மேலும் அறிய

EPS Met RN Ravi: ஆளுநரைச் சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி.. அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு.. காரணம் என்ன?

தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் புழக்கம், கள்ளச்சாராய மரணங்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு ஆளுநரை சந்தித்து புகார் மனு அளித்தார்.

எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து புகார் மனு அளித்தனர்.

தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் புழக்கம், சட்டம்- ஒழுங்கு சீர்கேடு, மின்வெட்டு, கள்ளச்சாராய மரணங்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் தொடர்பாக மனு அளிக்கப்பட்டது. 

சமீபத்தில் தமிழ்நாட்டில் விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தி சுமார் 22 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணமும் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்று அ.தி.மு.க. குற்றம் சாட்டி வரும் நிலையில், கள்ளச்சாராயம் குடித்து பலரும் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆளுநரை சந்திக்க  திட்டமிடப்பட்டிருந்தது.

அதுமட்டுமல்லாமல் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போதை பொருள் பழக்கம், கள்ளச்சாராயம்/ விஷ சாராய மரணங்கள், பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று சென்னை சைதாப்பேட்டையில் சின்னமலை முதல் ஆளுநர் மாளிகை வரை பேரணியாக சென்றனர். அதிமுகவை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டனர். இதனால் சின்னமலை - வேளச்சேரி சாலையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

பேரணி சென்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து புகார் மனு அளித்தார். இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் வலியுறுத்தப்பட்டது.

புகார் மனு அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “ அதிமுக சார்பில் ஆளுநரை சந்தித்து திமுகவின் இரண்டு ஆண்டுகள் ஆட்சியில் நடைபெற்றுள்ள ஊழல் மற்றும் சட்ட ஒழுங்கு குறித்து புகார் அளித்து உள்ளோம். புகார்களை பரிசீலிப்பதாக ஆளுநர் தெரிவித்துள்ளார். திமுக பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் முடிந்துள்ளன பல்வேறு துறைகளில் ஊழல்கள் பெரிய அளவில் நடைபெறுகின்றன, ஆதாரங்களுடன் ஊழல்களை ஆளுநரிடம் கூறியுள்ளோம். பிரதான எதிர்கட்சியாக தினம் தோறும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தெரிவித்து உள்ளோம்”, என்றார்.

மேலும், “சட்ட ஒழுங்கு எவ்வாறு சீர்கெட்டுள்ளது என்பது குறித்தும் புகார் தெரிவித்து உள்ளோம். தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலரை அலுவலகத்தில் கொலை செய்துள்ளனர். கள்ளச்சாராயம் குடித்து 60 பேர் மருத்துவமனையில் உள்ளனர் ,தற்போது வரை 23 நபர்கள் உயிர் இழந்துள்ளனர். தஞ்சாவூரில் இரண்டு பேர் பாரில் மது குடித்து இறந்துள்ளனர். திறமையற்ற முதல்வராக உள்ளார். வேங்கைவயல் கிராமத்தில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்தவர்களை தற்போது வரை கண்டுபிடிக்கவில்லை.

முன்பெல்லாம் இருசக்கர வாகனத்தில் சென்றே செயின் பறிப்பு செய்தனர் தற்போது காரில் சென்று செயின் பறிப்பு செய்கின்றனர் அதற்கு காரணம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது தான், நடவடிக்கை இல்லாத காரணத்தால் தைரியமாக செய்கின்றனர்” என கூறியுள்ளார்.

அதனை தொடர்ந்து பேசிய எடப்பாடி, “ காவல்துறை மானிய கோரிக்கையில் கொடுக்கப்பட்ட புள்ளி விவரங்கள் அடிப்படையில் 2020 -31, 2021 - 32 பாலியல் வன்புணர்வு நடைபெற்ற நிலையில் 2022 - 58 பாலியல் வன்புணர்வு நடைபெற்று உள்ளது. டாஸ்மாக் கடைகளில் போலி மதுபானம் விற்பனை செய்யபடுகிறது. 6340 டாஸ்மாக் கடைகள் தற்போது இயங்கி வருகிறது,70 % பார் ஏற்கனவே இயங்கி வந்த நிலையில் அதில் 25% பார்கள் மட்டுமே தற்போது இயங்கி வருகிறது 75 % பார்கள் சட்ட விரோதமாக நடைபெற்று வருகிறது அதன் காரணமாகவே போலி மதுபானம் விற்பனை நடைபெற்று வருகிறது. சென்னையில் 97% பார்கள் அனுமதி இல்லாமல் நடைபெறுகிறது” , என தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல், “உதயநிதி ஸ்டாலின் சபரீசன் 30 ஆயிரம் கோடி ரூபாய் வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருவதாக ptr பேசிய ஆடியோ வெளியே வந்துள்ளது. சாதாரண நபர் அல்ல நன்றாக படித்தவர் , பொருளாதார நிபுணர் அதுகுறித்து எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாத நிலையில் மத்திய அமைப்புகள் மூலம் விசாரணை நடத்த வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளில் 50 படங்கள் ரெட் ஜெயின்ட் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ளன” என்பதை சுட்டுக்காட்டினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vijay Y Security: விஜய் உயிருக்கு ஆபத்தா?  Y பிரிவு பாதுகாப்பு ஏன்? பாஜக பிளான் போடுகிறதா?
விஜய் உயிருக்கு ஆபத்தா? Y பிரிவு பாதுகாப்பு ஏன்? பாஜக பிளான் போடுகிறதா?
மோடிக்கு எலான் மஸ்க் கொடுத்த பரிசு..பதிலுக்கு அவரின் குழந்தைகளுக்கு மோடி கொடுத்தது என்ன?
மோடிக்கு எலான் மஸ்க் கொடுத்த பரிசு..பதிலுக்கு அவரின் குழந்தைகளுக்கு மோடி கொடுத்தது என்ன?
Chennai Power Shutdown: சென்னையில் நாளை ( 15.02.2025 ) மின்தடை: முகப்பேர், பட்டாபிராம்...
Chennai Power Shutdown: சென்னையில் நாளை ( 15.02.2025 ) மின்தடை: முகப்பேர், பட்டாபிராம்...
Kamal Hassan: நீங்களே இப்படி பண்ணலாமா...  'அமரன் 100' வெற்றி விழாவில் மீடியாக்களை அசிங்கப்படுத்திய கமல்ஹாசன்?
Kamal Hassan: நீங்களே இப்படி பண்ணலாமா... 'அமரன் 100' வெற்றி விழாவில் மீடியாக்களை அசிங்கப்படுத்திய கமல்ஹாசன்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK Vs VCK | ”2026-ல் ஸ்டாலினை வீழ்த்துவோம் உண்மையான சங்கி திமுக” விசிக நிர்வாகி ஆவேசம்!Palanivel Thiaga Rajan | ”ஜெ. அம்மா கூட  இத செய்யல”கும்பிட்ட அதிமுக நிர்வாகிகள் மதுரையில் மாஸ் காட்டிய PTR!2026 Election Survey | அதிமுக, பாஜக WASTE கிங்மேக்கர் விஜய்! சர்வேயில் மெகா ட்விஸ்ட் | TVK VijayTVK Vijay | “என்னை LOVE பண்ணு, இல்லனா”மிரட்டிய தவெக நிர்வாகி 8ஆம் வகுப்பு சிறுமி தற்கொலை! | Gingee

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Y Security: விஜய் உயிருக்கு ஆபத்தா?  Y பிரிவு பாதுகாப்பு ஏன்? பாஜக பிளான் போடுகிறதா?
விஜய் உயிருக்கு ஆபத்தா? Y பிரிவு பாதுகாப்பு ஏன்? பாஜக பிளான் போடுகிறதா?
மோடிக்கு எலான் மஸ்க் கொடுத்த பரிசு..பதிலுக்கு அவரின் குழந்தைகளுக்கு மோடி கொடுத்தது என்ன?
மோடிக்கு எலான் மஸ்க் கொடுத்த பரிசு..பதிலுக்கு அவரின் குழந்தைகளுக்கு மோடி கொடுத்தது என்ன?
Chennai Power Shutdown: சென்னையில் நாளை ( 15.02.2025 ) மின்தடை: முகப்பேர், பட்டாபிராம்...
Chennai Power Shutdown: சென்னையில் நாளை ( 15.02.2025 ) மின்தடை: முகப்பேர், பட்டாபிராம்...
Kamal Hassan: நீங்களே இப்படி பண்ணலாமா...  'அமரன் 100' வெற்றி விழாவில் மீடியாக்களை அசிங்கப்படுத்திய கமல்ஹாசன்?
Kamal Hassan: நீங்களே இப்படி பண்ணலாமா... 'அமரன் 100' வெற்றி விழாவில் மீடியாக்களை அசிங்கப்படுத்திய கமல்ஹாசன்?
பெரியார் சிலை அருகே நாம் தமிழர் பொதுக்கூட்டம் - அனுமதி வழங்கியதா நீதிமன்றம்?
பெரியார் சிலை அருகே நாம் தமிழர் பொதுக்கூட்டம் - அனுமதி வழங்கியதா நீதிமன்றம்?
Stalin Reply to Annamalai: அறிவாலயத்தின் ஒரு துகளைக்கூட எவராலும் அசைக்க முடியாது..அண்ணாமலைக்கு ஸ்டாலின் பதிலடி..
அறிவாலயத்தின் ஒரு துகளைக்கூட எவராலும் அசைக்க முடியாது..அண்ணாமலைக்கு ஸ்டாலின் பதிலடி..
Jio Hotstar Merger: ஜியோ வசமான ஹாட்ஸ்டார்! புதிய கட்டணம் என்ன தெரியுமா? 3 ப்ளானின் முழு விவரம்!
Jio Hotstar Merger: ஜியோ வசமான ஹாட்ஸ்டார்! புதிய கட்டணம் என்ன தெரியுமா? 3 ப்ளானின் முழு விவரம்!
Trichy-Bahrain Flight:  திருச்சி மக்களே... பறக்க நீங்க ரெடியா...? -  விரைவில் வருதாம் புதிய விமான சேவை
திருச்சி மக்களே... பறக்க நீங்க ரெடியா...? - விரைவில் வருதாம் புதிய விமான சேவை
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.