மேலும் அறிய

Devasahayam Pillai: தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கினார் போப்! வாடிகனில் ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து..

அவரை சுடும்போது மலையில் இருந்து விழுந்த ஒரு கல் பாறையில் அடித்து மணி சத்தத்தை உண்டாக்கியதாக கூறப்படுகிறது. இன்றும் அந்த இடத்தில் அந்த பாறையும் கல்லும் வைக்கப்பட்டுள்ளது.

தேவசகாயம் பிள்ளை புனித பட்டம் பெற தகுதியானவர் என கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட நிலையில், அவருக்கு கத்தோலிக்க திருச்சபையில் இத்தாலியிலுள்ள வாடிகன் நகரிலுள்ள ரோம்  நகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் போப் பிரான்சிஸ், இன்று புனிதர் பட்டம் வழங்கினார். கடந்த 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மறைசாட்சி தேவசகாயத்தை புனிதராக போப்பாண்டவர் ஏற்றுக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தமிழ்நாட்டின் கன்னியாகுமரியைச் சேர்ந்த தேவசகாயம், 1712ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி பிறந்தார். தேவசகாயம் பிள்ளை என்ற பெயரில் இந்து குடும்பத்தில் பிறந்த இவர் கிறிஸ்துவ மதத்தின் மீது கொண்ட ஈர்ப்பால் கிறிஸ்துவ மதத்திற்கு மாறி தன் பெயரை லாரன்ஸ் என்று மாற்றிக்கொண்டவர். இவர் 1749ஆம் ஆண்டு கிறிஸ்துவ மதத்தில் தன்னை இணைத்து கொண்டார். சமூகத்தில் நிலவிய சாதிய வேறுபாடுகளுக்கு எதிராக இவர் குரல் கொடுத்தார். அத்துடன் இவர் சாதிய சமுத்துவத்தை போதனை செய்து வந்தார். இவர் தக்கலை அருகே புலியூர்குறிச்சியில் உள்ள அரண்மனையில் வீரர்களுக்கு போர் பயிற்சி, ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வந்தார். அங்கு பணியாற்றிய நீலகண்டபிள்ளைக்கும், டிலனாய்க்கும் இடையே நெருங்கிய பழக வாய்ப்பு கிடைத்தது. இயேசு கிறிஸ்துவின் வரலாறுகளை டிலனாயிடம் இருந்து கேட்டு தெரிந்த நீலகண்டபிள்ளை மனம் கவரப்பட்டார்.

Devasahayam Pillai: தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கினார் போப்! வாடிகனில் ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து..

இதை தொடர்ந்து, அன்றைய பாண்டிய நாட்டின் இடமான நெல்லை மாவட்டம் காவல்கிணறு பகுதியில் இருந்த தேவாலயத்தில் திருமுழுக்குப் பெற்று தேவசகாயம் பிள்ளை என்று தன் பெயரை மாற்றிக் கொண்டார். மதம் மாறியதால் அவர் பணியாற்றி வந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மிகப்பெரிய நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டு அவரின் பணிகள் பறிக்கப்பட்டது. 

இதன்காரணமாக இவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்ட அவர், அதை பொருட்படுத்தாமல் இறைப் பணியை முன்னிலை படுத்தியதால் அவர் ஆரல்வாய்மொழி அருகே உள்ள காற்றாடி மலைதட்டு பகுதியில் சிறைவைக்கப்பட்டு, 1752ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். அவரை சுடும்போது மலையில் இருந்து விழுந்த ஒரு கல் பாறையில் அடித்து மணி சத்தத்தை உண்டாக்கியதாக கூறப்படுகிறது. இன்றும் அந்த இடத்தில் அந்த பாறையும் கல்லும் வைக்கப்பட்டுள்ளது, அதனை அடித்தால் மணி சத்தமும் கேட்கிறதாம். அதனால் அந்த இடத்திற்கு மணியடிச்சான் பாறை என்று பெயர் வைத்து மக்கள் மணி அடித்து வேண்டிக்கொள்கிறார்கள். கொல்லப்பட்ட இவருடைய உடல் கன்னியாகுமாரி மாவட்டம் கோட்டாறு சவேரியார் தேவாலயத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டிருந்தது.

Devasahayam Pillai: தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கினார் போப்! வாடிகனில் ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து..

இவருடைய இறப்பிற்கு பின் இவருக்கு இறையூழியர் என்ற பட்டம் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இவருக்கு மறைசாட்சியாக  அறிவிக்கப்பட்டார். முக்திப்பேறு பெற்றவர் என்ற பட்டமும் இவருக்கு வழங்கப்பட்டது. இவருக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதற்கான ஆவணங்கள் சேகரித்து வாடிகனுக்கு அனுப்பப்பட்டது. அந்த ஆவணங்களை ஆய்வு செய்த வாடிகனில் இருந்து இவருக்கு புனிதர் பட்டம் வழங்க அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி இன்று மதியம் 1.30 மணிக்கு மறைச்சாட்சி தேவசகாயத்துக்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்கினார். இதன்மூலம் வரலாற்றில் முதன் முறையாக தேவாலயத்தின் உறுப்பினர் அல்லாத ஒருவருக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டு உள்ளது.  

இந்நிலையில், ரோமில் தேவசகாயம் பிள்ளைக்கு, புனிதர் பட்டம் வழங்கப்படும் நிலையில், அங்கு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த ஒருவர் புனித பட்டம் பெறுவது வரலாற்றிலேயே முதல்முறை என்பதால், இது அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளது.அவரை கவுரவப்படுத்தும் வகையில், தமிழக அரசு சார்பில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் ரோம் சென்றுள்ளார். மேலும், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டி. மனோதங்கராஜ், சிறுபான்மை நலத்துறை தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோரும் வாடிகனில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
Aadhaar Mobile No.: அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
TN Weather Report: டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
TN School Leave: தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
Embed widget