DMK: கொத்தடிமைகள்.. உபி... கொத்துஸ்! இளைஞர்களிடம் இப்படியா கட்சியை கொண்டு போவீங்க? கொதிக்கும் திமுக உடன்பிறப்புகள்
திமுக சமீபத்தில் நடத்திய ஜென்இசட் கூட்டத்தில் பங்கேற்று பேசிய இளைஞர்கள் கொத்தடிமைகள், உபி, கொத்துஸ் என்று பேசியது இணையத்தில் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது.

தமிழ்நாட்டில் நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்தது. தவெக-வின் விசில் புரட்சியாலும், விஜய் மீதான எதிர்பார்ப்பாலும் எதிர்பார்த்த இடங்களை திமுக-வால் வெல்ல இயலவில்லை.
இளைஞர்கள் வாக்குகள்:
தேர்தல் தோல்விக்கான காரணத்தை திமுக ஆராய்ந்து பார்த்ததில் இளைஞர்களின் வாக்குகள் பெருவாரியாக விஜய்க்கு சென்றது தெரியவந்துள்ளது. குறிப்பாக, பல தொகுதிகளில் தவெக வேட்பாளர் யாரென்றே தெரியாத சூழலில், விஜய்யின் முகத்திற்காக தவெக-வில் வாக்குகளை குவித்துள்ளனர்.
இளைஞர்களின் வாக்குகள் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கான அடையாளமாக இந்த தேர்தல் மாறியிருப்பதால், உடனடியாக இளைஞர்களை தங்கள் வசம் கொண்டு வர திமுக களமிறங்கி பணியாற்றி வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு திமுக ஜென் இசட் திமுக என்ற கூட்டத்தை நடத்தியது.
கொத்தடிமைகள், உபிஸ், கொத்துஸ்:
இளைஞர்கள் மத்தியில் திமுக-விற்கு எந்தளவு ஆதரவு இருக்கிறது என்பதை காட்டுவதற்காக நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில், மேடையில் பேசிய சில இளைஞர்களின் வார்த்தைகள் இணையத்தில் கேலிக்கு ஆளாகி வருகிறது. கொத்தடிமைகள் என்பதை பெருமையாக சொல்வோம், நாங்கள் கொத்துஸ், உபி-க்கள் தான் என்று அந்த கூட்டத்தில் பங்கேற்ற பலரும் பேசியதை விமர்சித்தும், கேலி செய்தும் இணையத்தில் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
அதேசமயம், அரசியல் விமர்சகர்கள், நிபுணர்கள் பலரும் இளைஞர்கள் இதுபோன்று பேசியிருப்பதை தவிர்த்திருக்க வேண்டும் என்றே கூறியுள்ளனர். ஏனென்றால், திமுக-வின் சாதனைகளையும், வரலாற்றையும் அனைவரிடமும் எடுத்துக்கூறும் வகையில் பேசாமல் கொத்தடிமைகள்தான் என்று அவர்களே கூறியிருப்பது கட்சியை மேலும் விமர்சனத்திற்கு ஆளாக்கும் செயல் என்றே கூறப்படுகிறது. கட்சியின் சில நிர்வாகிகள் கட்சியை இளைஞர்கள் மத்தியில் இப்படியா கொண்டு செல்வது என்றும் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
விமர்சனம்:
எதிர்க்கட்சியினர், திமுக வெறுப்பாளர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளை தாங்களே பயன்படுத்தி தங்களை தாங்களே இவ்வாறு கூறியிருப்பதால் இளைஞர்கள் மத்தியில் திமுக-வின் செல்வாக்கை மேலும் சரிய வைக்கும் என்றே கூறப்படுகிறது. ஒவ்வொரு செயலும், வார்த்தைகளும் இணையத்தில் மிகப்பெரிய அளவில் பேசுபொருளாக மாறும் சூழலில் இதற்கு பின்பு நடக்கும் கூட்டங்களில் இதுபோன்ற வார்த்தைகளை தவிர்க்குமாறு கட்சியின் நிர்வாகிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று தங்களது ஆளுமைகளை நிலைநாட்ட திமுக முழு முனைப்புடன் உள்ளது. இனி வரும் தேர்தல்களில் இளைஞர்களின் வாக்குகள் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாகவே இருக்கும் என்பதால் அதற்கேற்ப பணியாற்ற திமுக தலைமையும் முடிவு செய்துள்ளது. இதனால், இனி வரும் நாட்களில் இளைஞர்களை கவரும் வகையிலும் அவர்களின் செயல்பாடுகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
DMK: சீனியர்களை ஓரங்கட்ட மு.க.ஸ்டாலின் முடிவு! இளசுகளைப் பிடிக்க திமுக-வில் இளைஞர்களுக்கு வாய்ப்பா?
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்





















