மேலும் அறிய

EPS Vs Stalin Vs Udhayanidhi: ED-க்கு பயமில்லை என்றால் ‘தம்பி‘ ஏன்...? - போட்டுத் தாக்கிய இபிஎஸ், என்ன கூறினார் தெரியுமா.?

ED குறித்த உதயநிதியின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும், ஸ்டாலின் டெல்லி பயணம் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.?

கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் டெல்லி பயணம், அமலாக்கத் துறையை கண்டு பயமில்லை என்ற உதயநிதியின் பேச்சு உள்ளிட்டவைகள் குறித்து சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார். அவர் பேசியது என்ன.? விரிவாக பார்க்கலாம்.

“3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்திற்கு செல்லாதது ஏன்.?“

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டிற்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை, பல்வேறு திட்டங்களுக்கும் அனுமதி வழங்கவில்லை என்ற குற்றம்சாட்டை சொல்லி, கடந்த 3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புறக்கணித்ததாக விமர்சித்தார்.

3 ஆண்டு கால புறக்கணிப்பிற்குப் பின், நேற்று டெல்லியில் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டு தன்னுடை கருத்தை தெரிவித்துள்ளதாகவும், கடந்த 3 ஆண்டுகளாக ஏன் கலந்துகொள்ளவில்லை என்றும் கேள்வி எழுப்பினார். அதோடு, கடந்த ஆண்டுகளில் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தால், தமிழ்நாட்டிற்கு தேவையான நிதி கிடைத்திருக்கலாம், புதிய திட்டங்களுக்கு அனுமதி கிடைத்திருக்கலாம், பிரச்னைகளை நிதி ஆயோக் கூட்டத்தில் தெரிவித்திருக்கலாம் என்று கூறினார். மேலும், இதிலிருந்தே, மக்கள் மீது அக்கறை இல்லாத முதலமைச்சர் இவர் என்பது தெரியவருவதாக விமர்சித்தார்.

தற்போது, தமிழகத்தில் ஸ்டாலின் மாடல் ஆட்சியில், பல்வேறு துறைகளில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், டாஸ்மாக் நிறுவனத்தில் பல்வேறு மட்டத்தில் ஊழல் நடைபெற்று, அமலாக்த்துறையால் ரெய்டு நடைபெற்று, விசாரணையும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார். இதனால், ரெய்டுக்கு பயந்தே ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டதாக கருத வேண்டியுள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளாதவர், தற்போது பிரச்னை வந்துவிட்டதால், பிரதமர் மோடியை தனியே சந்தித்து பேசியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உண்மையிலேயே மக்கள் மீது அக்கறை இருந்தால், 3 ஆண்டுகளாக ஏன் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தார் என்பதே மக்களின் சந்தேகம் என தெரிவித்தார் எடப்பாடி பழனிசாமி. மேலும், ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, மோடி தமிழ்நாட்டிற்கு வந்தபோது கருப்பு பலூன் விட்டு எதிர்ப்பு தெரிவித்தார் என்றும், தற்போது திமுக ஆட்சிக்கு வந்து ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கும் போது, அதே மோடிக்கு வெள்ளைக் குடை பிடிப்பதாக விமர்சித்தார்.

எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு, ஆளும் கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு என, இரண்டை வேடம் போடுகின்ற கட்சி திமுக என்பது வெளிப்படையாகவே குற்றம்சாட்டினார். அதோடு, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக்கொண்டிருப்பதாகவும், மோசமான ஆட்சிக்கு அரக்கோணம் சம்பவமே சாட்சி என்றும் கடுமையாக விமர்சித்தார்.

“ED-க்கு பயமில்லை என்றால் ‘தம்பி‘ வெளிநாட்டிற்கு ஓடியது ஏன்...?“

ரெய்டு குறித்த உதயநிதியின் கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, ED-யை கண்டாலும் பயமில்லை, மோடியை கண்டாலும் பயமில்லை என்றால், அவருடைய தம்பி ஏன் வெளிநாட்டிற்கு தப்பி ஓடினார் என கேள்வி எழுப்பினார். அவர் தமிழ்நாட்டில் இருந்திருந்தால், ED-யை கண்டு பயமில்லை என்று சொல்லி இருக்கலாம், ஆனால், உதயநிதியின் தம்பி என்று சொல்லப்படுபவர், தப்பித்தோம் பிழைத்தோம் என்று வெளி நாட்டிற்கு ஓடியதன் காரணம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், இது தான் ஆரம்ப கட்டம் என்றும், உண்மைகள் வெளிவரும் போது, யார் எப்படி பயப்படுகிறார்கள் என்பது தெரியவரும் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
Top Searched Travel Destinations: 2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
Ration Shop: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |
சினிமா காதலன் AVM சரவணன் காலமானார் அதிர்ச்சியில் திரையுலகம் | AVM Studios AVM Saravanan Death

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
Top Searched Travel Destinations: 2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
Ration Shop: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Anbumani Ramadoss : பாமக தலைவர் நான் தான்...! மெகா கூட்டணி குறித்த அன்புமணி பரபரப்பு தகவல்!
Anbumani Ramadoss : பாமக தலைவர் நான் தான்...! மெகா கூட்டணி குறித்த அன்புமணி பரபரப்பு தகவல்!
Top Searched Recipes: சரக்கு முதல் சைட்டிஷ் வரை.. 2025ல் அதிகம் தேடப்பட்ட உணவுகள் .. இட்லி தான் நம்பர் ஒன்..!
Top Searched Recipes: சரக்கு முதல் சைட்டிஷ் வரை.. 2025ல் அதிகம் தேடப்பட்ட உணவுகள் .. இட்லி தான் நம்பர் ஒன்..!
Thiruparankundram Case: திருப்பரங்குன்றம் விவகாரம்.. உள்நோக்கத்துடன் வழக்கு என நீதிபதி கருத்து.. தமிழக அரசு மனு தள்ளுபடி!
Thiruparankundram Case: திருப்பரங்குன்றம் விவகாரம்.. உள்நோக்கத்துடன் வழக்கு என நீதிபதி கருத்து.. தமிழக அரசு மனு தள்ளுபடி!
‘We are not allowing’  இந்து முன்னணியினரை தடுத்து நிறுத்திய போலீஸ் கமிஷனர் - யார் இந்த  லோகநாதன் IPS?
‘We are not allowing’ யார் இந்த மதுரை கமிஷனர் லோகநாதன் IPS..?
Embed widget