![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
காவல்துறையை கண்டிக்கிறேன்.. கள்ளக்குறிச்சி ஸ்ரீமதிக்காக குரல் கொடுத்த விஜயகாந்த் - பரபர அறிக்கை
சின்னசேலம் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
![காவல்துறையை கண்டிக்கிறேன்.. கள்ளக்குறிச்சி ஸ்ரீமதிக்காக குரல் கொடுத்த விஜயகாந்த் - பரபர அறிக்கை DMDK leader Vijayakanth statement death of Chinnasalem school student srimathi case should transferred to CBCID காவல்துறையை கண்டிக்கிறேன்.. கள்ளக்குறிச்சி ஸ்ரீமதிக்காக குரல் கொடுத்த விஜயகாந்த் - பரபர அறிக்கை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/16/29634aa9fcdda38817f38b140750f0461657950280_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கணியாமூர் பகுதியில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளி விடுதியில் தங்கி பயின்று வந்த கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவி ஸ்ரீமதி, நேற்று முன் தினம் அதிகாலை விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும், பள்ளி மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறியும், மாணவியின் மரணத்திற்கு பள்ளி நிர்வாகமே காரணம் எனக் கூறியும் பள்ளிக்கு சீல் வைக்க வேண்டும் என்றும் மாணவியின் உறவினர்கள் சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இந்த சாலை மறியல் போராட்டத்தால் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றதால் போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்தநிலையில், சின்னசேலம் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூர் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி பயின்று வந்த கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீ மதி இரு தினங்களுக்கு முன்பு மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவி ஸ்ரீ மதி மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடந்த இரண்டு நாட்களாக போராட்டங்களில் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இந்த வழக்கை விசாரித்து வரும் காவல்துறை அதிகாரிகள் பள்ளி நிர்வாகத்திற்கு சாதகமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாணவி ஸ்ரீ மதி மர்ம மரணம் தொடர்பான வழக்கை உரிய விசாரணை நடத்தாமல் மெத்தனமாக செயல்படும் காவல்துறை அதிகாரிகளை வன்மையாக கண்டிக்கிறேன்.
மாணவி ஸ்ரீ மதி மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டுமென்றால் அவர் எப்படி இறந்தார் வேண்டும். மேலும் என்பதை தமிழக அரசு உடனடியாக கண்டறிய மாணவியின் சாவிற்கு காரணமான பள்ளி நிர்வாகிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட அந்த தனியார் பள்ளியை இழுத்து மூட வேண்டும். மாணவி ஸ்ரீ மதி போலவே ஏற்கனவே 5-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கனியாமூர் தனியார் பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதாக கூறப்படும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே மாணவி ஸ்ரீ மதி வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு உத்தரவிட வேண்டும். மாணவியை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு உரிய நீதி கிடைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)