மேலும் அறிய

Anbumani: 'ஸ்டெர்லைட்டை விட 100 மடங்கு பிரச்சினை.. அனைவருக்குமே என்.எல்.சி.யால் சிக்கல்' - அன்புமணி ராமதாஸ்

என்.எல்.சி விவகாரத்தில் தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்கள் பல்வேறு கருத்துகளைக் கூறிவருகின்றனர்.

என்.எல்.சி நிலம் கையகப்படுத்துவதற்கு எதிரான கருத்தரங்கம் உழவர் பேரியக்கம் சார்பில் நெய்வேலியில் நடைபெற்றது. அந்த கருத்தரங்கத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது, "15, 20 வருடங்களுக்கு முன்பு நிலம் கொடுத்தவர்களுக்கு விலை கொடுக்க வேண்டும் என்பதுதான் பா.ம.க.வின் கொள்கையாகவும் இருந்தது. அப்பொழுது எங்களுக்கு புரியவில்லை, இப்பொழுது தான் எங்களுக்கு புரிய வந்திருக்கிறது. அன்றைக்கு எங்களுக்கு தெரிந்ததெல்லாம் நிலம் கொடுத்து விட்டார்கள், அவர்களுக்கு நல்ல வேலை கொடுக்க வேண்டும் என்பது தான்.

ஒன்றரை லட்சம் ரெண்டு லட்சம் என்றார்கள் நாங்கள் ஐந்து லட்சம், ஆறு லட்சம் கொடுக்க வைத்தோம். அன்று நான் அமைச்சராகவும் இருந்தேன், அன்று எனக்கு இவ்வளவு பெரிய பிரச்சனைகள் வரும் என்று தெரியவில்லை, இன்று எனக்கு தெரிந்திருக்கிறது, ஆனால் இன்றைக்கு, நாளை என்ன பிரச்சனை வரும் என்பது பலருக்கு புரியவில்லை, சில பேர் புரிந்த மாதிரி நடந்து கொள்கிறார்கள், சில பேர் புரிந்தும் புரியாத மாதிரி நடந்து கொண்டிருக்கிறார்கள். இங்கு அனைத்து சங்கங்களையும் அழைத்திருக்கிறோம். இவங்க யாருமே எங்களுக்கு பிரச்சனை இல்லை என்று ஒதுங்க முடியாது. அனைவருக்கும் என்.எல்.சி நிறுவனத்தால் பிரச்சனை இருக்கிறது. 

சட்டமன்றத்தில் தொழிற்துறை அமைச்சர் ஒரு ஏக்கருக்கு 25 லட்சம் தருவதாக சொல்கிறார். 23 லட்சம் தருவதாக சொன்னதை, 25 லட்சம் தருவதாக சொல்கிறார். 1800 பேருக்கு வேலை தருவதாக அவர் சொல்லவில்லை, 1800 பேருக்கு வேலை இருக்கிறது, அதற்கு போட்டி போட வேண்டும், அப்படி என்ன வேலை என்றால்? தின கூலி வேலை தான் அந்த வேலை. என் முன்னோர்கள் வாழ்ந்த மண். இதை விட்டுவிட்டு நான் எங்கே செல்ல வேண்டும்? 

15 ஆண்டுகளுக்கு முன்பு நானும் இதே கோரிக்கை தான் வைத்தேன். இன்று எனக்கு தெரிகிறது. 91 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் எடுக்கப் போகிறார்கள் 91 ஆயிரம் ஏக்கர் என்றால் நெய்வேலியில் இருந்து கொள்ளிடம் வடக்கு கரை வரை உள்ள இடம் அழிய போகிறது.

25 லட்சம் நிலத்திற்கு பணம் கொடுக்கிறோம், 1800 வேலை கொடுக்குறோம் என்கிறார்கள். நிலம் வைத்திருப்பவர்களுக்கு இதனை கொடுப்பார்கள். ஐந்து சதவீதம் மக்கள் மட்டுமே நிலம் வைத்திருக்கிறார்கள். நிலம் இல்லாதவர்களுக்கு என்ன செய்யப் போகிறார்கள்? 

என்எல்சி ஒன்று மற்றும் இரண்டு சுரங்க விரிவாக்கத்திற்காக 13,000 ஏக்கர் நிலங்கள் விரைவில் எடுக்கப்பட இருக்கிறது. புதியதாக மூன்றாவது சுரங்கத்திற்கு 12000 ஏக்கர், மொத்தம் 25000 ஏக்கரை கைப்பற்ற இருக்கிறார்கள். சட்டமன்றத்தில் ஒன்று பேசிக்கொண்டும், வெளியில் ஒன்று செய்து கொண்டும் இருப்பது சரியில்லை.

நெய்வேலி இல்லை என்றால் தமிழ்நாடு இருண்டு விடும் என்கிறார்கள். யாரை ஏமாற்ற சொல்கிறார்கள்? தமிழ்நாட்டின் அன்றாடம் தேவை 18 ஆயிரம் மெகாவாட், என் எல் சி நிறுவனம் கொடுப்பது 800 லிருந்து ஆயிரம் மெகாவாட் மட்டுமே.

 காவல்துறையை வைத்து மிரட்டுகிறார்கள், ராணுவத்தை வேண்டுமானாலும் கூட்டி வாருங்கள், எங்களை எதுவும் பண்ண செய்ய முடியாது. நாங்கள் தற்போது அமைதியாக பேசிக் கொண்டிருக்கிறோம். அப்படியும் எங்களுக்கு போக தெரியும். உங்களுடைய உணர்வு தெரிகிறது, பிரச்சனை உங்களுக்கு புரிகிறது. இது விவசாயிகள் பிரச்சனை அல்ல. நம் மண் சார்ந்த பிரச்சனை. நம் எல்லோருடைய பிரச்சினை என்பது உங்களுக்கு புரிகிறது. வாழ்வாதாரப் பிரச்சினை என்பது உங்களுக்கு தெரிகிறது.

பழுப்பு நிலக்கரியை எரிப்பதன் மூலம் சல்பர் டைஆக்சைடு, கார்பன் டைஆக்சைடுபோன்ற மோசமான வாயுக்கள் தான் வெளிவரும். இதன் மூலம் ஆஸ்துமா கேன்சர் போன்ற நோய்கள் தான் அதிகமாகும். பழுப்பு நிலக்கரி என்பது தரம் குறைந்த நிலக்கரி. மக்கள் துணிச்சலாக இருக்கிறார்கள். காவல்துறைக்கு எல்லாம் அவர்கள் பயப்பட மாட்டார்கள். இது  வருங்கால பிரச்சனை, அதற்காக நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து களமிறங்க வேண்டும்.

என் எல் சி க்கு நிலம் கொடுத்தவர்கள் எல்லாம் காலநிலை அகதிகள் தான். ஸ்டெர்லைட் ஸ்டெர்லைட் என்று போராடி மூட வைத்தோம், அதனைவிட 100 மடங்கு மோசமான பிரச்சனை என் எல் சி யால்  நடந்து கொண்டிருக்கிறது. உங்களுடைய ஆதரவு மட்டுமல்ல, பங்களிப்பும் வேண்டும். நீங்கள் அனைவரும் வரவேண்டும்" 

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்.. 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்.. 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
Renault Triber: பட்ஜெட் விலையில் 7 சீட்டர் கார்.. Renault Triber காரின் விலையும், மைலேஜும் எப்படி?
Renault Triber: பட்ஜெட் விலையில் 7 சீட்டர் கார்.. Renault Triber காரின் விலையும், மைலேஜும் எப்படி?
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்.. 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்.. 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
Renault Triber: பட்ஜெட் விலையில் 7 சீட்டர் கார்.. Renault Triber காரின் விலையும், மைலேஜும் எப்படி?
Renault Triber: பட்ஜெட் விலையில் 7 சீட்டர் கார்.. Renault Triber காரின் விலையும், மைலேஜும் எப்படி?
MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Udhayanidhi:
Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
Udhayanidhi:
Udhayanidhi: "2026 தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கோரிக்கை
IND Vs SA 3rd T20: இந்திய பவுலர்கள் ஆதிக்கம்; 3-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி; 2-1 என தொடரில் முன்னிலை
இந்திய பவுலர்கள் ஆதிக்கம்; 3-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி; 2-1 என தொடரில் முன்னிலை
Embed widget