மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
40 வயது நபரின் உடல் உறுப்புகள் தானம்; மலர் தூவி மரியாதை செய்து வழி அனுப்பி வைத்த மருத்துவர்கள் - தருமபுரியில் நெகிழ்ச்சி
இருதயம் பிரத்தேயகமாக தயார் செய்யப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனத்தில் காவல்துறை பாதுகாப்புடன் சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
![40 வயது நபரின் உடல் உறுப்புகள் தானம்; மலர் தூவி மரியாதை செய்து வழி அனுப்பி வைத்த மருத்துவர்கள் - தருமபுரியில் நெகிழ்ச்சி Dharmpuri news doctors and nurses showered flowers and sent the organ donors on their way in Krishnagiri TNN 40 வயது நபரின் உடல் உறுப்புகள் தானம்; மலர் தூவி மரியாதை செய்து வழி அனுப்பி வைத்த மருத்துவர்கள் - தருமபுரியில் நெகிழ்ச்சி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/03/7178fda0b17a70d9d57058566d3759941696318924162113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
உறுப்புக்கள் தானம் - மலர் தூவி மரியாதை
தருமபுரி: விபத்தில் படுகாயம் அடைந்து மூளைச்சாவு அடைந்த, மத்தூரை சேர்ந்த நபரின் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. மருத்துவமனையில் நீண்ட வரிசையில் நின்று மருத்துவர் மற்றும் செவிலியர்கள் மலர் தூவி மரியாதை செய்து வழி அனுப்பி வைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த கோத்தகோட்டா கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் (40) என்பவர் விபத்தில் படுகாயம் அடைந்துள்ளார். இதனால் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு மூளை செயல் இழந்தது தெரியவந்தது. பின்னர் உறுதி செய்து கொண்ட மருத்துவ குழுவினர் அவர்களது உறவினர்களுக்கு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கோவிந்தராஜ் உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க உறவினர் முன் வந்தனர்.
![40 வயது நபரின் உடல் உறுப்புகள் தானம்; மலர் தூவி மரியாதை செய்து வழி அனுப்பி வைத்த மருத்துவர்கள் - தருமபுரியில் நெகிழ்ச்சி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/03/f3e78a12932d557430bb77a1578339ae1696319595546113_original.jpg)
இதனை தொடர்ந்து தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ குழுவினர், உடல் உறுப்புக்கள் தானமாக பெற்றனர். முதலில் தானமாக பெறப்பட்ட இருதயம் பிரத்தேயகமாக தயார் செய்யப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனத்தில் காவல்துறை பாதுகாப்புடன் சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் அவரது உடலில் இருந்து இரண்டு சிறுநீரகங்களில், ஒன்று சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் மற்றொரு சிறுநீரகம் கோவை மருத்துவமனைக்கும், கல்லீரல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. மேலும் இரண்டு கண்கள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே கண் பார்வை வேண்டி பதிவு செய்தவர்களுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
![40 வயது நபரின் உடல் உறுப்புகள் தானம்; மலர் தூவி மரியாதை செய்து வழி அனுப்பி வைத்த மருத்துவர்கள் - தருமபுரியில் நெகிழ்ச்சி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/03/baf7ecc9caf3a1b307a309958e68866e1696319629043113_original.jpg)
இதனை தொடர்ந்து பிரேத பரிசோதனை முடிந்தவுடன் கோவிந்தராஜன் உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்பொழுது பிரேத பரிசோதனை கூடம் அருகே மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள், உடலுக்கு மலர் மாலை வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனை அடுத்து பிரேத பரிசோதனை கூடத்தில் இருந்து அமரர் உறுதிக்கு எடுத்துச் செல்கின்ற வரை, சுமார் 500 மீட்டர் தொலைவுக்கு இருபுறமும், அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், அதேப்போல் பயின்று வருகின்ற மருத்துவ, செவிலிய மாணவ, மாணவிகள் நீண்ட வரிசையில் நின்று, இறந்தாலும், சில உயிர்களை வாழ வைக்கு உடல் உறுப்புகளை தானம் செய்த கோவிந்தராஜனின் உடலுக்கு மலர் தூவி மரியாதை செய்து, வழி அனுப்பி வைத்தனர்.
![40 வயது நபரின் உடல் உறுப்புகள் தானம்; மலர் தூவி மரியாதை செய்து வழி அனுப்பி வைத்த மருத்துவர்கள் - தருமபுரியில் நெகிழ்ச்சி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/03/819d4a4956637039bad64ca72f7036091696319669380113_original.jpg)
மேலும் இதயம் அறுவை சிகிச்சை செய்தவுடன், போதிய பாதுகாப்பு வசதிகள், ஏற்படுத்தப்பட்டு, காவல் துறையினர் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸில் சென்னைக்கு விரைவாக கொண்டு செல்லப்பட்டது. தமிழக அரசு உடல் உறுப்பு தானம் செய்பவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் வெளியிட்ட அறிவிப்புகள் இனி வரும் காலங்களில் பல உயிர்களை காப்பாற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion