மேலும் அறிய

அய்யா இல்லை என்றால் நாம் யாரும் கிடையாது ! கண்கலங்கிய அன்புமணி... சொந்த ஊரில் நடந்தது என்ன ?

பின்தங்கிய நிலையில் இருப்பவர்கள் சுயமரியாதையோடு வாழ வேண்டும் என்பதற்காகத்தான் மருத்துவர் ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சியை தொடங்கினார் - அன்புமணி ராமதாஸ்

விழுப்புரம் : பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் என்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தன்னுடைய சொந்த கிராமமான கீழ்சிவிரியில் தன்னுடைய குடும்பத்தினரோடு குலதெய்வ கோயிலில் வழிபாடு செய்தார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள கீழ்சிவிரி கிராமத்தில், தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதிதாகக் கட்டப்பட்ட நியாயவிலைக் கடையின் திறப்பு விழா இன்று நடை பெற்றது. இந்த விழாவில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் மற்றும் அவரது துணைவியார் பசுமை தாயகம் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மற்றும் சௌமியா அன்புமணி ஆகியோர் முதலில் மரக்காணம் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் திண்டிவனம் அருகில் உள்ள நல்லாவூர் கிராமத்திற்கு வருகை தந்தனர். அங்கு அமைந்துள்ள அவர்களது குலதெய்வக் கோவிலான ஸ்ரீ புஷ்கலை சமேத ஐயனாரப்பன் கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து சொந்த ஊரான கிழ்சிவிரி கிராமத்திற்கு வருகை புரிந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது துணைவியார் சௌமியா அன்புமணி ஆகியோர் புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடையை திறந்து வைத்து அதற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் அவர்களது கிராம மக்களிடையே சிறப்புரை ஆற்றினர்.

பின்னர் கூட்டத்தினர் மத்தியில் அன்புமணி ராமதாஸ் பேசுகையில்: 

ஐயா இல்லை என்றால் நாம் யாரும் கிடையாது.. ஐயா ஒரு சமூக சீர்திருத்தவாதி.. சமூக நீதி என்றால் ஐயா.. சுற்றுச்சூழல் கல்வி வேலை வாய்ப்பு என பல விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படுவதற்காக பாடுபட்டவர் மருத்துவர் அய்யா அவர்கள். பின்தங்கிய நிலையில் இருப்பவர்கள் சுயமரியாதையோடு வாழ வேண்டும் என்பதற்காகத்தான் மருத்துவர் ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சியை தொடங்கினார். நான் சிறுவயதில் இந்த ஊரில் உள்ள அனைத்து கிணறுகளில் குளித்து இருக்கிறேன் என பல்வேறு நினைவுகளை கூறி வந்த நிலையில் தீடிரென கண்கலங்கினார். பின்னர் கிராம மக்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர். இந்திய தேர்தல் ஆணையம் விதிகளின்படி பாமகவின் தலைவராக 2026 ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்க எனக்கு அனுமதி கொடுத்துள்ளது. இதை எதிர்த்து நீதிமன்றத்திற்கு சென்றார்கள் அந்த வழக்கு விசாரணை என்று நடைபெற்றது.  ஆணையம் எனக்கு கொடுத்த அங்கீகாரத்தை ரத்து செய்ய முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

இன்று டெல்லி உயர்நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பை கொடுத்துள்ளது எந்த பிரச்சனை இருந்தாலும் சிவில் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்று கூறியிருக்கிறது. இதைத்தான் ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிஆனந்த் வெங்கடேசன் அவர்களும் தெரிவித்து இருந்தார். எனவே பாமகவில் எந்த குழப்பமும் கிடையாது பாமகவின் தலைவராக நானே நீடிப்பேன் மாம்பழம் சின்னமும் என்னிடம் தான் இருக்கிறது. தேர்தல் ஆணையம் கொடுத்த அங்கீகாரம் தொடரும். அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை நான் தான் பாமகவின் தலைவராக இருப்பேன். மற்றபடி நீதிமன்றத்தை அவர்கள் அணுகினால் நாங்கள் பதில் கொடுக்க தயாராக இருக்கிறோம். நீதிமன்றத்தில் மாம்பழம் சின்னம் சம்பந்தமாக எந்த விவாதமும் நடைபெறவில்லை.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS STATEMENT: மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
Railway Job: ”ரயில் இருக்கு, ஓட்ட தான் ஆள் இல்லையாம்” - ரயில்வேயில் இவ்ளோ காலி பணியிடங்களா? லோகோ பைலட்?
Railway Job: ”ரயில் இருக்கு, ஓட்ட தான் ஆள் இல்லையாம்” - ரயில்வேயில் இவ்ளோ காலி பணியிடங்களா? லோகோ பைலட்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike
Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்
டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS STATEMENT: மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
Railway Job: ”ரயில் இருக்கு, ஓட்ட தான் ஆள் இல்லையாம்” - ரயில்வேயில் இவ்ளோ காலி பணியிடங்களா? லோகோ பைலட்?
Railway Job: ”ரயில் இருக்கு, ஓட்ட தான் ஆள் இல்லையாம்” - ரயில்வேயில் இவ்ளோ காலி பணியிடங்களா? லோகோ பைலட்?
‘தொகுதி மாறும் செந்தில்பாலாஜி?’ கோவையை தேர்வு செய்தது ஏன்? – பரபரப்பு பின்னணி..!
‘தொகுதி மாறும் செந்தில்பாலாஜி?’ கோவையை தேர்வு செய்தது ஏன்? – பரபரப்பு பின்னணி..!
Old Pension Scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.? 3 அமைச்சர்கள் கையில் இன்று முக்கிய முடிவு
பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.? 3 அமைச்சர்கள் கையில் இன்று முக்கிய முடிவு
திருவள்ளூரில் அரசுப்பள்ளி மாணவர் பலி; யாராக இருந்தாலும் நடவடிக்கை- அமைச்சர் அன்பில் உறுதி!
திருவள்ளூரில் அரசுப்பள்ளி மாணவர் பலி; யாராக இருந்தாலும் நடவடிக்கை- அமைச்சர் அன்பில் உறுதி!
Kia Discount: களத்துக்கு வந்த கியா..! மொத்த மாடல்களுக்கும் ரூ.3.6 லட்சம் வரை தள்ளுபடி - டிச., விஷேசம் என்ன?
Kia Discount: களத்துக்கு வந்த கியா..! மொத்த மாடல்களுக்கும் ரூ.3.6 லட்சம் வரை தள்ளுபடி - டிச., விஷேசம் என்ன?
Embed widget