மேலும் அறிய

பொங்கல் திருநாளையொட்டி வண்ண கோலப் பொடிகள் தயாரிக்கும் பணிகள் மும்முரம்

’’ஆண்டுதோறும், 5 டன் கலர் பொடி மட்டுமே உற்பத்தி செய்யப்படும், ஆனால் பெண்கள் மத்தியில் கலர் பொடிக்கு நல்ல வரவேற்பு உள்ளதால் இந்தாண்டு கலர் பொடி உற்பத்தி கூடுதலாக தயாரித்து வருகின்றனர்’’

மார்கழி மாதம் முழுவதும்  பெண்கள் அதிகாலையில் எழுந்து வாசலில் வண்ண கோலமிட்டு கடவுளை வழிபாடுபவர். இதனை தொடர்ந்து தை மாதத்தில் வரும் தமிழகர்களின் பாரம்பரிய திருவிழாவான தைப்பொங்கல் நாளன்று அதிகாலையில் பெண்கள்,பல வண்ண கோலமிட்டு, பொங்கலிட்டு சூரியனுக்கு படைத்து வழிபடுவது வழக்கம். இந்நிலையில் மார்கழி மற்றும் பொங்கல் பண்டிகையயொட்டி அனைவருடைய மனதையும் சுண்டி இழுக்கும் வகையில் தருமபுரியில், வண்ண கோலப்பொடிகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. 

பொங்கல் திருநாளையொட்டி வண்ண கோலப் பொடிகள் தயாரிக்கும் பணிகள் மும்முரம்
தருமபுரி, ஏ.கொல்லஅள்ளி, பழையதர்மபுரி, குண்டல்பட்டி உள்ளிட்ட இடங்களில் அரவை ஆலைகளில் பச்சை, மஞ்சள், சிவப்பு, நீலம் உள்ளிட்ட 10 வகையான நிறங்களில் கோலப்பொடிகள் மரவள்ளி கிழங்கு மாவு மூலம் தயாரிக்கபடுகிறது.தருமபுரியில் தயாரிக்கப்படும் கலர்கோலப்பொடி உள்ளூர் மற்றும் பெங்களூர், சேலம், சென்னை, கோவை போன்ற  பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பபடுகிறது.  ஆண்டுதோறும், 5 டன் கலர் பொடி மட்டுமே உற்பத்தி செய்யப்படும், ஆனால் பெண்கள் மத்தியில் கலர் பொடிக்கு நல்ல வரவேற்பு உள்ளதால் இந்தாண்டு கலர் பொடி உற்பத்தி கூடுதலாக தயாரித்து வருகின்றனர்.

பொங்கல் திருநாளையொட்டி வண்ண கோலப் பொடிகள் தயாரிக்கும் பணிகள் மும்முரம்
 
ஒரு கிலோ கலர் பொடி 30 ரூபாயில் இருந்து 40 ரூபாய் வரை  விற்பனை செய்யப்படுகிறது. மார்கழி மாதம் துவங்கி உள்ளதால் கலர் பொடிகள் பேக் செய்து அதனை விற்பனைக்கு அனுப்பும் பணி துவங்கி உள்ளது. மேலும் பொங்கல் திருவிழா நெருங்கி வருவதால்  கலர் கோலப்பொடிகள் தயாரித்து அதை உலர வைக்கும் பணியில் இரவு பகலாக தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.

தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடும் பனிபொழிவு வாகன ஒட்டிகள் அவதி
 
தமிழ் மாதத்தில் கார்த்திகை மாதம் தொடக்கத்தில் இருந்து மாசி மாதம் வரை நான்கு மாதங்கள் பனி பொழிவு அதிகமாக காணப்படும். ஆனால் கார்த்திகை மாதம் தொடங்கியும் சில நாட்களில் மழை பொழிவு இருந்ததால், பனி வரவில்லை.   தொடர்ந்து மழை நின்றதால் பனி பொழிய தொடங்கியுள்ளது. இந்நிலையில் இன்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிபட்டி, அரூர் நகரம், மொரப்பூர், தீர்த்தமலை, கோபிநாதம்பட்டி கூட்ரோடு, பெத்தூர், கொளகம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கடும்  பனிபொழிவுகள் ஏற்பட்டது. 
 

பொங்கல் திருநாளையொட்டி வண்ண கோலப் பொடிகள் தயாரிக்கும் பணிகள் மும்முரம்
 
அதிகாலை போலவே காலை 8 மணி ஆகியும், பனி மூட்டம் குறையவில்லை.  இன்று காலை  சாலையில் எதிரே வரும் ஆட்கள் தெரியாத அளவிற்கு பனி பொழிவு அதிகமாக காணப்படுகிறது. இதனால் சாலையில் வரும் வாகனங்கள் முகப்பு விளக்கு எரிந்தவாறு சென்றன. இந்த கடும் பனி மூட்டம் காரணமாக  வாகன ஒட்டிகள் சிரமத்திற்கு உள்ளாயினர். நேற்று முழுவதும் வெயில் அடித்த நிலையிலும், லேசான பனி பொழிவும், குளிரும் பரவலாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Mamata Banerjee - NEET: விஸ்வரூபம் எடுக்கும் நீட் பிரச்னை: பிரதமருக்கு கடிதத்தை பறக்கவிட்ட முதலமைச்சர் மம்தா
Mamata Banerjee - NEET: விஸ்வரூபம் எடுக்கும் நீட் பிரச்னை: பிரதமருக்கு கடிதத்தை பறக்கவிட்ட முதலமைச்சர் மம்தா
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Madurai HC: சிறு, சிறு  அடிப்படை வசதி கோரி பொது நல மனு தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் - நீதிபதிகள்
சிறு, சிறு  அடிப்படை வசதி கோரி பொது நல மனு தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் - நீதிபதிகள்
Embed widget