணம் திமுக தான். முதலமைச்சர் கையில் தான் காவல் துறை இருக்கிறது. அவர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியிருந்தால், இந்த உயிர்களை பாதுகாத்திருக்கலாம்., அதே போல் விஜய் இதற்கு முன் நடத்திய நான்கு கூட்டங்களிலும் பாதுக்காப்பு இல்லாத போது மக்களை காப்பது தலைவரின் கடமை, பொதுக்கூட்டங்களில் கவனமாக செயல்ப்பட்டு இருந்தால் உயிரிழப்புகளை தடுத்து என்று விஜய்க்கு இபிஎஸ் அறிவுரை வழங்கினார்.

இபிஎஸ் கேள்வி:

அரசு உயர் அதிகாரிகளை வைத்து கரூர் துயரம் பற்றி செய்தியாளர் சந்திப்பு நடத்துகிறார்கள். இது ஒரு நபர் ஆணைய விசாரணையை தவறாக வழிநடத்துகின்ற மற்றும் அவமதிக்கும் செயல். தங்கள் துறை சார்ந்த பணியை செயல்படுத்த வேண்டிய துறை செயலாளர்கள், இத்தகைய தவறான செயல்களில் ஈடுபடும் போது, நீங்கள் அரசியல்வாதிகள் அல்ல என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். செய்தியாளர் சந்திப்பு நடத்தும் செந்தில் பாலாஜி முகத்தில், சொல்லில் பயம் தெரிகிறது. ஏன் இந்த பயம்? பதற்றம்? மடியில் கனமில்லை என்றால் வழியில் பயம் எதற்கு? இவ்வளவு நடந்தும், திருந்திய பாடில்லை என்பதே அவரது அரசின் செயல்பாடுகள் உணர்த்துகின்றன என்று இபிஎஸ் கேள்வி எழுப்பி இருந்தார்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

லோடு இறக்க 3 நாள் தாமதம் !! லாரி டிரைவரை இரும்பு ராடால் அடித்துக் கொன்ற உரிமையாளர்
லோடு இறக்க 3 நாள் தாமதம் !! லாரி டிரைவரை இரும்பு ராடால் அடித்துக் கொன்ற உரிமையாளர்
மது குடிக்க பணம் கேட்டு டார்ச்சர்...கணவரை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்ற மனைவி
மது குடிக்க பணம் கேட்டு டார்ச்சர்...கணவரை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்ற மனைவி
300 டோக்கன்கள்... நள்ளிரவு வரை நீடித்த பத்திரப்பதிவு! ஸ்ரீபெரும்புதூரில் நள்ளிரவில் நடந்தது என்ன?
300 டோக்கன்கள்! நள்ளிரவு வரை நீடித்த பத்திரப்பதிவு! ஸ்ரீபெரும்புதூரில் நள்ளிரவில் நடந்தது என்ன?
காதலிக்கு பரிசு தர மளிகை கடைக்காரர் மனைவி கொலை ? 15 சவரன் கொள்ளையடித்த வாலிபர் சிக்கியது எப்படி
காதலிக்கு பரிசு தர மளிகை கடைக்காரர் மனைவி கொலை ? 15 சவரன் கொள்ளையடித்த வாலிபர் சிக்கியது எப்படி

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Embed widget