மேலும் அறிய

இது இல்லைன்னா.... ‛கரண்ட் கட்’ ; மின்வாரியம் அறிவிப்பு

உயிர்க்காக்கும் RCD கருவியை பொருத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது

தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் சில புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், கோயில்கள், பள்ளிகள், கல்லூரிகளில் உள்ள ஒரு முனை மற்றும் மும்முனை மின்சார இணைப்புகளில் RCD - (residual-current device) என்ற உயிர் காக்கும் சாதனத்தை கட்டாயம் பொருத்த வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது. மின் அதிர்வை தவிர்த்து உயிரினங்களை காப்பதற்காக இந்த சாதனத்தை பொறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மின்சார  ஒழுங்கு முறை ஆணையம் , மின் பகிர்மான விதி தொகுப்புகளில் புதிய விதிகளை நடைமுறைப்படுத்தி உள்ளது. 

இது இல்லைன்னா.... ‛கரண்ட் கட்’ ; மின்வாரியம் அறிவிப்பு

எலெக்ட்ரிக் ஷாக்கை தவிர்த்து மனித உயிர்களை காக்கும் பொருட்டு அதனுடைய முன் கசிவை உணரும் திறன் 30 மில்லி ஆம்பியருக்கு மிகாமல் இருக்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் கொடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

10 கிலோ வாட்டிற்கு மேல் மின் சாதனங்களை பொருத்தி இருக்கும் பேரங்காடிகள், வணிக வளாகங்கள், மருத்துவக் கூடங்கள், கிடங்குகள், பெரிய தொழிற்சாலைகள் போன்ற உபயோகத்திற்கான மின் இணைப்புகளில் மின் கசிவால் ஏற்படும் தீ விபத்தை தடுக்கும் பொருட்டும் அந்தந்த வளாகங்களில் மின் இணைப்பு மொத்தமாக ஆரம்பிக்கும் இடத்தில் 300 மில்லி ஆம்பியர் அளவிற்கான மின்கசிவை உணரும் திறன் கொண்ட RCD சாதனத்தை பொறுத்த வேண்டும்.

தேவையின்றி அடிக்கடி இந்த சாதனம் செயல்பட்டு தொந்தரவு கொடுப்பதை தடுக்கும் வகையில், மின் பளுவின் அளவு மற்றும் கட்டிடத்தின் தளங்கள் மற்றும் அறைகளின் பாகுபாடு போன்றவற்றை கருத்தில் கொண்டு, அதற்கேற்றவாறு பிரிக்கப்பட்ட ஒவ்வொரு மின் சுற்றிலும் தனித்தனியாக RCD சாதனத்தை பொருத்த வேண்டும்.

அத்தகைய அமைப்பினால் அந்தந்த கட்டிடப் பகுதியில் உள்ள மனிதர்கள். அந்தந்த பகுதியில் உண்டாகும் மின் பழுது காரணமாக ஏற்படும் மின் அதிர்ச்சியில் இருந்து காக்கப்படுவார்கள். புதிதாக மின் இணைப்பு கோரும் அனைத்து விண்ணப்பதாரர்களும் மேற்கண்ட உயிர்காக்கும் சாதனத்தை மின் இணைப்பு கோரும் கட்டிடத்தில்  RCD கருவியை நிறுவி அதை விண்ணப்ப படிவத்தில் உறுதியளிக்க வேண்டும்.RCD சாதனத்தை பொறுத்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இல்லையேல் மின் இணைப்பு வழங்கப்பட மாட்டாது என தமிழ்நாடு மின்சார வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மின்விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை அறவே தடுக்க வேண்டும் என்பது இந்த ஆணையத்தின் நோக்கமாகும். சட்டப்பூர்வ வழிமுறைகளை அனைத்து பொதுமக்களும் இளைய தலைமுறையினருக்கும் எடுத்துச் சென்று மின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. தேவை அறிந்து அந்த கருவியை பொருத்த அனைவரும் முன்வர வேண்டும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
ABP Premium

வீடியோ

Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Ramadoss Vs Anbumani: “நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
“நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
விஜய்க்காக ஒட்டுமொத்தமாக களத்தில் இறங்கிய காங்கிரஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
விஜய்க்காக ஒட்டுமொத்தமாக களத்தில் இறங்கிய காங்கிரஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
Embed widget