மேலும் அறிய

’நீட் தேர்வைக் கொண்டு வந்ததே திமுகதான்; ரத்துசெய்ய எதுவுமே செய்யவில்லை’- ஈபிஎஸ் தாக்கு

நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியத்தை உதயநிதி இதுவரை வெளியிடவில்லை.  முழுமையான எம்.பி.க்கள் இருந்தபோதும் நாடாளுமன்றத்தில் திமுக உரிய அழுத்தம் கொடுக்கவில்லை.

சேலத்தில் நீட் தேர்வை எழுதி மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காததால், தன் உயிரை மாய்த்துக்கொண்ட புனிதா என்னும் மாணவியின் வீட்டுக்கு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்று, உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

’’நீட் தேர்வைக் கொண்டுவந்த திமுகவே, அதை ரத்து செய்வதாகக் கூறி இரட்டை வேடம் போடுகிறது. ஏனெனில் திமுக- காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. இப்போது மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்து 41 மாதங்கள் ஆகியும், நீட் தேர்வை ரத்து செய்ய துவுமே செய்யவில்லை.

அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற்று என்ன பயன்?

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளில் திமுகவே வெற்றி பெற்றது. 2024 தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளே வெற்றி பெற்றன.

முழுமையான எம்.பி.க்கள் இருந்தபோதும் நாடாளுமன்றத்தில் திமுக உரிய அழுத்தம் கொடுக்கவில்லை. அவ்வாறு கொடுத்திருந்தால், ஒருவேளை நீட் தேர்வை ரத்து செய்திருக்கலாம்.

நீட் தேர்வு ரத்து ரகசியம் எங்கே?

நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியத்தை உதயநிதி வெளியிடுவதாகச் சொன்னார். ஆனால், இதுவரை வெளியிடவில்லை.

தமிழகத்தில் 1 கோடி பேரிடம் நீட் தேர்வை ரத்து செய்ய கையொப்பம் பெறுவதாக அறிவித்தனர். திமுக இளைஞரணி மாநில மாநாடு உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், நீட் தேர்வு ரத்து படிவத்தை வைத்திருந்தனர். அவை அனைத்தும் காலுக்கடியில் விழுந்து கிடந்த காட்சிகளைத் தொலைக்காட்சிகளில் கண்டோம்.

நாட்டு மக்களை ஏமாற்றுவதில் வல்லவர்கள்

நாட்டு மக்களை ஏமாற்றுவதில் திமுகவும் திமுக அரசும் வல்லவர்கள். மாணவர்கள் இவர்களால் ஏமாந்து நிற்கின்றனர். மாணவ- மாணவியர் மனவேதனையில், இப்படிப்பட்ட துயரமான செயலில் ஈடுபடக் கூடாது. பல்வேறு படிப்புகள் வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. அதில் கவனம் செலுத்தலாம்.

பிரதமரை பலமுறை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்த போதும், நீட் தேர்வு குறித்து அழுத்தம் கொடுக்கவில்லை. கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற கூடுதல் பயிற்சியளிக்க வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவு நிறைவேற 7.5 சதவீத இடஒதுக்கீடு அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது.

இதனால் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்வி பயின்று வருகின்றனர்.’’

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
கோவை தெற்கு: செந்தில் பாலாஜியின் அதிரடி திட்டம்! கொங்கு மண்டலத்தில் திமுகவின் ஆட்டம் ஆரம்பமா?
கோவை தெற்கு: செந்தில் பாலாஜியின் அதிரடி திட்டம்! கொங்கு மண்டலத்தில் திமுகவின் ஆட்டம் ஆரம்பமா?
திருவள்ளூரில் அரசுப்பள்ளி மாணவர் பலி; யாராக இருந்தாலும் நடவடிக்கை- அமைச்சர் அன்பில் உறுதி!
திருவள்ளூரில் அரசுப்பள்ளி மாணவர் பலி; யாராக இருந்தாலும் நடவடிக்கை- அமைச்சர் அன்பில் உறுதி!
BJP vs DMK: திமுகவின் மெகா பிளான்... முறியடிக்க கை கோர்க்கும் அண்ணாமலை- நயினார்.! திடீர் ட்விஸ்ட்
திமுகவின் மெகா பிளான்... முறியடிக்க கை கோர்க்கும் அண்ணாமலை- நயினார்.! திடீர் ட்விஸ்ட்
ABP Premium

வீடியோ

Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்
டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident
கைதாகிறாரா சீமான்? திமுக நிர்வாகி மீது அட்டாக் பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு | Seeman Arrest
நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
கோவை தெற்கு: செந்தில் பாலாஜியின் அதிரடி திட்டம்! கொங்கு மண்டலத்தில் திமுகவின் ஆட்டம் ஆரம்பமா?
கோவை தெற்கு: செந்தில் பாலாஜியின் அதிரடி திட்டம்! கொங்கு மண்டலத்தில் திமுகவின் ஆட்டம் ஆரம்பமா?
திருவள்ளூரில் அரசுப்பள்ளி மாணவர் பலி; யாராக இருந்தாலும் நடவடிக்கை- அமைச்சர் அன்பில் உறுதி!
திருவள்ளூரில் அரசுப்பள்ளி மாணவர் பலி; யாராக இருந்தாலும் நடவடிக்கை- அமைச்சர் அன்பில் உறுதி!
BJP vs DMK: திமுகவின் மெகா பிளான்... முறியடிக்க கை கோர்க்கும் அண்ணாமலை- நயினார்.! திடீர் ட்விஸ்ட்
திமுகவின் மெகா பிளான்... முறியடிக்க கை கோர்க்கும் அண்ணாமலை- நயினார்.! திடீர் ட்விஸ்ட்
IPL 2026 Unsold: பேரு பெத்த பேரு, போக இல்ல ஊரு.. ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத வீரர்கள் - சிஎஸ்கே, மும்பை ஸ்டார்ஸ்
IPL 2026 Unsold: பேரு பெத்த பேரு, போக இல்ல ஊரு.. ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத வீரர்கள் - சிஎஸ்கே, மும்பை ஸ்டார்ஸ்
Women Self Help Group: பொங்கலுக்கு குஷி தான்.! மகளிர் சுய உதவிக்குழு எதிர்பார்த்த அறிவிப்பு.! தேதி குறித்த தமிழக அரசு
பொங்கலுக்கு குஷி தான்.! மகளிர் சுய உதவிக்குழு எதிர்பார்த்த அறிவிப்பு.! தேதி குறித்த தமிழக அரசு
Porur - Poonamallee metro train: சென்னை மக்களுக்கு ஹேப்பி.! வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில்- எப்போ தொடங்குது தெரியுமா.?
சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.! வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில்- எப்போ தொடங்குது தெரியுமா.?
சிறுமிக்கு பாலியல் தொல்லை ; முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
சிறுமிக்கு பாலியல் தொல்லை ; முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Embed widget