மேலும் அறிய

Paddy: தருமபுரியில் 7 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மாயமா..?.. கேள்வி எழுப்பும் இபிஎஸ், அன்புமணி - ஆட்சியர் விளக்கம்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக திறந்தவெளி நெல் சேமிப்பு  கிடங்கிலிருந்து 7 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மாயமானதாக பல்வேறு விதமாக தகவல்கள் பரவி வந்தது.

தருமபுரி:  மாவட்ட ஆட்சியர் இல்லம் பின்புறம் உள்ள திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கிலிருந்து நெல் எதுவும் மாயமாகவில்லை என  மாவட்ட ஆட்சியர் சாந்தி விளக்கம் அளித்துள்ளார்.

தருமபு மாவட்ட ஆட்சியர் இல்லம் பின்புறம் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக திறந்தவெளி நெல் சேமிப்பு  கிடங்கிலிருந்து 7 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மாயமானதாக பல்வேறு விதமாக தகவல்கள் பரவி வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

தருமபுரியில் அரசு குடோனில் வைத்திருந்த 7 ஆயிரம் டன் நெல் மூட்டை மாயமாகி உள்ளதாக செய்தித்தாள்களில் வருவது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும், நெல் மூட்டைகளை மீட்க உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

மேலும், தருமபுரி அரசு கிடங்கிலிருந்து 7,000 டன் நெல் மூட்டைகள் மாயமானது எப்படி?. விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தருமபுரி திறந்த வெளி நெல் குடோனில் சுமார் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம்.? 
 
தருமபுரி மாவட்டத்தில் 80க்கும் மேற்பட்ட நெல் அரவை முகவர்களின் கோரிக்கையின் காரணமாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் பங்களா பின்புறம் திறந்தவெளி நெல் குடோன் அமைக்கப்பட்டு இக்குடோனுக்கு தஞ்சை, மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து சரக்கு ரயில் மூலம் தருமபுரி ரயில்வே நிலையத்திற்கு நெல் கொண்டு வரப்பட்டு லாரிகள் மூலம் மாவட்ட ஆட்சியர் இல்லம் பின்புறம் உள்ள திறந்தவெளி நெல் குடோனில் இருப்பு வைக்கப்படுகிறது.  இந்நிலையில் குடோனில் இருப்பு வைக்கப்பட்ட மொத்த நெல் மூட்டைகளில் பல டன் நெல் மூட்டைகள் மாயமானதாக நுகர் பொருள் வாணிபக் கழக விஜிலென்ஸ் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனை எடுத்து விஜயலன்ஸ் பிரிவினர் தருமபுரி திறந்தவெளி நெல் குடோனில் ஆய்வு மேற்கொண்டனர் இந்த ஆய்வில் 7000 டன் நெல் மூட்டைகள் குறைவாக உள்ளதை கண்டுபிடித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
 
இதுகுறித்து தருமபுரி நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம் கேட்டபோது திறந்தவெளி குடோனுக்கு கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து 22 ஆயிரம் டன் நெல்  மூட்டைகள் வந்துள்ளது.  போதிய பணியாளர்கள் இல்லாததால் லோடுமேன்கள் நெல் மூட்டைகளை முறையாக அடுக்க முடியவில்லை நெல் மூட்டைகள் குறைய  வாய்ப்பில்லை என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தல்படியே 7000 டன் நெல் மூட்டைகள் அரவைக்கு அனுப்பப்பட்டுள்ளது.  மீதமுள்ள 15 டன் நெல் மூட்டைகளும் ஒரு மாதத்துக்குள் அரவைக்கு அனுப்ப  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அலுவலர்கள் தெரிவித்தனர்.
 
மாவட்ட ஆட்சியர் விளக்கம்
 
தருமபுரி மாவட்ட ஆட்சியர் இல்லம் பின்புறம் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக திறந்தவெளி நெல் சேமிப்பு  கிடங்கிலிருந்து 7 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மாயமானதாகவும், 7 ஆயிரம் மூட்டைகள் மாயமானதாகவும், பல்வேறு விதமாக தகவல்கள் பரவி வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர்  சாந்தி நெல் சேமிப்பு கிடங்கினை அரசு அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்,. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் விளக்கமளித்த ஆட்சியர் சேமிப்பு கிடங்கிலிருந்து நெல் எதுவும் மாயமாகவில்லை என்றார்.
 


Paddy: தருமபுரியில் 7 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மாயமா..?.. கேள்வி எழுப்பும் இபிஎஸ், அன்புமணி - ஆட்சியர் விளக்கம்

மேலும், சேமிப்பு கிடங்கில் மூட்டைகள் சரிந்திருக்கிறது அதனை சரிசெய்யும் பணி நடைபெற்று வருவாதகவும், 7 ஆயிரம் டன் நெல் மாயமாகி இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் சேமிப்பு கிடங்கிலிருந்து நெல் எதுவும் மாயாகவில்லை எனவும், அதிகாரிகள் ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டிருப்பதாகவும், நூறு சதவீத முழுமையான விசாரணை நடத்தப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், “டெல்டா மாவட்டங்களிலிருந்து  11 வேகன்கள் மூலம் 22 ஆயிரத்து இருநூற்று எழுபத்து மூன்று மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டது. அதில் 7 ஆயிரத்து 174 மெட்ரிக் டன் அரவை ஆலைகளுக்கு நெல் மூட்டைகள் அனுப்ப பட்டிருக்கிறது.  மீதம் 15 ஆயிரத்து 98 மெட்ரிக் டன் இருப்பு உள்ளதாகவும், இருப்பு முழுவதும் அரவைக்கு அனுப்பிய பிறகு ஆய்வுக்குட்படுத்துபட்ட பிறகு முழுமையான விபரங்கள் தெரியவரும்” என்றார்.


Paddy: தருமபுரியில் 7 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மாயமா..?.. கேள்வி எழுப்பும் இபிஎஸ், அன்புமணி - ஆட்சியர் விளக்கம்

அதனைத் தொடர்ந்து தற்பொழுது குடோனில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் அனைத்தும் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget