மேலும் அறிய

EPS on DMK Govt: விஷ காய்ச்சல்களால்‌ அவதியுறும்‌ மக்கள்‌: காய்ச்சலைக் கட்டுப்படுத்தாத விடியா அரசு- ஈபிஎஸ் கடும்‌ கண்டனம்‌

டெங்கு போன்ற விஷ காய்ச்சல்களால்‌ மக்கள்‌ அவதியுறுவதாகவும்‌ திமுக அரசு காய்ச்சலை கட்டுப்படுத்தவில்லை என்றும் அதிமுக பொதுச்‌ செயலாளர்‌ எடப்பாடி பழனிசாமி‌ கண்டனம்‌ தெரிவித்துள்ளார்.

டெங்கு போன்ற விஷ காய்ச்சல்களால்‌ மக்கள்‌ அவதியுறுவதாகவும்‌ சிறப்பு மருத்துவ முகாம்கள்‌ நடத்தி திமுக அரசு காய்ச்சலை கட்டுப்படுத்தவில்லை என்றும் அதிமுக பொதுச்‌ செயலாளர்‌ எடப்பாடி பழனிசாமி‌ கண்டனம்‌ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

கடந்த இரண்டு ஆண்டு கால விடியா தி.மு.க. அரசின்‌ அலங்கோல நிர்வாகத்தாலும்‌, சுகாதாரத்‌ துறையின்‌ அலட்சியப்‌ போக்காலும்‌ அரசு மருத்துவமனைகளையே நம்பி இருக்கும்‌ பாமர மக்கள்‌ முறையான சிகிச்சை இல்லாமல்‌, மருந்து மாத்திரைகள்‌ கிடைக்காமல்‌ தங்கள்‌ உயிரைக்‌ காக்க போராடும்‌ அவலம்‌ ஏற்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில்‌ நோயாளிகளுக்கு போதுமான மருந்துகள்‌ வழங்கப்படுவதில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் ஆரம்பிக்கப்பட்ட Tamil Nadu Medical Services Corporation Ltd., (TNMSC) எனப்படும் தமிழ்‌ நாடு மருத்துவப்‌ பணிகள்‌ கழகம்‌, தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும்‌ 3 முதல்‌ 6 மாதங்களுக்குத்‌ தேவைப்படும்‌ மருந்து பொருட்கள்‌ மற்றும்‌ மருத்துவ உபகரணங்களை மொத்தமாக வாங்கி, மாநிலம்‌ முழுவதும்‌ அரசு மருத்துவமனைகளுக்கு தாமதமின்றி நேரடியாக வழங்கும்.‌ இந்நிறுவனம்‌ இப்போது இருக்கிறதா என்பதே தெரியவில்லை. அனைத்து பெரிய மருத்துவமனைகளிலும்‌ லோக்கல்‌ கொள்முதல்‌ என்று அனைத்து மருந்துகளும்‌ அதிக விலைக்கு உள்ளூரிலேயே வாங்கப்படுவதாக செய்திகள்‌
வருகின்றன. இதனால்‌ மக்களின்‌ வரிப் பணம்‌ வீணாகிறது.

கடந்த சில நாட்களாக மாநிலத்தின்‌ பல்வேறு பகுதிகளில்‌ குழந்தைகளும்‌ பெரியவர்களும்‌ டெங்கு போன்ற விஷ காய்ச்சலால்‌ பாதிக்கப்பட்டு
அரசு மருத்துவமனைகளுக்கு படை எடுத்து வருவதாக செய்திகள்‌ வருகின்றன. குறிப்பாக சென்னை புறநகர்‌ பகுதிகள்‌, திருவள்ளூர்‌, காஞ்சிபுரம்‌, மதுரை மாவட்டம்‌ உசிலம்பட்டி, போடி, பாளையங்கோட்டை பகுதிகளில்‌ பலர்‌ பாதிக்கப்பட்டுள்ளனர்‌.

* தமிழகத்தில்‌ கடந்த 7 மாதங்களில்‌ சுமார்‌ 4 ஆயிரம்‌ பேர்‌ டெங்கு காய்ச்சலால்‌ பாதிக்கப்பட்டுள்ளதாகவும்‌;

* அதே போல்‌, நூற்றுக்கணக்கானோர்‌ சிக்கன்‌ குனியா நோயாலும்‌, மலேரியா காய்ச்சலாலும்‌ பாதிக்கப்பட்டுள்ளதாகவும்‌;

* மேலும்‌, சிக்கன்‌ குனியாவால்‌ பாதிக்கப்படும்‌ நோயாளிகள்‌, இந்நோயை கண்டறிவதற்குள்‌, இரண்டு மூன்று நாட்களில்‌ கடும்‌ மூட்டு வலியினால்‌
மிகவும்‌ சிரமப்படுவதாகவும்‌ செய்திகள்‌ வந்த வண்ணம்‌ உள்ளன.

இந்நிலையில்‌ தட்பவெப்ப காலநிலை மாற்றம்‌ காரணமாக இருமல்‌, சளி மற்றும்‌ தொண்டை வலியுடன்‌ கூடிய காய்ச்சல்‌ பாதிப்பு சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இவ்வகைக் காய்ச்சலுடன்‌ உடல்‌ சோர்வு, உடல்‌ வலி பாதிப்புகளும்‌ இருப்பதால்‌ தமிழகம்‌ முழுவதும்‌ சிறப்பு மருத்துவ முகாம்கள்‌ நடத்தி நோய்களைக்‌ கட்டுப்படுத்த விடியா திமுக அரசு முன்‌ வர வேண்டும்‌.

* சில நாட்களாக வைரஸ்‌ காய்ச்சலால்‌ ஏராளமான ஏழை, எளிய, நடுத்தர மக்கள்‌ அரசு மருத்துவமனைகளுக்கு படை எடுத்து வருவதாக அச்சு ஊடகங்களில்‌ செய்திகள்‌ வந்துள்ளன.

தமிழ்‌ நாடு மருத்துவப்‌ பணிகள்‌ கழகம்‌, தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும்‌ தேவைப்படும்‌ மருந்து பொருட்களை மொத்தமாக வாங்கித்‌ தராததால்‌, பல்வேறு நோய்களால்‌ பாதிக்கப்படும்‌ ஏழை, எளிய நோயாளிகளுக்குத்‌ தேவையான ஆன்ட்டிபயாட்டிக்‌ மருந்து மாத்திரைகளுக்குத்‌ தட்டுப்பாடு உள்ளதாக செய்திகள்‌ தெரிவிக்கின்றன. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும்‌ நோயாளிகளுக்குத்‌ தேவைப்படும்‌ மருந்து பொருட்கள்‌ முழுமையாக இருப்பதை சுகாதாரத்‌ துறை அமைச்சர் உறுதிப்படுத்த வலியுறுத்துகிறேன்‌.

"நோய்‌ நாடி, நோய்முதல்‌ நாடி... என்ற வள்ளுவன்‌ அறிவுரைக்கேற்ப, பரவி வரும்‌ நோய்களின்‌ மூலக்கூறுகளை கண்டறிந்து அவைகளை ஒழிக்கும்‌ பணியை தொய்வில்லாமல்‌ செய்து அப்பாவி மக்களின்‌ உயிரைக்‌ காக்க வேண்டும்‌ என்று இந்த மக்கள்‌ விரோத விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்‌.

இவ்வாறு ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்.‌

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
O Panneer Selvam: திமுக துதிபாடிய ஓபிஎஸ்.. ஆஃப் செய்த செங்கோட்டையன்.. ரவுண்டு கட்டிய தவெக!
O Panneer Selvam: திமுக துதிபாடிய ஓபிஎஸ்.. ஆஃப் செய்த செங்கோட்டையன்.. ரவுண்டு கட்டிய தவெக!
Marie Wilson: தமிழ் கற்றுக் கொண்டிருக்கிறேன்.. என்னமோ பேசிட்டு போங்க.. மரிய வில்சன் பதிலடி!
Marie Wilson: தமிழ் கற்றுக் கொண்டிருக்கிறேன்.. என்னமோ பேசிட்டு போங்க.. மரிய வில்சன் பதிலடி!
" கள்ளக் காதலை கைவிடாத தாய் " கஞ்சா போதையில் மகன் செய்த கொடூர காரியம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
RBI Loan Recovery: லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
GOLD AND SILVER RATE TODAY : யப்பா..ஒரே நாளில் சவரனுக்கு ரூ 2,400 உயர்ந்தது.! நகைப்பிரியர்களுக்கு ஷாக் -இன்றைய விலை இதோ..
யப்பா..ஒரே நாளில் சவரனுக்கு ரூ 2,400 உயர்ந்தது.! நகைப்பிரியர்களுக்கு ஷாக் -இன்றைய விலை இதோ..
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Toyota 7 Seater: நாட்டின் பெஸ்ட் 7 சீட்டர் - டொயோட்டா தரும் 5 பயங்கரமான அப்டேட்கள் - மைலேஜ் ஏறுமா? விலை?
நாட்டின் பெஸ்ட் 7 சீட்டர் - டொயோட்டா தரும் 5 பயங்கரமான அப்டேட்கள் - மைலேஜ் ஏறுமா? விலை?
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
Embed widget